Tag: பயணத் தடை
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை
கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடையை அமெரிக்கா நீட்டிக்கிறது
எபோலா குறித்த கவலை
எபோலா குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, கடந்த 21 நாட்களில் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா அல்லது தெற்கு சூடானில் இருந்த
சட்டப்பூர்வ நிரந்தரக் குடியிருப்பாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அமெரிக்கா வெள்ளிக்கிழமை தற்காலிகமாகத் தடை விதித்தது.
அமெரிக்கக் குடிமக்கள், நாட்டினர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 30 நாள் எபோலா தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது,
ஆனால் இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் தடையை நீட்டிப்பது அவசியம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) வெள்ளிக்கிழமை கூறியது.
சட்டப்பூர்வ நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு
“சட்டப்பூர்வ நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அவசரகால பதில் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும்
இடையில் ஒரு சமநிலையை வழங்குகிறது,” என்று நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஒரு அறிக்கையில் தெரிவித்தன.
உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று, அரிதான புண்டிபுக்யோ வகை எபோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) ஒரு தேசிய நோய்ப் பரவலாக மாறுவதற்கான அபாயத்தை
“மிக அதிகம்” என்று உயர்த்தியுள்ளதுடன், அங்கும் உகாண்டாவிலும் ஏற்பட்டுள்ள நோய்ப் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அவசரநிலையாகவும் அறிவித்துள்ளது.
தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்ய கூட்டாட்சி சுகாதார அதிகாரிகளுக்கு
அதிகாரம் அளிக்கும் அமெரிக்க பொது சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 42-இன் கீழ், சிடிசி (CDC) இந்த உத்தரவை முதலில் திங்கட்கிழமை அன்று பிறப்பித்தது.
வரலாற்று ரீதியாக, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க நுழைவுக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிடிசியின் கோவிட் கால
பிரிவு 42 உத்தரவோ, அல்லது அதிபர் டொனால்ட் டிரம்பின் பல்வேறு பயணத் தடைகளோ அவர்களுக்குப் பொருந்தவில்லை.
- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- கரை ஒதுங்கிய மனித தலை பதட்டம்

பிரசன்ன ரணதுங்க மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்
பிரசன்ன ரணதுங்க மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்
பிரசன்ன ரணதுங்க மீதான வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம் ,பிரசன்ன ரணதுங்க மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியது.
கொழும்பு தலைமை நீதவான்
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை
தற்காலிகமாக தளர்த்த கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.
ரணதுங்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரர் ஒரு மத நிகழ்வில் கலந்து
கொள்வதற்காக இந்தியா செல்ல வேண்டியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணத் தடை
தற்போது நடைமுறையில் உள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.
சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்ட பிறகு, நீதவான் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பயணக் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளர்த்த உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல்
மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய கொழும்பு பகுதியில் மேலும் ஐந்து
பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மருதானை, புறக்கோட்டை,
கோட்டை, கொம்பனித்தெரு, டேம் ஸ்ட்ரீட் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன. களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.
குருணாகல் மாவட்டத்தில் குருணாகல் மாநகர சபைப் பகுதியும், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவும் களுத்துறை மாவட்டத்தில்
ஹொரனை, இங்கிரிய மற்றும் வேக்கட மேற்கு கிராம சேவகர் பிரிவும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய
பொலிஸ் பிரிவுகளும் நாளை காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும்.
கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ்
பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.
மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ்
பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,
பேலியகொட பொலிஸ் பிரிவு,
களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.
- இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி
- தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு









