Author: நலன் விரும்பி
கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை
கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை
பிரபல பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து
வருவதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேற்படி 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மோசம்
இலங்கையில் மனித உரிமைகள் மோசம்
இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குட்டேரஸ், இலங்கை தொடர்பான கடுமையான கவலைகளையும் முன்வைத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதில், ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை மற்றும் ஜெனீவாவில், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான
இலங்கையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து
சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத்
தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை
அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான விடயங்கள் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார். குறித்த விடயங்களுக்கான பதிலை இலங்கை அரசாங்கம்
உடனடியாக வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில்
அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல முறைப்பாடுகள் மீண்டும் கிடைத்துள்ளனவென, தனது
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழல் மோசமான காலப்பகுதி என்றார்.
கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை
இதுதான் உண்மை என தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (30)
புதன்கிழமை நாவற்குடா இந்து சமய கலாசார மத்திய நிலைய கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 46 இந்து ஆலயங்களுக்கு 45 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபா நிதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது வழங்கினார்.
இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் ,இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டுக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாத
ஒருவர் ஒரு சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்றவர் இதுவே யதார்த்த பூர்வமான உண்மை. அதனாலேதான் எனது
மாகாணம் எனது மாவட்டம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
இந்த மாகாணத்தில் எமது மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டு போகின்றது, அதற்கு மிக பிரதான காரணகர்த்தாக்களாக அமைந்தவர்கள், அமைந்து கொண்டு இருப்பவர்கள் கடந்த காலம் முதல் தற்காலம் வரை எமது தமிழ் அரசியல் வாதிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.
58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் 38.6 வீதமாக குறைந்துள்ளனர். ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள். எல்லைப்புறங்களில் உள்ள பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன,
கடந்த காலத்தில் 13 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கரை வருடங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னின்று போராடியவர்களுள் நானும் ஒருவன்.இதேபோன்று என்னை சார்ந்தவர்களுக் இதில் ஈடுபட்டனர். ஒரு இனத்தினுடைய ஒரு சமயத்தினுடைய கலை, கலாசார பண்பாட்டு அம்சங்கள் மனித விழுமியங்கள் மறுக்கப்படும் பொழுது அதற்கு குரல் கொடுப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும். அதை பாதுகாப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்காக போராடுபவர்களாக நாங்கள் மாற வேண்டும்.
நாடளாவிய றீதியில் இந்து ஆலயங்களையோ கிறிஸ்தவ ஆலயங்களையோ கட்டுவதற்கு அப்பால் எம் சார்ந்த சமூகத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவ்வாறு கட்டி எந்த பிரயோசனமும் இல்லை.
அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை சென்று பார்த்தால் இந்து ஆலயங்கள் மட்டும்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுற்றி தமிழர்கள் வாழ்ந்ததற்கு எந்த அடையாளங்களும் இல்லை, ஏன் அந்த பகுதியில் இருந்த மக்களின் இருப்பை பற்றி சிந்திக்கவில்லை, சில ஆலய நிருவாகங்கள் அரசியலையே நடத்துகின்றது.
என்னுடைய அரசியல் வாழ்வில் எந்தவொரு இந்து, கிறிஸ்தவ ஆலயத்தையும் எனது அரசியலுக்காக பயன்படுத்தியதே இல்லை, எமது அரசியல் பயணத்தில் எதிர்காலத்திலும் நாம் மதஸ்த்தலங்களை பயன்படுத்தப் போவதுமில்லை காரணம் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்
சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்
எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச
சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார.
வாழ்த்துச் செய்தி
எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன்
விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். பிள்ளைகளின் உள, உடல்,
ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும்
முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.
ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை
மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது என நான் நம்புகிறேன். ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும்.
உள, உடல். பலவீனங்களிலிருந்து விடுபட்ட பிரஜைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுவே எனது ஒரே எதிர்பார்ப்பாகும். அத்தகையதொரு நாட்டிலேயே சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான உறுதியான உத்தரவாதம் இருக்கும். இத்தகையதொரு தேசத்தின் நன்மைகளை அனுபவித்து மகிழும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு உங்களது பிள்ளைகளின் சிறு பராயத்தை நீங்கள் மிகுந்த பொறுப்புடன் நெறிப்படுத்துவீர்களென நான் எண்ணுகின்றேன். அப்போதுதான் 'எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்' என்ற இவ்வருட உலக சிறுவர் தின கருப்பொருளை யதார்த்தமாக்க முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷ
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபத்தி
ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினத்தை அளவான மக்கள் பலி இன்று இடம்பெற்றுள்ளது என அரசு
அறிவித்துள்ளது ,எனினும் அரசு கூறுவது போன்ரு உயிர் பலிகள் அதிகம்
என மக்கள் கருத்துக்கள் உள்ளது ,இவ்வாறு அதிக தொகையில் மக்கள்
பலியாகி வரும் நிலையில் பாடசாலைகளை அரசு மூட மறுத்து வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
வரும் பாடசாலை விடுமுறையுடன் மீள பாடசாலைகள் அடித்து பூட்ட
படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,சில பாடசாலைகளில் நோயாளர்கள்
உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையிலும் அவை அடித்து மூட மறுக்க பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
எதிர் வரும் வெள்ளி முதல் திங்கள் வரையான நாட்களில் அதிக குளிர்
மற்றும் புயல் இடம்பெறும் எனவும் இவ்வேளை மேலும் அதிக மக்கள் நோயினால் பாதிக்க படுவது அதிகம் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் அதிக பிரிட்டன் பூர்வீக குடிகள் வாழும் பகுதியான லீவர் பூல் ப
குதியில் சில வாரங்களில் கடுமையான கொரனோ நோய் தோற்று இடம்பெற்றுள்ளது
இதனை அடுத்து இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சாராயம் விற்க தடை
செய்ய பட்டுள்ளது ,அத்துடன் பத்து மணிக்கு பின்னர் அணைத்து கடைகளும் அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது
இதே நிலை மூன்று மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது ,இதே போன்ற நிலை லண்டன் பகுதிக்கும் விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களுக்கு அரசு விடுவிக்க பட்ட உத்தரவுகளை பின்பற்றும் படி வேண்ட படுகிறது
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்
பிரிட்டன் நாட்டுக்குள் சர்வதேச அளவில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் – அகதிகள் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர் ,
தற்போது கடல்வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் நாள் தோறும்
நுழைந்து வருகின்றனர் ,இதனை தடுக்கும் முகமாக தற்பொழுது பிரிட்டனில்
இருந்து நான்காயிரம் மைல்கல் தொலைவில் உள்ள அத்திலாந்திக் St Helena, part
பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இவர்களை தங்க வைக்கும் ,சிறை படுத்தும்
நடவடிக்கையை குடிவரவு குயகழ்வு அமைச்சு அமைச்சர் பட்டேல் மேற்கொள்ளவுள்ளார்
இதற்கான வேண்டுதல் அரசிடம் விடுக்க பட்டுள்ளது
இவை அவுஸ்ரேலியாவில் அகதிகளை தீவில் அடைத்து வதைகள் செய்வது
போன்ற கொடிய செயலுக்கு ஒப்பானதாகும் ,இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரே அமைச்சராக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இவரது இந்த நடவடிக்கை அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இவ்வாறு ஏற்பட்டால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்க படும் நிலை தோன்றும் என்பது கவனிக்க தக்கது
மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவராதது இந்த நடவடிக்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது
ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல்
லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே
அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர், பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.
‘உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது. நாளைக்கு அலுவலகத்தில் சனம் நிறைய
இருக்கும். ஆகையால், வீட்டுக்கே கொண்டுவந்து ஆவணத்தை தருகின்றேன்.
ஆவணத்துடன் முத்தமொன்றையும் தருகின்றேன். பதிலுக்கு முதலில்
முத்தம் வேண்டும்” என, அப்பெண்ணிடம் கிராமசேகவர் கேட்டுள்ளார்
என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மஹிந்த
ராஜாக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இலங்கையில் பசு வதையை தடை செய்தல்
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும்
பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும்,
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை
மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை
ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட
பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை
கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால்
நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்
வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை
இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள்
இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின்
ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின்
அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497
பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428
பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்தொற்று
எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை
பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர்
விகிதம் 83.33 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்
20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.29 தெரிவித்தார்.
பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி
மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?
பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?
பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில்
நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?
பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.
ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு
கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.
பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை
நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
பிரிட்டனில் ஆளும் பிரதமர் பெரீஸ் ஜோன்சன் தனது குழப்பத்தில்
கொரனோ பரவல்
விதிகளைம் மாறி கூறிவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்
வடகிழக்கு பகுதிகளில் இவ்விதமான விதிகள் விதிக்க பட்டுள்ளதை
அவர் சுட்டி காட்டி தெளிவு பட மக்களுக்கு விளக்கியுள்ளார்
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்விதம் பதில் வழங்கியுள்ளார் ,அதனை காண்க
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பத்தொன்பது வயது இளம் பெண்
ஒருவர் மர்ம ரவுடி கும்பலினால் கோரமாக கற்பழித்து படு கொலை
செய்ய பட்டுள்ளார்
பலமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சுயநினைவின்றி மருத்துவ
மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,தொடராக வழங்க பட்ட
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்
குறித்த பெண்ணை கற்பழித்தவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
கோப்புப்படம்
சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4
லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல
குழந்தைகள் உணவு கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போரினால் நிலைகுலைந்துள்ள சிரியாவில்
கொரோனா தொற்றும் பரவுவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது
46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில்
தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு
சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.
அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர்.
குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
வங்கிக்கணக்குளை முடக்கிய மத்திய அரசு – இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
புதுடெல்லி:
’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் பெங்களூரில் தனது கிளையை நிறுவியுள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவதே ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும்.
ஆனால், தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இந்தியா அரசியல் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தது.
மேலும், அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பால் பெங்களூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெல்லி வன்முறை தொடர்பாக போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு மீது ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்கிடையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசிடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும். ஆனால், ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்போ தான் பெறும் வெளிநாட்டு நிதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிதி பெற்று வந்தது.
வெளிநாட்டில் இருந்து நிதிபெற ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.
அதன் பின் 20 ஆண்டுகளில் ஒருமுறைகூட வெளிநாட்டில் இருந்து நிதிபெற மத்திய அரசிடம் அந்த அமைப்பு உரிய அனுமதி பெறவில்லை. மேலும், இத்தனை ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அந்த அமைப்பு நிதிபெற்று இந்தியாவில் தனது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்திய சட்டவிதிகளை மீறியதற்காக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது.
இந்நிலையில், தனது வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதற்கு ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆற்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயது பெண் -சடலம் மீட்பு
மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை
வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை
கொழும்பில் பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல்
கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான
இந்திக்க ஹப்புகொட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் வீதிநிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வீதிகளில் உள்ள மின்சார சமிஞ்சை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர்
ஹப்புகொட தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார கால ஒத்திகையாக வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பமானது.
இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் வீதி நிரல்
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்..
இதற்கு அமைவாக கொழும்பு பிரதான 4 வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்
இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்
கொரோனா தொற்று 17 பணியாளர்களுடன் இந்தியாவில் இருந்து கொழும்பு’
துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலில் கடமையில் ஈடுபட்ட 7 பேர் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புபட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர் , சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று
நோயாளர்களா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் இறுதி கொரோனா நோயாளர் குணமடையும் வரையில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை
கடைப்பிடிப்பது கட்டாயமாகுமென்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.
நாம் மேற்கொண்ட சிறந்த சேவையின் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடிந்நது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு.
தற்பொழுது சிலர் நினைக்கின்றனர் இந்த தொற்றினால் நாட்டிற்கு பிரச்சினை இல்லை என்றும், இன்னும் சிலர் தொற்று ஏற்பட்டால்
அதனை இராணுவத்தினர் கட்டுப்படுத்திவிடுவர் என்றும் நினைக்கக் கூடும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்கள்
பல சிரமங்களை எதிர்கொண்டனர். அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது என்றும் இராணுவ தளபதி கூறினார்.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்
இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை
அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலிளித்திருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பு
விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக
புரிந்துகொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதில் வெளிப்படுத்தியிருப்பதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.
13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கைக்கு, இந்தியா
15 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்று பொய்யானதாகும் என்றும் அவர் கூறினார்.
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதி உதவி பேரம்பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்;று விசேட செய்தியாளர்
மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடல்
பற்றிய உண்மைக்கு புறம்பான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், கடன்கள் , அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள் ,. மீனவர்கள் தொடர்பான நெருக்கடிகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இரண்டு
நாடுகளுக்கும் இடையில் , எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவின் நிதி உதவி தேவையாயின் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த
அமைச்சரரிடம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான மாகாண சபை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தனர்.
ஊடகவியலாளர்: இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்த திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுதும் நடைமுறையில் உண்டு. இராஜாங்க அமைச்சரின் கூற்று அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது.
இதனை நீக்குவதாக பிரதமரோ ஜனாதிபதியோ ஒரு போதும் தெரிவிக்கவில்லை. இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் அமுல்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தின்
கீழான மாகாண சபை முறையை எமது அமைப்பு வரவேற்றது. அதனை இப்பொழுதும் நாம் வரவேற்கின்றோம். சில தமிழ் அமைப்புக்கள் தான் இதனை விமர்சித்தன.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல : இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இந்த
கலந்துரையாடல் 45 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. இது நாடுகளுக்கு இடையில் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக
கலந்துரையாடப்பட்டது. எந்த முரண்பட்ட விடயங்களும் இதில் இடம்பெறவில்லை, சுமுகமான நல்லுறவுடன் பேச்சுவார்த்தைகள நடைபெற்றன.
பல கலந்துரையாடல்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும்.
தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து ஒருபோதும் முடிவு எடுக்கமாட்டோம்







