திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு

திருடப்பட்ட பசு மாடுகள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மாடுகள் மாடுவெட்டும் கூடத்தில் காவல்துறையால் மீட்பு .

யாழ்ப்பாணம் பருத்துறை துண்ணாலை பகுதியில் சட்டவிரதமாக இயங்கி வந்த மாடு வெட்ட படும் நிலையம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது .

பொலிஸ் திடீர் சுற்றி வளைப்பு

இந்த திடீர் சுற்றி வளைப்பின் பொழுது திருடப்பட்ட பசு மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தின் இதர பகுதியிலிருந்து திருடர்களால் திருடப்பட்ட மாடுகள் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்களில் விற்கப்பட்டு அவை இறைச்சிக்காக வெட்டப்பட்டு மக்களுக்கு உணவாக விநியோகப்பட்டு வருகிறது.

திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிப்பு

இந்த மாடு மட்டும் நிலையத்தில் மட்டுமே திருடப்பட்ட மாடு கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

அதில் ஒன்று நிறைமாத கண்டு தாச்சி மாடு என அடையாளம் காணப்பட்டுள்ளது .

திருடர்கள் ஈவ் இரக்கம் இன்றி இவ்வாறான கருத்தரித்த மாடுகளையும் திருடி சென்று இறைச்சிக்காக வெட்டுகின்ற கொடூரம் இடம்பெற்று வருகின்றது .

மாட்டு இறைச்சி பிரியர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள், இவ்வாறான பசு மாடுகளை வெட்டி அவற்றை நீங்கள் உஙகிண்றீர்கள் .

உங்களது உடலையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு பசுக்கள் தமது இரத்தத்தை பாலாக்கி தருகின்றன .

அதே பசு மாடுகளை கொன்று அவர்கள் உங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

நீங்கள் அதனை நல்ல சுவையாக சுவைத்து சாப்பிடுகிறீர்கள் கொஞ்சம் எனினும் விலங்குகள் மீதும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் .

இதன் ஊடாகவே இந்த செய்திகளை நீங்கள் காதில் உள்வாங்க வேண்டும்.

மனிதராக வாழ்வது மட்டுமல்ல விலங்குகள் மீதும் நாங்கள் பாசத்தினை காட்ட வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் வளர்ப்பதற்கும் நீங்கள் வளர்வதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கு, பால் வழங்கிய அதே பசு மாடுகளை, வெட்டுகின்ற இந்த கும்பலை கண்டால் நீங்கள் உடனே போலீசுக்கு தெரிவியுங்கள் மக்களே .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மஹிந்த

ராஜாக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும்

பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும்,

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை

மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை

ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட

பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை

கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால்

நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்