Posted in இலங்கை செய்திகள்

தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்

தம்பி ஆறுமுகன் தொண்டமானுக்கு ஆழ்ந்த இரங்கல்-இராதாகிருஸ்ணன்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமாகிய தம்பி ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் இழப்பு செய்தி கேட்டு

மிகுந்த துக்கத்திற்கு உள்ளானேன். இந்த திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும் என்று கூறுகின்றார் மலையக

மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.

தொடர்ந்து அவரது அனுதாப செய்தியில்

எனக்கும் அவருக்கும் நீண்டகால உறவு இருக்கின்றது நான் எனது அரசியலை அவரது தாத்தாவான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுடனே ஆரம்பித்தேன். ஐயாவின் இறப்பிற்கு பின்னர்

எனக்கு மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சை பெற்றுக் கொடுத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களே. தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்களை விட்டு பிரிய வேண்டிய நிலை

ஏற்பட்டு விட்டது. இருந்தும் இவரையோ இவரின் குடும்பத்தையோ ஐயா அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையே

விமர்சித்து கிடையாது. இவர்களுக்கு என்று ஒரு மறியாதை என்னிடம் இருந்தது.

தற்போது இந்த இக்கட்டான நிலையில் துயரத்தில் இருக்கும் அன்னாரின் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் உட்பட அவரது

விசுவாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவரது இறுதி கிரிகைகள் மலையத்தில் பூரண அரச மறியாதையுடன் நடப்பதற்கு அராங்கம் நடவடிக்கை எடுக்க

வேண்டும். மலையத்தில் தொழிற்சங்க மற்றும் தொழிற்சங்கம் கட்சி பேதங்கள் இன்றி அவருக்கான மறியாதையை அனத்து

மக்களும் செலுத்த வேண்டும். இவரது இறுதி கிரிகைள் முடியும் வரை மலையகத்தில் துக்கத்தினம் அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்

    Posted in இலங்கை செய்திகள்

    ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்

    ஆறுமுகன் தொண்டமான் மகன் -பதிலாக ஜீவன் தொண்டமான்நியமனம்

    ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக நுவரெலியா மாவட்டத்திற்கு ஜீவன் தொண்டமான்

    மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில்

    போட்டியிடுவதற்கு ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததோடு, அரசியல் குழு உறுப்பினர்கள் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின்

    உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (27.05.2020) பிரதமரை சந்தித்தனர். இதன்போது, இந்த தீர்மானத்தை கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் முன் வைத்தார்.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து

    போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

    வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க அனுமதிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

    ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வைக்க

    கட்சி எடுத்த இந்த முடிவை இதன்போது பிரதமர் பாராட்டினார். அத்தோடு, இக்கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    பிரதமருடனான இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு உறுப்பினர்களான டி.மதியோகராஜா

    , எம்.ராமேஸ்வரன், ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், கே.கனகராஜ், எல்.பாராதிதாசன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்

    பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    ஆறுமுகன் தொண்டமான்
    ஆறுமுகன் தொண்டமான்
        Posted in இலங்கை செய்திகள்

        மக்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு

        மக்களுக்கு மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு

        கொரோனா நோய்த் தொற்று காரனமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த காலங்களில்

        கூலித் தொழில்கள் செய்து வந்த மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அரசாங்க அரச சார்பற்ற

        நிறுவனங்களினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகஸ்ட பிரதேசமாக வாகரை பிரதேச செயலகத்தில் ஓமடியாம்மடு கிராமம் காணப்படுகின்றது.

        இக்கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் நிலையறிந்த பிரதேச செயலாளர் எஸ்.கரன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட

        செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜாவிற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய கிரான்குளத்தில் இயங்கி வருகின்ற

        தன்னார்வ தொண்டு நிறுவனமான விவேகானந்த சமுதாய நிறுவனம் இந்த உதவியினை வழங்க முன்வந்திருந்தது.

        நேற்று (27) காலை இந்த நிவாரணப்பொருட்களை ஓமடியாம்மடு கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வாகரை பிரதேச

        செயலாளர் எஸ்.கரன் தலைமையில் ஓமடியாம்மடு கிராம சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு வாகரை பிரதேச

        செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்

        தகவல் திணைக்கள மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஐPவானந்தன் சமுர்த்தி உத்தியோகத்தர் கிராமசேவை உத்தியோகத்தர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

        வாகரை பிரதேச செயலகப்பிரிவில் அதிகஸ்;டமான கிராமங்களில் இக்கிராமம் முதலிடத்pதில் உள்ளது இங்கு வாழ்கின்ற மக்கள்

        பிரதான தொழிலாக விவசாயத்தினையும் ஆடு மாடு வளர்ப்பதும்தான் பிரதானமாக கொண்டுள்ளனர். தற்போதைய

        அசாதாரன காலநிலையில் இவர்களின் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்தவகையில் இவர்களுக்கு மூன்றாம் கட்டமாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

        அதனைத்தொடர்ந்து உரையாற்றிய விவேகானந்த சமுதாய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ் கூறுகையில் தங்களுக்கு கிடைக்கப்பட்ட இந்த நிதியானது அவுஸ்திரேலிய

        மருத்துவ உதவிக்கான நிதியத்தின் மூலமாகவே இவ்வுதவியினை வழங்குவதாகவும் இவ்வாறு புலம்பேயர்ந்து வாழ்கின்ற எமது

        சமுகத்தினாலேயே இவ் உதவிகள் கிடைத்துவருகின்றது எனவும் எதிர்காலத்தில் இக்கிராமங்களுக்கான நிரந்தரமான தொழில்களை

        உருவாக்குவதற்கு பிரதேச செயலாளருடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை

            பாலங்களில் சிக்கி இருந்த கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை

            வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும்

            மரத்துண்டுகள் கடற்படையினரால் 2020 மே 27 ஆம் திகதி அகற்றப்பட்டன.

            நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக கின் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை

            கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ், கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல

            மற்றும் தொடங்கொடை பாலங்களில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள், மரங்களின் கிளைகள் மற்றும் கழிவுகள் அகற்றும்

            பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

            மேலும் அங்கு நீர் சீராக ஓட மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

            மேலும், வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில், எந்த ஒரு அவசர நிலை ஏற்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளுக்காக

            கடற்படை மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை

              கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை

              ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ

              அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

              புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

              புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக

              மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              கடல் நிலை:

              காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம்

              குறைந்த கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

              நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்

              நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

              மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட

              கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

              கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

                  Posted in உலக செய்திகள்

                  அமெரிக்கா -கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை

                  அமெரிக்கா -கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதனை

                  கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

                  இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான

                  ‘நோவாவேக்ஸ்’, தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் மனிதர்களிடம்

                  பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக நேற்று அறிவித்தது. மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முதல்கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது.

                  இதன்மூலம், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கிரிகோரி கிளன் தெரிவித்தார்.

                      Posted in உலக செய்திகள்

                      வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

                      வீழ்ந்து நொறுங்கிய ரசியா உலங்கு வானூர்தி

                      ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற சுகோட்கா பிராந்தியத்தில் இருந்து அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான

                      ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

                      ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்துக்கொண்டு சுகோட்கா பிராந்தியத்தின் அனாடிர் நகருக்கு திரும்பியது.

                      அனாடிர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது

                      . இதனால் தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது.

                      பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர

                      விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

                      ஒரு வாரத்துக்குள் ரஷிய ராணுவ ஹெலிகாப்டர் ‘எம்.ஐ.8’ விபத்துக்குள்ளாவது இது 2-வது முறையாகும். கடந்த 19-ந்தேதி

                      தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள கிலின் நகரில் ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியதில்

                      ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது நினைவுகூரத்தக்கது

                          Posted in உலக செய்திகள்

                          ரஷ்யாவில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி

                          ரஷ்யாவில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி

                          கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால்

                          இதுவரை 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.54 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                          உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

                          கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

                          இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

                          ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ்

                          தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,70,680 ஆக அதிகரித்துள்ளது.

                          மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 161 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,968 ஆக

                          உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு

                              கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்தவுடன் மோடி பேச்சு

                              கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

                              கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

                              சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது.

                              அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

                              இந்தியாவிலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

                              இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.

                              இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சிறப்பான

                              உரையாடல் நடந்தது. பாராளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன்.

                              மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை

                              அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

                              கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்ந்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ்

                                  இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                  உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.

                                  இதேவேளை இன்றைய தினம் இதுவரை 134 கொரோனா நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

                                  மேலும் 711 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை

                                      லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை

                                      லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள சிவன் ஆலயத்தில்

                                      பணிபுரிந்து வந்த இளம் வயதுடைய ,கோபி குருக்கள்திடீரென தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார்

                                      இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக

                                      தெரியவரவில்லை ,மக்கள் ,மத்தியில் ஒவ்வொரு விதமான கதைகள் பரவுகின்றன,

                                      நீண்ட நாளாக மன வீரகத்தி நிலையில் இருந்ததாகவும் அதனை அடுத்தே திடீரென இந்த தற்கொலைக்கு இவர் சென்றுள்ளார்

                                      அழகிய நல்ல மனம் கொண்ட அற்புதம் இளப்பபு பேரிழப்ப்பு ,இந்த லாயத்தில் சில மதங்களே இணைந்து பனி புரிந்து வந்தார் ,

                                      இவரது இந்த சோக செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

                                      வாழ்வில் ஏற்பட்ட தோல்வியின் விரக்தியே இந்த தற்கொலை என நம்ப படுகிறது

                                      மிகவும் சிறப்பு வாய்ந்த அழகிய ஆலய சுற்றாடல் பகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          காவல்துறையால் 357 பேர் கைது

                                          காவல்துறையால் 357 பேர் கைது

                                          இலங்கையில் நிகழ்கால நோயின் விதிகளை மீறி நடமாடிய சுமார் 357 பேர்

                                          கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்

                                          கொழும்பு ,களுத்துறை ,நீர்கொழும்பு ப்குதியில் நடத்த பட்ட வீதி சோதனையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

                                          இன்றைய தினம் சமுக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்த படுவார்கள் என போலீசார்

                                          அறிவித்திருந்த ,நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய

                                              யாழில் வெடித்த கிளாமர் – தேர்தலில் வெல்ல புலி பீதியை கிளப்பும் கோட்டபாய

                                              யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வீதியோரத்தில் மறைத்து வைக்க பட்ட கிளைமோர் கண்ணி வெடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                              இராணுவத்தினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாம் ,

                                              சுமந்திரனை வைத்து தேர்தலில் வெல்ல போட்ட நாடகம் பிசு பிசுபித்து போன நிலையில்

                                              தற்போது சிங்கள இனவெறியை தூண்டிட இராணுவ கட்டு பாட்டு பகுதிக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                                              வரும் மணித்தியாலங்களில் முன்னாள் புலிகள் சிலர் கைதுசெய்ய பட்டு

                                              அவர்களை வைத்து , சிங்கள பவுத்த மக்கள் மத்தியில் புலி பீதியை உருவாக்க மேற்கொள்ள பட்டுள்ள தாக்குதல் இதுவாகும்

                                              முக மாலையில் புலிகள் சீருடை வெடிபொருட்கள் மீட்க பட்டதாக அறிவித்தது சிங்கள படை, அதனை அடுத்து வந்த சில நாட்களில் இந்த தாக்குதக்கல் இடம்பெற்றுள்ளது

                                              மேலும் முள்ளி வாய்க்கால் தினத்தில் இனவாத பேச்சை கோட்டபாய நிகழ்த்தி இருந்தார் ,

                                              அதன் உள்நோக்கம் சிங்கள பவுத்த பேரினவாதத்தை குஷி படுத்தும் நிகழ்ச்சி நிரல் திட்டமாகும் என்பது தற்போது அம்பலமாகியுளளது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்

