Author: நலன் விரும்பி
லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்
லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
எப்படித் தாங்குவாய் மகளே…. லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்
சேரன், லாஸ்லியா
லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை
பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார்.
சேரன், மரியநேசன்
இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும்
வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல
முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்
நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ
நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ
நகைச்சுவை நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
புற்றுநோயால் பாதிப்பு: நகைச்சுவை நடிகருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன்
நடிகர் தவசி
கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தவசி.
இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
டாக்டர் சரவணன் உடன் நடிகர் தவசி
திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன்
தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்
தேர்தலில் தோற்றுவிட்டேன் – ஒப்பு கொண்ட டிரம்ப்
அமெரிக்காவில் ஆளும் அதிபர் டிரம்ப் தான் தேர்தலில் தோற்று
விட்டதாக முதன் முறையாக ஒப்புக்கொண்டு டுவிட் செய்துள்ளார்
தை மாதம் இருபதாம் திகதி இவர் வெள்ளை மாளிகையை விட்டு விலகி
பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் .அது நடக்குமா
என்ற சர்ச்சை சந்தேகம் நிலவி வந்த நிலையில் டிரம்ப் இவ்விதம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்
10,000 கைதிகளை காணவில்லை – கைவிரித்து அரசு – அதிர்ச்சியில் உறவுகள்
எத்தியோப்பியாவில் பத்தாயிரம் கைதிகளை காணவில்லை என அந்த
நாட்டு அரசு அறிவித்துள்ளது ,இவ்வாறு வெளியான அதிரடி
செய்தியால் கைதிகளின் உறவுகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
குறித்த சிறை உள்ள பகுதியில் மோதல்கள் இடம் பெற்று வந்த நிலையில்
இவர்கள் தப்பி ஓடியோ அல்லது குண்டு தாக்குதல்கள் மூலம் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னை தானே மீளவும்
தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,இவருடன் கூடி பழகிய சிலருக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் இவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்
இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியான நிலையில் எதிர்வரும் இரண்டு
வாரத்திற்கும் பிரிட்டன் நாடு தழுவிய முழு அடைப்பு நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது
பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை
பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை
இலங்கை பளை பகுதியில் இருந்து மாமுனை நோக்கி பயணித்த நாற்பத்தி
நான்கு வயதுடைய நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கோரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு படுகொலையான நபராது சடலம் மீட்க பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்ய படவில்லை
9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி
9 பேரை சுட்டு கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான காவல்துறை அதிகாரி
இலங்கையில் இரத்தினபுரி பகுதியில் ஒன்பது பேரை சுட்டு கொலை செய்ய
போவதாக கூறி காவல்துறை கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர்
தனது துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பணியில் ;போலீசார் ஈடுபட்டுள்ளனர்
,குடும்ப தகராரே இந்த செயலுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை
இலங்கையில் இரண்டு விமானிகளான இரு பெண்கள் சாதனை
இலங்கை வைமனப்படை வரலாற்றில் முதன் முதலாக இரு சிங்கள
பெண்கள் விமானங்களை செலுத்தி சாதனை படைத்துள்ளனர்
நீண்ட நாட்களாக பெற்று வந்த பயிற்சியினை அடுத்து தற்பொழுது
இந்த இருவரும் விமானத்தை தாமே செலுத்தி சாதனை படைத்துள்ளனர்
இதுவே இலங்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என கருத படுகிறது
கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்
கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்
கண்டியில் தலா 100 மில்லியன் ரூபா வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்….
• கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபா வீதம் போசாக்கு பொதி….
• ஆயுர்வேதம் என்ற பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் மீது சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை….
• மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் சேகரித்து மீள்சுழற்சி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும்….
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ அபிவிருத்தி
நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்
கொடுப்பதற்கும், செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ‘சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு’ நேற்று (2020.11.14) கண்டி மாவட்ட செலயக காரியாலயத்தில் கூடியது.
