Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம் , தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்துவிட்டதாக ,சிங்கள கூலிகளினால் முன்னெடுக்கப்படும்,
சுவிசில் மாபெரும் போராட்டம்
இந்த விஷம பரப்புரைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுவிசில் மாபெரும் போராட்டம் என்று ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை காண்பிக்குமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளார்கள் .
அதன் அடிப்படையில் அந்த மண்டபம் முன்பாக மக்கள் அணிதிரண்டு தமது போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் .
சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில்
இதனால் சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .
கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மக்களை அங்கே அணிதிரளுமாறு வேண்டுதல் விடுத்துள்ளனர் .
மக்களே ஒன்றாக அணிதிரண்டு வருக ,கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு களத்தில் குதிக்க .புரட்சி வெடிக்க .
சிங்கள கூலிகளை ஓட விரட்டுவோம். தமிழர் பலத்தை நிறுத்தி மக்கள் எழுச்சியை காட்டுவோம் .
பகை விலக படை எடு தமிழா .

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது
காதலனால் கழுத்தறுத்து கொலை
காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு ,புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில்
ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச்
சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில்
கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து ,ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டி ஒன்று
முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை ,நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில்
பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்து கொலை
அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு ,வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய
வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்த முடிவு
செய்துள்ளதா என்பது குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.
கேள்வி – கடந்த சில நாட்களாக அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
“அவற்றைக் மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை.
சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்
திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.
எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.
இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.
இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ,2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட
விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.
இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின்
அவசரகாலச் சட்ட பிரகடனம்
அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர்
இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து ,பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம்
கிளம்பிய கூலிகுழு தலைவர் வீரமரணம் ,தலைவர் வீரமரணம் கிளம்பிய கூலிக்குழு நடவடிக்கைகள் சர்வதேச பரப்பில் தமிழர்கள் மத்தியில் சலசலப்பை சாட்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள கூலிகள்
உலகத் தமிழர்களின் உயிர் நாடியாகவும் ,தேசத் தந்தையாகவும், தேசியத்தின் தலைவராகவும் விளங்கிய
மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் ,வீர மரணம் அடைந்து விட்டார் என ,முன்னாள் போராளிகள் என விளைபோன சிங்கள கூலிகள் கூவி வருகின்றனர்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு
கடந்த 16 வருடங்களாக தலைவர் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக பேச மறந்த கும்பல் திடீரென கிளம்பி இருக்கிறது.
இவ்விதம் கிளம்பிய இந்த கும்பல் தலைவருக்கு வரும் மாதம் விளக்கு ஏற்ற வேண்டுமென கூறி வருகிறது.
அவ்விதம் கூறி வருகிற இவர்கள் எவ்விதம் அங்கிருந்து தப்பினார்கள், தலைவர் எப்பொழுது இறந்தார், எந்த பகுதியில் இறந்தார், எந்த
சண்டைக்களத்தில் எவ்வாறு இறந்தார் என்ற கேள்விகள் எதற்கும் பதில் தர மறுத்து வருகிறது .
முகமூடிகளை அணிந்து தமது முகங்களை காண்பிக்க மறக்கிற ,இந்த சிங்கள கூலிகள் ,தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் ஒளிந்து இருந்து கூவி வருகிறது .
சர்வதேச புலம்பெயர் மக்களுடைய கவனத்தை திசை திருப்பவும் ,மனித உரிமை பேரவையில் ,இலங்கையில் இனப்படுகொலை தொடர்பாக
விடயத்தை திசை திருப்பவும், சிங்கள புலனாய்வு இறக்கி விடப்பட்ட ,முன்னாள் போராளிகள் விலை போன கூலிகளாகவே இவர்கள் காட்டி கொடுக்கிறது.
ஆகவே மக்கள் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அந்த மண்டபங்களில் கூடி இவர்களுக்கு பூக்கள் மோதகம் வடை பொங்கி படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்பு சாராக பிளந்து இவர்களின் வாய்களுக்கு ஊற்றி அவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படும் எனவும் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இறந்து போனதாக கூறப்படும் தலைவர் தொடர்பான புகைப்பட ஆதாரங்களோ காணொளி ஆதாரங்களோ அல்லது அவரது மரணச் சான்றிதழ் ஆதாரமாக காண்பிக்க மறுக்கும் இவர்கள்,
தற்பொழுது தலைவர் இறந்துவிட்டார் என்ற ஒற்றை சொல்லை மட்டும் முகமூடிகள் போட்டு உரைப்பதை வைத்து எவ்வாறு இவர்களுக்கு கதையை ஏற்க முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற்னர் .
கனடா பெண் விமானநிலையத்தில் கைது
கனடா பெண் விமானநிலையத்தில் கைது
கனடா பெண் விமானநிலையத்தில் கைது ,கனடா நாட்டு பொன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .
போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில்
போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில் கனடிய வதிவிட உரிமையை கொண்ட பெண் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூதனமான முறையில் தனது பயண போதிக்குள் போத வஸ்து கடத்தி வந்த பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹரிஷ் போதவஸ்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து
இத்தகைய பல மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து இவர் அங்கிருந்து எப்படி நூதன முறையில் கடத்தி வந்தார் என்கின்ற விடயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் கடத்தல் நடவடிக்கை மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் இருந்து இலங்கை வந்த கனடிய பெண் பயண பொதிக்குள் 181 மில்லியன் ரூபாய் பெறுமதியென போதை வஸ்து எப்படி சிக்கியது என்பது தொடர்பான விடயம் தான் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு ,மிளகாய் தூள் வீசி ஆட்டோ திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் செல்லும் பெண்கள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் செல்லும் பெண்கள் அவர்கள் மீது மிளகாய் பொடிகளை வீசி அதன் பின்னர் அந்த ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஆண் பெண்கள் இருவரும் இணைந்து வாடகைக்கு ஆட்டோவில் செல்வது போல செல்கின்றனர் .
ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி ஆட்டோ திருட்டு
பின்னர் அந்த ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி அதன் பின்னர் அவர்கள் நிலைதடுமாற அந்த ஆட்டோ திருடி செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேற்படி புதிய திருட்டு ஆட்டோ சாரதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் இவ்விதமான குற்றச் செயல்களை தடுப்பது எவ்வாறு என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிளகாய் பொடி வீசி தற்பொழுது 4க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது
முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரமேஷ் என்ற நபரை
டி 56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காட்டு கதை என்ற இலங்கை ராணுவ புலனவித்துறை அடித்து விட்டுள்ளது.
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன்
குற்ற செயல்களை மேற்கொள்ளும் நோக்குடன் இவர் துப்பாக்கி பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோடிக்கப்பட்ட கதைகளை கட்டவிழ்த்து விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் செய்கிறார்கள் என்கின்ற தகவலை பரப்ப ,இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,இவரிடம் எவ்வாறு இந்த துப்பாக்கி வந்தது என்கின்ற முதலாவது கேள்வி எழுப்பப்படுகிறது.
ஆக இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரை மீளவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்.
அத்துடன் தமிழர்களை தமிழர்களை அடக்கியாள முற்படுகிற விளையாட்டின் ஒரு முற்போக்கு நடவடிக்கையாக இதனை எதிர்பார்க்கலாம் .
இந்த கைது நடவடிக்கையின் பின்னால் பல நடவடிக்கைகள் உள்ளது என்பதை இப்பொழுதே நாங்கள் அடித்து கூறலாம்.
இந்தச் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அனுரா அரசின் ஆட்சிக்கு சாவுமணி அடிப்பதாக இருக்கும் என்பதை, விரைவில் அந்த அரசு உணர்ந்து கொள்ளும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு ,சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலத்த புயல் காற்று வீசுவதால் கடலுக்கு செல்லும் மக்கள் செல்ல வேண்டாம் என தற்பொழுது அரசு அவசர சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .
பருவநிலை காரணமாக வீசி வரும் புயல்
பருவநிலை காரணமாக வீசி வரும் புயல் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்கின்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு
மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு இந்த கடும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ,இது மிகப்பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த புயலால் வீசி வருவதால் கரையோர மக்கள் வீடுகள் மற்றும் கடல் அலை கொந்தளிப்பு காணப்படுதலால் கடலுக்கு செல்ல வேண்டும் என படுகிறது .
மேலும் இந்த புயல் வீசுகின்ற மக்களுக்கும் கடினமான அவசரமான வேண்டுதலும் விடுக்கப்பட்டுள்ளது .
மரங்கள் மற்றும் கூரைகள் என்பன இந்த புயலினால் உடைத்து எறியப்படலாம் என்பதால் , இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி கடும் எச்சரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை
உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த
மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒரு சில பட்டப்படிப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து துறைகளிலும் பெண்களின் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதை நாம்
காண்கிறோம். மேலும், பணியிடங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பாலின சமநிலையின்மையை
சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம்
ஏற்படுத்தி, பல சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம். இது தொழிலாளர் சந்தையையும், உற்பத்தித்திறனையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் ஆராய வேண்டும். ஆண்களுக்கு மட்டுமே
வரையறுக்கப்பட்ட சில தொழில்களில், போதுமான ஆண் மக்கள்தொகை இல்லாவிட்டால், நாம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்,” என்றார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அமிந்த மெத்சில் வலியுறுத்தினார்.
ரொஹான் பிரேமரத்னா தப்பினார்
ரொஹான் பிரேமரத்னா தப்பினார்
ரொஹான் பிரேமரத்னா தப்பினார் லஞ்ச ஒழிப்பு ஆலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பில் குற்ற பிரார்த்தனை களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதீப் போலீஸ் கைது செய்ய வேண்டிய அவசியம்
கொழும்பு நீதிமன்ற நீதிமன்றத்தில்
இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பு நீதிமன்ற நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட நீதி வழக்கின் பொழுதே இந்த அறிவிப்பை விடுக்கப்பட்டுள்ளது இளைஞர் ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னர்
முன் தன்னை விடுவிக்க கோரி அவர் விடுத்த மனு விசாரணை கொடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் பிரதி போலீஸ்மா அதிபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆயராகி வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனுதாரரின் சட்டத்தரணி தெரிவித்தார்.
தங்களை கைது செய்து விடுவார்கள் என அஞ்சிய அவர் நீதிமன்றத்தை நாடி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவிற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.
அனுரா அரசாங்கம்
ஆளும் அனுரா அரசாங்கம் பலரை கைது செய்து மக்களை தன் வசப்படுத்த முயன்று வருகின்ற நிலையில் தற்போது இந்த நடவடிக்கை அவருக்கு எதிராக திரும்பி இருக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குகள் அளிக்கப்பட்ட பொழுதும் அந்த வாக்குறுதிகளை காப்பாற்ற மறுத்த அரசு இப்பொழுது மக்களை குஷிப்படுத்த முனைகிறது.
குற்றவாளிகளாக இவர்களை சித்தரித்து அவர்களை கைது செய்து தாங்கள் நல்ல பிள்ளைகளாக வாழ்வதாக நடிப்பு நாடகத்தை ஆரம்பித்துள்ளது இந்த கைது நடவடிக்கை அங்கமாக பார்க்க முடிகிறது.
இதன் ஊடாக அது ஒரு ஆட்சி கவிழ்க்கப்படாமல் தப்புமா என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது.
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை ,கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை
சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள
கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்,
மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில்
கடல் அலைகள் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு
இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய இருவர் மாயம்
நீரில் மூழ்கிய இருவர் மாயம்
நீரில் மூழ்கிய இருவர் மாயம் ,உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
டியூப் ஒன்றின் உதவியுடன்
இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
30 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்களும் நீரில் மூழ்குவதைக் கண்ட நபர் ஒருவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு
பின்னர், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய உயிர் காக்கும் பிரிவு மற்றும் இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் வந்து இருவரையும் தேடும் பணியை ஆரம்பித்த நிலையில், ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போன மற்றொருவரின் உடலைக் கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானம் 1,942.36 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பில்லியன் ரூபா வருமானத்துடன்
இது 2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் அரசாங்கத்தின் 1,619.23 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது இது 19.95% வீத அதிகமாகும்.
குறித்த காலப்பகுதியில் அரசாங்க வரி வருமானம் 1,491.25 பில்லியன் ரூபாவில் இருந்து 1,802.48 பில்லியன் ரூபா வரையில் 20.87% அதிகரித்ததே இதற்கான முக்கியக் காரணமாகும்.
மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
ஓடுபாதையை விட்டு விலகியஎயார் இந்தியாவிமானம்
ஓடுபாதையை விட்டு விலகியஎயார் இந்தியாவிமானம்
ஓடுபாதையை விட்டு விலகியஎயார் இந்தியாவிமானம் ,கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது
ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு
ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது.மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.
சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார்.
அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எயார் இந்தியா விமான நிறுவன செய்தி
இது குறித்து, எயார் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, விமானம் தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது.
எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் அச்சமடைந்தனர்.
பங்களாதேஷில் விமான விபத்து
பங்களாதேஷில் விமான விபத்து
பங்களாதேஷில் விமான விபத்து ,பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
உத்தரா-டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








