                                                  யாழில் -கொரனோ நோயாளிகளை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் விபத்தில் சிதறல்

                                                  யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயாளிகள் மூவரை ஏற்றி சென்ற

                                                  அம்புலன்ஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்தவர்கள்

                                                  படுகாயமடைந்துள்ளனர்

                                                  டிப்பர் வாகனம் ஒன்றுடன் அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

                                                  என தெரிவிக்க பட்டுள்ளது ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      கடல் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                                                      கடல் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

                                                      காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில்

                                                      அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக்

                                                      கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                      புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன்

                                                      கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                      காற்று :

                                                      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                                      புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக

                                                      பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                      கடல் நிலை:

                                                      காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

                                                      நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்

                                                      நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

                                                      கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக -பல்வேறு உதவித் திட்டங்கள்- டக்கிளஸ்

                                                          யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக -பல்வேறு உதவித் திட்டங்கள்

                                                          கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட

                                                          குடும்பங்கள் மற்றும் கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதார நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை

                                                          மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

                                                          இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கயில், யாழ் மாவட்டத்தில் வறுமை நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதார

                                                          மேம்பாடுகளை முன்னிறுத்தியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பெண்களை

                                                          தலைமைத்துவமாகக் கொண்ட 100 க்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு கருவாடு பதனிடும் உபகரணங்கள்

                                                          வழங்கப்படவுள்ளது. அத்துடன் கடற்றொழில் சார் மக்களின் சுகாதார மேம்பாடுகளை முன்னிறுத்தி 210 குடும்பங்களுக்கு

                                                          மலசல கூடங்கள் திருத்துவதற்கான நிதி உதவியும் எமது அமைச்சினால் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                                                          மேலும் கடற்றொழில் சார் 30 குடும்பங்களுக்கு வீடுகளை புனரமைப்பதற்கான குறிப்பாக கட்டி முடியாத நிலையில் உள்ள

                                                          வீடுகளை புனரமைப்பதற்கான நிதி உதவியையும் வழங்கப்படவுள்ளது. இதே நேரம் கடற்றொழிலில் ஈடுபடும்

                                                          தொழிலாளர்கள் தாம் பிடிக்கும் கடலுணவுகளை பழுதடையாது பாதுகாத்து கரைக்கு கொண்டுவருவதற்காக 75 கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளும் வழங்கப்படவுள்ளது.

                                                          இத்திட்டங்களை வழங்குவதற்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்குள் அத்திட்ட உதவிகளை

                                                          பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா

                                                              தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா

                                                              காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர்

                                                              மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

                                                              அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட

                                                              பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.

                                                              அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக

                                                              மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  கட்டாரில் சிக்கி தவித்த 268 இலங்கையர் விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

                                                                  கட்டாரில் சிக்கி தவித்த 268 இலங்கையர் விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்

                                                                  கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள்

                                                                  அதிகாலை 5.04 மணியளவில் தாயகம் வந்தடைந்துள்ளனர்.

                                                                  இவர்கள் யூ.எல் – 218 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

                                                                  இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

                                                                  பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்

                                                                      காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன்

                                                                      திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் நேற்று (26) காலை தேன்

                                                                      எடுப்பதற்காக சென்ற மூவரில் ஒருவரான 19 வயது மாணவன் ஒருவன்

                                                                      மரக்கிளை உடம்பில் குத்தியதில் மரணமானதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                      மரணமானவர் சாம்பல்தீவு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில்

                                                                      உயர்தரம் கற்பவர் எனவும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுத காத்திருப்பவர் எனவும் தெரிவித்தனர்.

                                                                      சடலம் மரண விசாரணை அதிகாரி திரு.எம் ரூமியினால் மேற்கொள்ளப்பட்டதுடன் சடலம் திருகோணமலை பொது

                                                                      வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

                                                                          ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

                                                                          இலங்கையில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது


                                                                          இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி அனர்த்த

                                                                          முகாமைத்துவ அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது

                                                                          மேலும் ஏழு மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது