Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து- மனோ

ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து- மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே

வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ்

முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு

களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள

பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல,

பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி

வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும்,

இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன்

வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

Posted in இலங்கை செய்திகள்

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதுதொடர்பான நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் நேற்று 02.10.2020 காலை நடைபெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந் நிகழ்வில்

காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன்இ மலர் மாலை

அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த

அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மத்த் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.

இதன் போது மாணவி ஒருவருவர் கௌரவிக்கப்பட்டு துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கப்பட்டன.

Posted in இலங்கை செய்திகள்

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்க உத்தரவு

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்க உத்தரவு

மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு

உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, ஏனைய காணிப் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகளை வழங்குமாறு

ஜனாதிபதி அவர்கள் மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஹிம்பிலியாகட கிராம சேவகர் பிரிவின் நாகவனாராம

விகாரை வளாகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற “ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றி ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்…

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில்…
பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம்…


வில்கமுவவிற்கு சிறுநீர் – இரத்த சுத்திகரிப்பு பிரிவு…
ஆசிரியர் – தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு..ஹிம்பிலியாகட “கிராமத்துடன் உறவாடலின்” போது ஜனாதிபதி பணிப்பு..


ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய “கிராமத்துடனான உறவாடல்” இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும்.

முதலாவது நிகழ்ச்சித்திட்டம் கடந்த வாரம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெலங்விட்ட கிராமத்தில் இடம்பெற்றது. நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள

கிராமிய மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து உடனடித் தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதுவும் ஜனாதிபதி அவர்களின் மற்றுமொரு நோக்கமாகும். வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெம்புருஓய,

லேடியங்கல, அலியாவல, வெஹெரகல, ஹிம்பிலியாகட மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களை

சந்தித்து தங்களது மனக் குறைகளை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிப்பதற்காக நாகவனாராம விகாரைக்கு வருகை தந்திருந்தனர்.

வருகை தந்திருந்த பெரும்பாலானவர்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள ஹெட்டிபொல நகரில்

பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக உள்ள காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்க

வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சுயதொழிலாக பால் பண்ணைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். அவர்களை

தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவ வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பண்ணை வள அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடி அவர்களின் உற்பத்திகளை

கொள்வனவு செய்வதற்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். குறைந்த

தொகைக்கு பசுக்களை வழங்குவதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பண்ணை விவசாயிகள் கடன் கோரிக்கைகளை முன் வைக்கும்போது அதற்கான பிணை நிபந்தனைகளை இலகுபடுத்துவதற்கு வங்கிகளுடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளாக பகுதியளவு நிறைவு

செய்யப்பட்டுள்ள ஹெட்டிபொல சிறுநீரக, இரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்து, அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள்

பணிப்புரை விடுத்தார். தம்புல்ல, கண்டி, குருணாகலை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளுக்கு சென்று சிறுநீர்

சுத்திகரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளிகளுக்கு இதன் மூலம் பெரும் நன்மை கிடைக்குமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வெஹெரகலைவுக்கும் பெட்டிப்பொல நகரத்திற்கும் இடையிலான 2.8 கிலோமீற்றர் மற்றும் ஹிம்பிலியாகட கிராமத்திற்கு செல்லும் வீதிகளை உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஹிம்பிலியாகட ஆரம்ப பாடசாலைக்கு மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றையும் ஆசிரியர்களுக்கான வீடு ஒன்றையும் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. லக்கல

பிரதேச செயலாளர் பிரிவில் பல்லேகம மற்றும் வில்கமுவ நாமினி ஓய மகாவித்தியாலயத்தை அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும் பணிப்புரை

வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வுகளை வழங்க

வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அதிகளவில் அவர்களை அதன் மூலம் பயிற்றப்பட்ட

ஊழியர்களாக உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அதில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் இளைஞர்களை ஊக்குவித்தார்.

நீர்ப்பாசன வசதிகள் இல்லாமை வில்கமுவ மற்றும் அதனை சுற்றியுள்ள பல பிரதேசங்களின் விவசாயத் துறைக்கு பெரும் பாதிப்பாகும். அதற்குத் தீர்வாக வத்தேகெதர, வெஹெரகல,

தொடங்கொல்ல மற்றும் வெருவிகஹா குளங்களை புனரமைப்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கும் வகையில்

இரண்டு வருடத்தினுள் குளங்களை அபிவிருத்தி செய்யவும், அதுவரையில் விவசாயத்திற்கு தேவையான கிணற்று நீரை

வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

ஹிம்பிலியாகட குளத்தை விரைவாக புனரமைப்பு செய்யும் பணிகள் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

கிராமத்துடன் உறவாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பின்னர் கிராமத்தில் உள்ள சில வீடுகள் மற்றும் விவசாய நிலங்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க, நாலக்க கோட்டேகொட, ரங்க பண்டார தென்னகோன், ஆளுநர் லலித் யு கமகே,

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இங்கு வருகை தந்திருந்தனர்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு மாற்றம்

அவரை ஹெலிக்கொப்டர் மூலம் வோல்டர்-றீட் இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதாக வெள்ளை மாளிகை

அறிவித்துள்ளது. இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையென வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், அவரது பாரியாருக்கும் புதன்கிழமை கொவிட்-19

தொற்று உறுதி செய்யப்பட்டது. திரு.ட்ரம்பிற்கு ஆரம்பகால நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அவர்

களைப்படைந்திருந்தாலும்இ பலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மெலானியா டிரம்ப்புக்கும், எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் உடனடியாக வெள்ளை மாளிகையில் எங்களை

தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய்த்தொற்றிலிருந்து குணமடைவதற்கான வழிமுறைகளை உடனடியாகத்

தொடங்கியுள்ளோம். இருவரும் இணைந்து, விரைவில் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீள்வோம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ டிரம்ப்பும் அவரது மனைவியும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து

குணமடைய, லட்சக்கணக்கான அமெரிக்கா்களுடன் இணைந்து எங்களது குடும்பத்தினரும் பிராத்தனை செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து டிரம்ப் பூரண குணமடைய விழைவதாக, இந்திய பிரதமா் நரேந்திர மோடிஇ பிரிட்டன் பிரதமா்

போரிஸ் ஜான்ஸன்இ ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில்இ டிரம்ப்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தோ்தல் பிரசாரத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்

கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்

அமெரிக்கா அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ நோயானது

உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,தற்போது அமெரிக்காவும் ,அதன்

தலைவர் டிரம்பும் அதற்குரிய விலையினை கொடுத்துள்ளதாக சீன பகீரங்கமாக அறிவித்துள்ளது

சீனா மீது கடும் இனவாத .பொருளாதார முற்றுகையை நடத்திய டிரம்ப்

தற்போது அங்கு வேகமாக பரவிய கொரனோ நோயினால் பீடிக்க

பட்டுள்ளது எதிரி நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ

அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ

உலகில் புகழ்பெற்று விளங்கும் அமோசன் நிறுவனத்தில் பணிபுரிந்த

இருபதாயிரம் பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதனால் இந்த நிறுவனம் உலக அளவில் பாரிய நெருக்கடியை

சந்தித்துள்ளதுடன் , மக்கள் பொருட்களை கொள்வனவு செய்திட தயக்கம் காட்டி வருகின்றனர்

இதே நிலை மேலும் நீடித்தால் பலத்த இழப்பை குறித்த நிறுவனம் சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

பிரிட்டன் 770 students at Northumbria university பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று

வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 770 பேர் கொரனோ

நோயின் தாக்குதலினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

,தொடர்ந்து பிரிட்டனில் குறித்த நோயானது அதிவேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வீடு சுற்றிவளைப்பு – வெடிகுண்டுகள் மீட்பு

வீடு சுற்றிவளைப்பு – வெடிகுண்டுகள் மீட்பு

இலங்கை மில்லனிய பகுதியில் வீடொன்றில் வெடிகுண்டுகள்

மறைத்து வைக்க பட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற

இரகசிய தகவலை அடுத்து அந்த வீடு திடீரென சுற்றிவளைக்க பட்டது ,

இதில் அங்கிருந்து கைக்குண்டுகள் மீட்க பட்டுள்ளன .

மேற்படி சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு

இளநகையில் தற்போது மீள கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது

,அவ்விதம் ஐந்து பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

.இவர்களில் மூவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ

அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை

ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில்

பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும்

நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த பஸ் – 49 பேர் காயம் – photo

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த

தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில்

பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ​பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02) காலை 7 மணியளவில், டயகம- ஹட்டன் பிரதான வீதியில்

பணித்துக்கொண்டிருந்த பஸ், போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் வைத்தே, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 49 பேரில், ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

என்றும் மற்றையவர்கள், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில், 24 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.

கவிழ்ந்த பஸ்
கவிழ்ந்த பஸ்
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு- இந்கு குளறல்

மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு

விடயம் 5: ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள்

துறையில் உள்ள பொறிமுறைகள் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பு தொடர்பான

பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்த மனித உரிமைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளருடனான ஊடாடும் உரையாடல்

30 செப்டம்பர் 2020

இலங்கையின் அறிக்கை

தலைவி அவர்களே,

இந்த சபைக்கு வழங்கப்பட்ட ‘ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள

பொறிமுறைகள்’ தொடர்பான பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள குறிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் பின்வரும் அவதானிப்புக்களை மேற்கொள்ள விரும்புகின்றது:

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அச்சுறுத்தும் விஜயங்கள்’, ‘கண்காணிப்பு’, ‘துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்’ மற்றும் ‘பழிவாங்கல்கள்’ தொடர்பாக, குறித்த சம்பவங்களை

விசாரணை செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அல்லது

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை

மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது.

அரசாங்கம் ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும்

உறுதிபூண்டுள்ள அதே வேளை, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு

எதிரான தாக்குதல்கள் குறித்து பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்து, வழக்குத் தொடருவதனை உறுதி செய்கின்றது.

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதனைத் தவிர, குறிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்திய ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத்

தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட

குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

உலகெங்கிலுமுள்ள அடிப்படைவாத மற்றும் தீவிரமான கூறுகளின் நுட்பங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நலன்களை இணங்கச் செய்யும் எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை

எதிர்கொள்ளும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, இந்த சூழலில் அத்தகைய யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது

Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண விவசாய கண்காட்சி

வடமாகாண விவசாய கண்காட்சி

வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இந்தக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆரம்பித்து

வைத்தார். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைவது கண்காட்சியின்

நோக்கம் என வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

வட்டக்கட்சி விவசாய பண்ணையில் நடைபெறும் இந்தக் கண்காட்சி

இன்று நிறைவடையவுள்ளது. கண்காட்சியில் விவசாய உற்பத்தி, சேதனப்

பசளை பயன்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றன.

Posted in உலக செய்திகள்

சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்

சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்

லண்டன் தொடங்கீற்று பிரதான வீதியில் சிறுவர் ஒருவரை கடத்தி

சென்ற முஸ்லீம் நபர் ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த

கடத்தல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்

தெரிவிக்கவில்லை விசாரணைகளின் முடிவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்

எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்

பிரிட்டன் தொழில் கட்சி தலைவர் Jeremy Corbyn எட்டு பேரை கூடி பாட்டி

ஒன்றை நடாத்தியுள்ளார் ,இதில் அரசு விதித்த நிபந்தனைகளை மீறிய

குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு முதலாவது குற்றமாக இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

ஒரே வேளையில் ஆறுபேருக்கு மேல் கூட கூடாது என்பது புதிய விதி என்பது

இங்கே குறிப்பிட தக்கது ,இது தாங்க சட்டம் .எதிர்க்கட்சி தலைவருக்கே இந்த நிலையா ..?

Posted in இலங்கை செய்திகள்

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

அரசியல் இராஜதந்திர வழியில் தற்போது முன்னகர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்ட நிலையில், தியாகதீபம் திலீபன்

மக்கள் எழுச்சியின் குறியீடாக இருப்பதோடு, இன்றைய தலைமுறைக்கு இரண்டு செய்திகளை அவனுடைய நினைவு

அறைகூவியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 33ம் நினைவேந்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய

நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்;டம் பெரும் நெருக்கடியினை சந்தித்திருந்த காலகட்டத்தில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினை பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழீழ

விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய எடுத்த முயற்சிகளை, லெப் கேணல் திலீபன் அகிம்சபை; போராட்டத்தின்

உச்சவடித்தினால் , தமிழீழ போராட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவனாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளான்.

உயிரைக் கொடுத்து போராடும் வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உரியதாக இருந்தது. 2009,மேக்கு பின்னரான இக்காலத்தில்

உயிர்த்தியாகம் நிறைந்த போராடும் நிலை இல்லாது போயுள்ளது.இருப்பினும்
திலீபன் காட்டிய வழியில்

1 – மக்கள் மீது முன்வைத்து போராடுங்கள்

2 – எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதிஉச்ச கட்ட அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்து தயாராக இருங்கள்

என்ற இரண்டு செய்தியானது, மக்கள் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்துக்கு விசுவாசமாக, உண்மையாக இருந்து

போராடுமாறு, தியாக திலீபனின் வாழ்வும் ஈகமும் இன்றைய தலைமுறைக்கு அறைகூவல் விடுக்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து நாம் தமிழர்கட்சி செந்தமிழன் சீமான், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, (கனடா) ரொரண்ரோ நகரசபை முன்னாள்

உறுப்பினர் நீதன் சான் உட்பட வட அயலர்லாந்து கட்சித் தலைவர் மற்றும் அமைப்பு பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய வணக்க நிகழ்வு இடம்பெற்றிருக்க, அமெரிக்காவின் நியு ஜெர்சி, பிரான்ஸ்,

பிரித்தானியா, ஜேர்மனி உட்பட பல இடங்களில் இருந்து வணக்க நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருந்தன.

கவிதைகள், பாடல்கள் இடம்பெற்றிருந்ததோடு, தியாகதீபன் திலீபன் உண்ணாவிரதகளத்தில் பங்காற்றியிருந்த முன்னாள் போராளி சிறி அவர்கள் அக்கால நினைவுகளை மீட்டிருந்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வு photo

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வின் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம்; என்ற தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

நேற்று நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்

வாழும் உறவுகளும் அதேபோல நெடுந்தீவு மண்சார்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள நெடுந்தீவின் உறவுகளும் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்

குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி கல்வி பொருளாதாரம் போக்குவரத்து ஆவணப்படுத்தல் குடிநீர் தொடர்பிலும் ஏனைய

பல்வேறு தேவைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்தின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் ஒன்று கூடி தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும்

ஆதரவுகளையும் வழங்கியிருந்தனர் இதில் அரசியல் கட்சி வேதங்கள் இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதத்தலைவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பிரதேச சபை

உறுப்பினர்கள் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நேற்று காலை பல்வேறு பிரதேசங்களில் இருந்து நெடுந்தொகை மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவு நோக்கி பயணித்த உறவுகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் எதிர்காலத்தில்

இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் அதிகளாவிலானோர் தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனின் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற நூல்
தெல்தோட்டையில் வெளியீடு

குறிஞ்சி வெளியீட்டில் தெல்தோட்டை கலாநிதி க.பிரபாகரனின் “அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற உயர்தர புதிய

பாடத்திட்டத்திற்கு அமைவான நூல் வெளியீடு தெல்தோட்டையில் நடைபெற்றது.

இந் நூல் வெளியீட்டு விழாவில் சமைய தவைவர்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக விரிவுரையாளர்கள்

பாடசாலைகளின் அதிபர்கள் அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட புத்திஜீவிகளும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உயர்தர வகுப்பில் பல்கலைகழக மட்டங்களில் அரசறிவியல் ஒரு பாடமாக

கற்பொரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற வகையில் கல்விக்கு மாத்திரம் அன்றி நடைமுறை வாழக்கைக்கும் அரசியல் அறிவு அவசியப்படுகின்றது

இலங்கையை பொருத்த வரையில் தமிழ்மொழி மூலமான அரசியல் நூல்கள் மிக அறிதாகவே காணப்படுகின்றது சில நூல்கள்  கடினமானமொழி நடையிலும் மிகைப்படுதப்பட்டதாகவும்

காணப்படுகின்றன. பெரும்பாலனோர் இவற்றை வாசித்து பொருளறிந்துக் கொள்ள சிரமபடுகின்றனர். இவ்வாறான நிலையில்

அரசியல் கற்பவர்கள்  இலகுவில் கற்றுக் கொள்ள இந்த நூல் வெளியீடு செய்யப்ட்டுள்ளது

அரசறிவியலில்  20 வருட அனுபவம் கொண்ட கலாநிதி க.பிரபாகரின் வண்ணத்தின் வெளியீடு செய்த இந்த புத்தகம்

உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைகழக வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் சட்ட மாணவர்களுக்கும்

முதுமாணி மாணவர்களுக்கும் அரசறிவியலை கற்ற விரும்பும் அனைவக்கும் உதவியாக இருக்கும்.

Posted in உலக செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட

உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மைசூரு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, கொப்பல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர்,

பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது உங்களது மாவட்டங்களில்

கொரோனா பரவலை தடுக்க முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, மந்திரி சுதாகர் உத்தரவிட்டார். இந்த

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது

இல்லை. முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியாக அணிவது இல்லை. இதனால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெங்களூரு நகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும்

சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல்

செய்து உள்ளோம். நாளை(இன்று) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முகக்கவசம் என்பது வாய், மூக்கை மறைப்பதற்காக அணியப்படுவது தான். ஆனால் சிலர் மூக்கு, வாய், கன்னத்தின் கீழ்

முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது முகக்கவசம் அணியாததற்கு சமம் தான். அவர்களுக்கும் இருந்தும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது

பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது

களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு, பொதுப் போக்குவரத்து

பஸ்ஸில் பயணம் செய்த, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய

பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை, அளுத்கம பொலிஸார் இன்று (30) கைதுசெய்துள்ளனர்.

பஸ்லில் பயணம் செய்யவாறே, ​ பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு

அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி,

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,

சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.