Author: நலன் விரும்பி
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை நீக்கம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டள்ளன.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
- மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு நபருக்கும் வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (15) நள்ளிரவு
- தொடக்கம் நீக்கப்படுவதாக ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
- கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும்- தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.
மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு
- கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,
பேலியகொட பொலிஸ் பிரிவு,
களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.
- இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு
வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்
இந்திய தமிழகத்தில் சாரதியின் கட்டு பட்டை இழந்து கார் ஒன்று
வீட்டுக்குள் புகுந்தது ,இதனால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது
இந்த சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் கார் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 472 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 26,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்க பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது ,
மிரளும் டிசம்பர் மாதம் உயிர்பலிகள் எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் எதிர்வரும் இடண்டாயிரத்து முப்பதாம் ஆண்டு
தொடக்கம் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க படுகிறது
அதற்கு பதிலாக மின்சார கார்கள் அறிமுக படுத்த பட்டு வருகின்றன
சுற்று சூழல் பாதுகாப்பு கருதி என ஐரோபியா தேசம் கூறி வருகின்ற
பொழுதும் நிலை அதுவல்ல என்பதும், அரேபிய நாடுகள் மீது பெரும் படை எடுப்பை மேற்கொள்ளவும் ,அங்கு எரிபொருள் இறக்குமதி
செய்வதை தவிர்த்து அந்த நாடுகளின் பொருளாதரத்தை வீழ்த்துவதன்
நோக்கமாக இந்த நகர்வை ஐரோப்பா தழுவிய நிலையில் மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ
2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ
எகிப்தின் வரலாற்று சாதனையாக பார்க்க படும் இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சவப் பெட்டிகள் சடலங்களுடன் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்த பட்டு
வருவதுடன் அந்த சடலங்கள் ஸ்கனிங் முறைக்கு உள்ளாக்க பட்டு உடல்கூறியல் ஆய்வு செய்ய படுகிறது
இவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பன தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது
அரச குடும்பத்தை சேர்ந்த சிலரும் இதில் உள்ளதாக நம்ப படுகிறது
மேலும் குறித்த பகுதியில் அகழ்வாரச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள படுகின்றன
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.
பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில்
கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.
இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த
வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின்
எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இந்தியாவின் பிரதமர் நேர்ந்திரா மோடி இராணுவத்துடன்
இணைந்து தீபாவளியை குதகலமாக கொண்டாடினர்
ஆண்டு தோறும் இராணுவத்துடன் இணைந்தே இந்த நிகழ்வை கொண்டாடி வருகிறார்
அவ்விதமே இன்றும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்
மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்
இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. எங்கள் மதம் பெரிதா உங்கள் மதம்
பெரிதா என்றும் மதம் பிடித்து திரிபவர்களின் மத்தியில் தமிழ்; பெயரில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதை கேள்விபட்டு இருக்கின்றீர்களா?
கண்டி மாவட்டத்தின் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய” என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.
மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான
நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார் அந்த அந்நேரத்தில்
தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.
அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒருப் பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம்
என்பதனால் “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர்
அவர்களினால் இந்த பெயர சூட்டப்பட்டது தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.
இதன் பயனாக இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள்
ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும்¸ சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய” இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும்¸ இந்து மக்களுக்கும்
தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து
வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தப் போதும் தேரர் அதனை
செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.
எனவே இது போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட்டில் சாந்தி¸ சமாதானம்¸ சமத்துவம்
நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே வேலை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும் இது அனைவரையும் சிந்திக்கவும் பெருமைப்படவும் வைக்கின்றது.
2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்
2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்
நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில்,
ஓஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை தேசிய
நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஏற்பாடகியுள்ளது.
இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர்
பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் தற்போதய அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியா தமிழர்
ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரிய பணிமனையின் உத்தியோகபூர்வமான அறிவித்தலும் இத்துடன் உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, அவுஸ்திரேலியா மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு
உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்
இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய் இன்று (14) முதல் நீர்கொழும்பு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன்படி 38 ஆயிரத்து 458 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி :
இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய
ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை
பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது
மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக்
கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது
. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும்
பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும்
எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.
இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு
ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு
கடற்படையின் துணையுடன், ஹெலிக்கொப்டர்கள், ஆளில்லா
ட்ரோன் கமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்களை பொலிசார் இன்று கண்காணித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில் இந்தக் கண்காணிப்பில்,
கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தத்தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.
திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?
திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?
இந்திய தமிழகத்தில் அரச வன வள பாதுகாபபி பிரிவில் உலவி
திரிந்த குரங்கில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவை திடீரென செத்து மடிந்தன ,
இந்த குரங்குகள் எவ்வாறு செத்து மடிந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவ்வழி, சாலை வழியாக செல்லும் நபர்கள் நஞ்சு வைத்து கொலை செய்திருக்க கூடும் என்ற எதி பார்ப்பு வலுப்பெற்றுள்ளது

இந்தியா பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் மோதல் – பலர் பலி
இந்தியா பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் மோதல் – பலர் பலி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இடையில் காஸ்மீர் பகுதி
எல்லைகளில் மோதல் வெடித்தது இதன் பொழுது மூன்று இந்தியா இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் இந்தியா இராணுவம் திருப்பி தாக்கியதில் பாகிஸ்தான்
இராணுவத்தை சேர்ந்த ஒன்பது இராணுவம் பலியாகியதாக இந்திய படைகள் தெரிவித்துள்ளன

வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
வாடகை வானை திருடி விற்ற கும்பல் மடக்கி பிடிக்க பிடிப்பு
அவுஸ்ரேலியாவில் வான்களை வாடகைக்கு விடப்படும் நிறுவனம் ஒன்றில்
இருந்து பல டசின் வான்களை வாடகைக்கு கொள்வனவு செய்த
கும்பல் ஒன்று அந்த வான்களை விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது
இவ்வாறு திருட்டு தனமாக விற்க பட்ட வாகனகள் யாவரும்
போலீசாரின் அதிரடி சோதனையின் பொழுது மீட்க பட்டுள்ளது
தற்போது கைதான திருடு கும்பலிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
வெள்ளை மாளிகையை விட்டு செல்ல மறுக்கும் டிரம்ப் – நெருக்கடியில் பைடன்
வெள்ளை மாளிகையை விட்டு செல்ல மறுக்கும் டிரம்ப் – நெருக்கடியில் பைடன்
அகிமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் நடந்து முடிந்த தேர்தலில்
பலத்த தோல்வியை தழுவியுள்ளார் ,மக்கள்; ஆணையை ஏற்று விலக மறுத்து தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குந்திவிட அவர் முயற்சிகளை மேற்கொள்கிறார்
இதனால் புதிய ஜனாதிபதியகி அறிவிக்க பட்ட ஜோ பைடன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார் ,
கள்ள வாக்கின் மூலமே பைடன் வெற்றி பெற்றுள்ளார் என தொடர்ந்து டிரம்ப் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி வருகிறார்
எதிர்வரும் தை மாதம் இருபதாம் திகதி பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார் ,அன்று அவர் திட்டமிட்ட படி பதவி
ஏற்க முடியா நிலைக்குள் சிக்க தவிக்க கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது
தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்;இந்த அடம்பிடித்து உலக நடுகல் மத்தியில் அமெரிக்காவை தலை குனிய வைத்துள்ளது என்ற கருது உருவாக்கம் வலுப்பெற்று வருகிறது
அப்படி என்றால் தை இருபது நடக்க போவது என்ன ..?
குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
எனது குளியல் அறையில் கேமிரா வைத்தனர்- மரியம் நவாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு சவுத்ரி சர்க்கரை ஆலையை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டனர் என மரியம் குடும்பம் மீது
குற்றச்சாட்டு கூறப்பட்டது. ரூ.70 லட்சம் மதிப்பிலான பங்குகளும் மரியம் பேரில் பரிமாற்றம் செய்யப்பட்டன என புகார் எழுந்தது.
இந்த வழக்கிற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு மரியம் நவாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் மரியம்
அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது சிறை அறை மற்றும் குளியல் அறையில் கூட அதிகாரிகள் கேமிரா வைத்தனர் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, 2 முறை சிறை சென்ற நான், ஒரு பெண்ணாக, சிறையில் எப்படி நடத்தப்பட்டேன் என்பது பற்றி
பேசினால், அவர்கள் தங்களது முகங்களை வெளியே காட்ட முடியாது என கூறியுள்ளார்.
ஒரு பெண்ணாக பாகிஸ்தானிலோ அல்லது வேறு எங்கும் இருந்தாலும் நான் பலம் குறைந்தவள் அல்ல என அவர் கூறியுள்ளார். அவர் கில்ஜித்-பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு 7 நாள் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக நடந்த பொது கூட்டமொன்றில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் அது பரவி விட்டது.
இந்த தொற்றுநோய் முக கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என கூறினார்.
இம்ரான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது என கூறிய மரியம் நவாஸ், கான் மற்றும் அவரது
கட்சி பாகிஸ்தானில் இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ஆளும் கான் தலைமையிலான அரசை விமர்சித்துள்ள மரியம், தனது தந்தை நவாஸ் ஷெரீப் முன்னிலையில், அறையை உடைத்து கொண்டு உள்ளே வந்து
அதிகாரிகள் கைது செய்கிறார்கள் என்றால் பாகிஸ்தானில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.
கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு
கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு
கனடா மொன்றியலில் உள்ள நிறுவனம் ஒன்றுக்குள் பணிபுரிந்த
ஊழியர்களை மர்ம நபர்கள் ஆயுத முனையில் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு ஆயுத பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் அவ்விடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளதுடன்
,அங்குள்ள மக்கள் சுற்றிவளைக்க பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் இல்லை என
தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரிய வரவில்லை.
கைபேசிகள் சைலண்டில் வைக்க பட்டுள்ளது எனவும் மக்கள் பீதியில் பதுங்கி உள்ளன
பல 12 க்கு மேற்பட்டவர்கள் இவரது சிறை பைடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 27,301
பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் மேலும் 376 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்
எதிர் வரும் நான்கு வாரத்தில் கொரனோ தடுப்பு ஊசி மக்கள்
பாவனை பயன் பாட்டிற்கு விடப் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் இன்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட திடீர்
சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