புதிய அரசாங்கம் பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்று மனித வள அபிவிருத்தி என்பவற்றை நோக்காக கொண்டு இந்த அபிவிருத்தி
செயற்திட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்துவதுடன், இன்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அந்தந்த அமைச்சுக்களின்
சார்பில் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் கீழ்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கல்வி
•கண்டி மாவட்டத்தில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
•வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு பாடசாலையை மேம்படுத்தி அடுத்த ஆண்டில் காடசாலைக்குள் தங்குமிட வசதிகளுடன் தரம் 8 இற்காக டெலண்ட் ஐடின்டிஃபிகேஷன் வேலைத்திட்டமொன்றின்
கீழ் விளையாட்டில் திறமைவாய்ந்த 35 பிள்ளைகளை இணைத்து கொள்வதுடன், ஒரு பிள்ளைக்கு தலா 10,000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்து அவர்கள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்திலிருந்து
சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டில் அப்பாடசாலையில் 130 மீட்டர் செயற்கை ஓடும் பாதையை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒரு பில்லியன் ரூபாய் முதலீட்டை வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு
பாடசாலைக்கு ஈடுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மாவட்டத்தில் ஆசிரியர் இருப்பு
மிகவும் திறனற்றதாக இருப்பதால் தேசிய அளவில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை வகுக்க முன்மொழியப்பட்டது.
•கண்டியில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் காணப்படும் நெருக்கடியை தீர்ப்பதற்கு வெளி மாவட்டங்களில்
தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
•கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் ஆசிரியர்கள் அங்கு நீடித்திருக்காமைக்கு முக்கிய காரணம்
அவர்களுக்கு தங்குவதற்கு பொருத்தமான இடம் இல்லாமையாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக தேவையுள்ள பாடசாலைகளை அடையாளங்கண்டு ஆசிரியர் தங்குமிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள்
•கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் ஊட்டச்சத்து பொதியை 10 மாதங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
•குழந்தை பருவ வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி கண்டி மாவட்டம் முழுவதும் தேசிய கொள்கையுடன் பல திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு திட்டங்கள் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படுவதுடன், 1938 மகளிர் உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் அவசர பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது.
கல்வி சேவைகள்
•கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு முன்பள்ளி மற்றும் ஒரு பகல்நேர பராமரிப்பு
மையத்தை வழங்க ஏற்பாடுகள் செய்வதுடன், வெளிப்புற குழந்தைகள் பூங்காவும் இதில் உள்ளடங்கும்.
•கழிப்பறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி இல்லாத அனைத்து பாடசாலைகளுக்கும் அவ்வசதிகளை இவ்வாண்டு
பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதன்படி 2021 முதல் இலங்கையில் ஒவ்வொரு பாடசாலையிலும் மேற்கண்ட வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.
•டிசம்பர் 25 க்கு முன்னர் பாடசாலை பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்குதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்.
சுகாதாரம்
•தோட்ட மருத்துவமனைகளை அரசிற்கு கையகப்படுத்துவதில் கண்டி மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், 2021 ஏப்ரல் மாதம்
கண்டி மாவட்டத்தில் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
•தெல்தெனிய வைத்தியசாலையை கொவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சை பெறும்
மக்களுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
•கண்டி மருத்துவமனையில் தற்போது இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களால் கொவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சுதேச வைத்திய பிரிவு
•உள்நாட்டு மருந்துகள் நாட்டில் பயிரிடப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,
இந்த அளவிற்கு இலங்கையை பாதித்த கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் நோய்த்தடுப்பு மருந்துகளே காரணம் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.
•சுதேச வைத்திய பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இந்த நோக்கத்திற்காக அதிக மாணவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
•கண்டி நகரத்திலும் அதற்கு அப்பாலும் மசாஜ் பார்லர்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த விவாதம் கவனம் செலுத்தியது, மேலும் அவற்றைத் தடுக்கும்
பொருட்டு, ஆயுர்வேத பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சோதனை செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
•மசாஜ் பார்லர்களை பதிவு செய்வதற்கான செயல்முறை கடுமையான சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அபிவிருத்தி குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி நிறுவனங்கள்
•மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக் பொலிதீனை சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கும் மீள்சுழற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அபிவிருத்தி குழுவில் விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் கொரோனா – மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா – மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் (15) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான விபரங்கள் பினவருமாறு:
- கொழும்பு 13 ஜிந்துபிட்டி பகுதியைச்சேர்ந்த 54 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்டகாலமாக இருந்துவந்த
- நுரையீரல் புற்றுநோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையால் அதிகரித்தமை என தெரிவிக்கப்ட்டுள்ளது..
- கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆண் நபர். கொவிட்
- 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டப் பின்னர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.
- மரணத்திற்கான காரணம் நீண்ட கால புற்றநோயினால் அவதிப்பட்டமை மற்றும் கொவிட் தொற்று நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர் மார்பு வலியின் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 08 பொரளை பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஆண் நபர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானமையினால் நீண்டகால நுரையீரல்
- நோய் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 88 வயதான ஆண் நபர்.
- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம்
- கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 58ஆகும்
என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய கொழும்பு பகுதியில் மேலும் ஐந்து
பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மருதானை, புறக்கோட்டை,
கோட்டை, கொம்பனித்தெரு, டேம் ஸ்ட்ரீட் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன. களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் மாநகர சபைப் பகுதியும், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் களுத்துறை மாவட்டத்தில்
ஹொரனை, இங்கிரிய மற்றும் வேக்கட மேற்கு கிராம சேவகர் பிரிவும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய
பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.
கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ்
பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.
மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ்
பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,
பேலியகொட பொலிஸ் பிரிவு,
களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.
- இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி
- தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு
காமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
காமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல்ரொக்கட் தாக்குதல்
பாலஸ்தீனம் கமாஸ் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரல் திடீர் ரொக்கட்
தாக்குதலை நடத்தியது ,இதில் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாக தெரிய வரவில்லை
இஸ்ரேல் உளவுத்துறை நாடுகளின் முக்கிய தலைவர்களை கொன்று
ஒழிப்பதன் ஊடாக அந்த நாட்டின் இராணுவ படையெடுப்பை நிறுத்தி விடலாம் என கருதுகிறது
அந்த வகையில் தளபதிகள் ,மற்றும் தலைவர்களை இலக்கு வைத்து
ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்
சாராயம் குடிக்க பணம் கேட்டு மனைவியின் – வண்டியை எரித்த கணவன்
தமிழகத்தில் கணவனின் அதீத மதுபாதை அடிமை தனத்தால் , அவரை
விட்டு மனைவி விவகாரத்து பெற்று ஓட்டம் பிடித்தார் .
தனிமையில்
வசித்து வந்த அவர் தான் வேலைக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார் .
ஆனாலும் மனைவிக்கு தொடராக குடிக்க பணம் கேட்டு கணவன் தொல்லை கொடுத்து வந்தார்
இந்த நிலையால் வீடேறி குதித்த கணவன் ,மனைவியின் மோட்டார் சைக்கிளை
தீவைத்து எரித்து விட்டார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கணவனை கைது சையது சிறையில் அடைக்க போலீசார் நடவடிகை மேற்கொண்டு வருகின்றனர்
தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை
தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை
இந்தியா தமிழகத்தில் கோயில் யானை ஒன்று தண்ணீர் தாக்கத்தில் தவித்தது ,
அவ்வேளை அவ்வழியே வந்த நீர் தாங்கியை வழிமறித்த யானை
அதில் இருந்த நீரை அள்ளிக்குடித்து தனது தாக்கத்தை தனித்து கொண்டது
அங்கு வந்த மக்களுக்கும் ,வண்டிக்கு எவ்விதம் சேதமும்
விளைவிக்காது யானையின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
தமிழகம் ஊரணியில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால்
அந்த ட் வீடு முற்றாக வெடித்து இடிந்து வீழ்ந்தது ,அவ்வேளை
அதற்குள் இருந்த தாய் மற்றும் ஒன்பது வயது மகன் உள்ளிட்ட மூவர் உடல் சிதறி பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களுக்கு தாலா இரண்டு லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது ஆளும் தமிழக அரசு
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்
கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்ப்பாணம் காரைநகருக்கு
எடுத்து வந்த ஐவர், தத்தமது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைநகரை சேர்ந்த நபர், கொழும்பு – 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி
சடங்குச் செய்து பூதவுடலை தகனம் செய்யும் நோக்குடன், கொழும்பிலிருந்து காரை நகருக்கு எடுத்துவந்தனர்.
அவர்கள், தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை
எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார்.
இறந்தவரின் சடலம் கோம்பயன் மயானத்தில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியிலிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னவன்
செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு, கடந்த வௌ்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. மாலை
இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,
பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31)
சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார்,
சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா
வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா
குருநாகல் நகரிலுள்ள வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய,
19 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களும் அவர்களுடன்
தொடர்புடைய இருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களில் 14 பேர் அக்குரணை நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்
ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்
துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று
உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர்
பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் , 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் இன்று (14) இனங்காணப்பட்ட 18 தொற்றாளர்களுடன் மொத்தமாக
வத்தளையில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.
ஹெந்தலை, கெரவலபிடிய, திக்கோவிட்ட, பமுனுகம, மாபொல
ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.







