Posted in இலங்கை செய்திகள்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில்

தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16

வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும் வீடு சென்று பார்த்த போது

தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார்.

எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி

அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான்

பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு

வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார்.

Posted in உலக செய்திகள்

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக

இருக்கும் ஷிவானி, அது நானில்லை… யாரும் நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி
ஷிவானி


சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில்

கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும்

பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

ஷிவானி

தற்போது கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்

போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில்

தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர்

பக்கத்தில் நான் இல்லை… என் பெயரில் போலி கணக்கை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்

Posted in உலக செய்திகள்

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.

இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு

ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும்

பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்தது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்

பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்

பிரிட்டனில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள சட்ட விதிகளை மீறி திருமண

விழா ஒன்றில் முப்பத்தி
ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் விவசாய

பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபர் ஒருவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

அது தவிர அந்த நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றாது

கூடியவர்களுக்கு தண்டம், அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அரசு கொண்டு

வந்துள்ள நடைமுறையை பின் பற்றாது மக்கள் இவ்விதம் உலவி வருவது

மேலும் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வைக்கும் என அடித்து கூறலாம்

Posted in உலக செய்திகள்

65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்

65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் மத்தளம் அமைத்து போராடி வரும்

தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கும்

இடையில் தீவிர சண்டை இடம்பெற்றது

இதில் அறுபத்தி ஐந்து போராளிகளை தாம் படுகொலை செய்துள்ளதாக

அரச இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த

பகுதியை தாம் பாதுகாத்து வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

65 தாலிபான்கள் சுட்டு கொலை
65 தாலிபான்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு

சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம்

மிகுந்து காணப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள்

கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் அந்த மாகாணத்தில் ஜரல் டெல் புரோகிரெசோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று காலை பெண்கள்

உள்பட ஏராளமான இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது கார்களில் வந்து இறங்கிய மர்ம கும்பல் மதுபான

விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.

மதுபான விடுதிக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம கும்பல்

சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்

. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் முதல்தர வங்கிகள் ஒன்றாக உள்ள Barclays வங்கியின்

ஆன்லைன் அப்பிளிக்கேஷன் செயல் இழந்து காணப்பட்டது

இதனால் பல்லாயிரம் மக்கள் தமது ஆன்லைன் செயல் பாடுகளை செய்திட

முடியாது திணறினர் .தொடர்ந்து தமது சேவைகள் மீள் வழமைக்கு திரும்பும்

எனவும் குறிப்பிட பட்ட சில மக்களே இந்த தடையினை சந்தித்து இருப்பர்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,

இந்த தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

Posted in இலங்கை செய்திகள்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய மூன்று தையல் இயந்திரங்களை திருட்டுப் போன இடத்தில் திருடன் மீண்டும் வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர்

பாடசாலையில் இருந்த மூன்று தையல் இயந்திரங்களும் திருடப்பட்டிருந்தன.

இதனை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு பொலிஸாரிடம்


ஒப்படைத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குறித்த தகவலை அறிந்து கொண்ட திருடன், திருடப்பட்ட மூன்று தையல்

இயந்திரங்களையும் திருடிய இடத்தில் மறுநாள் வைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் ஐக்கிய அரபு

இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் தொற்று

உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழரின் நினைவேந்தல் உரிமை மற்றும் அடக்குமுறைகளை வலியுறுத்தி

முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் இடம்பெறவுள்ள

பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிணைந்த

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு

மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

கந்தளாய் சீனி தொழிற்சாலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்தக் கைத்தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 25 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை சுமார் 26 வருடங்களாக மூடப்பட்டுள்ளது. கடந்த

அரசாங்கம் இதனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய போதிலும் அது திறக்கப்படவில்லை.

இதனால் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஏக்கர்

நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் சீனி தொழிற்சாலை

ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதியுடன் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும்

நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை உயர்ந்த பட்ச நிர்ணய விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்படா

விட்டால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேங்காயின் சுற்று வட்டத்திற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி

வெளியிடப்பட்டதன் பின்னர், இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை

எடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்

பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்

என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.

கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் பேசியதாவது:-

நான் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.

அது வெற்றிகரமாக அமைந்தால், அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கோடிக்கணக்கான ‘டோஸ்’ தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்க தயாராக உள்ளது.

மேலும், 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வினியோகிக்க இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மற்ற

நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்து அவை ஆரோக்கியமாக இருந்தால்தான், ஒவ்வொரு நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடந்த 9 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம். இந்த பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எந்த நாட்டையோ, எந்த அரசையோ

குறை கூறுவது எனது நோக்கம் அல்ல. ஒரு முன்னாள் கொரோனா நோயாளி என்ற முறையில், இதை அறிந்து கொள்வது எனது

உரிமை. அதன்மூலம், இது மறுபடியும் தாக்காதவாறு நம்மால் இயன்ற அளவுக்கு நாம் கூட்டாக போராட முடியும்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து 34 கோடி பவுண்டு நிதி உதவி அளித்துள்ளது.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசினார்.

Posted in உலக செய்திகள்

இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்

இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
அர்மீனியா அஜெரி இடையே மோதல்

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள்

அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய

படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக்

மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் சோதனை

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் Unibuffels (improved version of

Unicorns), ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இத்த யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியினரால் The

Army’s Sri Lanka Electrical and Mechanical Engineer (SLEME) தயாரிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.20200924 uni 1


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த கவச வாகனங்கள் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பின்தங்கிய

பகுதிகளில் பணிபுரியும் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டின் நிமித்தம் உத்தியோகபூர்வமாக இப்புதிய கவச வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது மாலியில் 20 அதிகாரிகள் மற்றும் 223 இராணுவச் சிப்பாய்கள் உட்பட 243 ஐ.நா. இலங்கை அமைதிகாக்கும்

படையினர் மாலி அமைதிகாக்கும் படை அமைப்பில் பணியாற்றுவதுடன், 65 வாகனங்களும் சேவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புதிய கவச வாகனங்களானது ஐக்கிய நாடுகள் பாதுகப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்தினரால்
இலங்கை இராணுவத்தினரால்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று 2020.09.26 இடம்பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து

காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின்போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத்

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான

ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு

கிட்டியுள்ளதாகவும், அது தொடர்பில் இரு நாட்டு மக்களும் புதிய எதிர்பார்ப்புகளுடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலொன்றில்

ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது இருதரப்பு உறவு மற்றும் பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையினதும், இந்தியாவினதும் பாதுகாப்பு துறை, வணிக தொடர்புகள் என்பவை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் இருதரப்பு

ஒத்துழைப்பு பேணப்பட்டுவரும் ஏனைய பிரதான துறைகளினது ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

காணொளி மூலமான கலந்துரையாடலை ஆரம்பித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,

“நான் இந்த மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எந்நாளும் போன்று உங்களை இந்தியாவிற்கு நாம் மிகுந்த

அன்புடன் வரவேற்கிறோம். பாரத தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு நான் உங்களுக்கு எந்நாளும் அழைப்பு விடுக்கிறேன். இந்த

கலந்துரையாடலை இவ்வாறு மேற்கொள்ள கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்தும் நான் இந்த சந்தர்ப்பத்தில்

வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு மக்கள் ஆணையை பெற்று கொண்டுள்ளமை தொடர்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து

கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த பாரிய வாய்ப்பாகும். நம் இருவரதும் நாட்டு மக்கள் புதிய கனவுகளுடன், உத்வேகத்துடன் எம்மை நோக்கி

அவதானித்து கொண்டிருக்கின்றனர். எமக்கு அனைத்து தரப்பினரதும் முன்னேற்றத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியும். கல்வி, விவசாயத்துறை, வணிகம் போன்று பல்வேறு துறைகளில்

எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். உங்களது அரசாங்கத்தினால் அடிப்படை பொருளாதார திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

இங்கு உரையாற்றிய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாவது,
“இந்த மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்ற முதலாவது மாநாடு இதுவாகும்.

நாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காவிட்டாலும், எம் இருவருக்கும் இடையிலான நட்பு, சகோதரத்துவத்துவ உறவு அதே நிலையில் இருக்கின்றது என நான் கூறிக் கொள்கின்றேன்.
உலகம் முகங்கொடுத்து கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று நெருக்கடி ஆரம்பித்த சந்தர்ப்பம் முதல் இந்தியா அயல் நாடுகளுக்காகவும்,அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் பாராட்டுகின்றோம்.

சார்க் நாடுகளின் பிரதான நாடு என்ற வகையில் சார்க் வலயத்தின் அனைத்து தலைவர்களுடனும் இந்தியா இதேபோன்று தங்களது கருத்துக்களை பரிமாற்றி கொண்டது.

ஜனாதிபதி தேர்தல் போன்றே பொதுத் தேர்தலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது. அதேபோன்று அனைத்து இனத்தவர்களுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.

எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ப நாங்கள் கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கை தொடர்பாக பெருமை கொள்கிறோம்.

மிகவும் கடினமான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்தமை பற்றி கூற வேண்டும்.

அதேபோன்று எவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியவசிய தேவைகளை உச்ச அளவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதபோன்று கொவிட் வைரஸ் நிலைமையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட தேவையுடையோருக்கும், நாளாந்த கூலி பெறுவோறுக்கும், விவசாயிகளுக்கும் நிதி நிவாரணங்கள் பெற்று கொடுத்தோம்.

வெளிநாடுகளிலிருந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகித்தோம்.

கொவிட் வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டப்பட்டது.

சர்வதேச கடல் மார்க்கத்துடன் அண்மித்து காணப்படுவதால் ஏற்படும் பாதுகாப்பு, தேச எல்லை தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க எமது நாடுகள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.

கொவிட்-19 உலகளாவிய தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதியின் போது இலங்கையின் உற்பத்தி துறைகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவது உகந்ததாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். இது இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்.

சமய, கலாசார விடயங்கள் சமமாக காணப்படும் எமது நாடுகளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் இணையில்லாத தோழமையை அதே நிலையில் கொண்டு செல்லவும் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.

எமக்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளை போன்றே, எமது முற்பட்ட நாகரீகத்திலிருந்து பெறப்பட்ட பொறுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எம்.யூ.எம்.அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உட்பட அரசின் உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்

மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சட்டவிரோதமான

முறையில் மண் ஏற்றி வந்த இரு வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் இருந்து கனரக வாகனங்களில் சட்டவிரோதமான

முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வருவதாகப் பொலிஸாருக்குக்

கிடைத்த தகவலையடுத்தே இந்த வாகனங்கள் பறிமுதல்

செய்யப்பட்டுள்ள​தோடு, வாகனத்தின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது

40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை மோட்டார் சைக்கிளில்

கொண்டு சென்ற நபர் ஒருவர், தலுவ பிரதேசத்தில் வைத்து கைது

செய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், நாகவிலு பிரதேசத்தைச் சேர்ந்தவர்

என தெரிவித்துள்ள பொலிஸார், புத்தளம் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட

சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தங்கமானது இன்று (27) இரவு கற்பிட்டி ஊடாக, இந்தியாவுக்குக்

கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்


இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி

இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி

எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை

அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால்

முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார்.

பின்னர், அந்த சாரதிகள் உடற்பயிற்சி சோத​னையை முடித்ததும் அவர்களுக்கு

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்

பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்

பிரிட்டனில் இரண்டாவது முறையாக அடித்து பூட்டும் நிகழ்வு ஏற்படுத்த

பட்டுள்ளது ,இதனை அடுத்து
தற்பொழுது மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

சுமார் பதின் ஐந்தாயிரம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் ,.இதன்

பொழுது மக்கள் மற்றும் பொலிசாருக்கு மோதலில் ஒரு போலீசார்

படுகாயமடைந்துள்ளார் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இந்த போராட்டம் Trafalgar Square பகுதியில் இடம் பெற்றுள்ளது