இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா

Spread the love

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497

பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428

பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்தொற்று

எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை

பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர்

விகிதம் 83.33 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply