ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்
துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று
உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர்
பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் , 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






