இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

Spread the love

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று 17 பணியாளர்களுடன் இந்தியாவில் இருந்து கொழும்பு’

துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலில் கடமையில் ஈடுபட்ட 7 பேர் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர் , சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று

நோயாளர்களா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இறுதி கொரோனா நோயாளர் குணமடையும் வரையில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை

கடைப்பிடிப்பது கட்டாயமாகுமென்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

நாம் மேற்கொண்ட சிறந்த சேவையின் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடிந்நது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு.

தற்பொழுது சிலர் நினைக்கின்றனர் இந்த தொற்றினால் நாட்டிற்கு பிரச்சினை இல்லை என்றும், இன்னும் சிலர் தொற்று ஏற்பட்டால்

அதனை இராணுவத்தினர் கட்டுப்படுத்திவிடுவர் என்றும் நினைக்கக் கூடும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்கள்

பல சிரமங்களை எதிர்கொண்டனர். அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது என்றும் இராணுவ தளபதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *