Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி

பொது மன்னிப்பு மற்றும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கொள்கை ஆகிய பின்னணிகளில்,

தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொள்ள

வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற

உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து

வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட

விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும் அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி

பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது

தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்கள்
ஆயுதங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

திருகோணமலை மத்திய வீதியில் நேற்றைய தினம்(1)கொரோனா

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒருவருக்கு தோற்று உறுதி

செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி

ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

பொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Posted in உலக செய்திகள்

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

உலகில் 1903 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த தனக்கா என்ற

பெண்மணி தனது 118 டாவது பிறந்த தினத்தை கொண்டாடினார்

இவரே உலகில் அதிக வயதான பெண்மணி என்ற கிண்ண

சசாதனையை தற்போது தட்டி சென்றுள்ளார்

இவரது இந்த நிகழ்வை அறிந்த மக்கள் சமுக வலை தளங்கள்

ஊடாக தமது வாழ்த்தினை குவித்து வருகின்றனர்

மூதாட்டி
மூதாட்டி
Posted in உலக செய்திகள்

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்

நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்

இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்

அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ

காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்

காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்

மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன

பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி

வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி

கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2,081 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் 230,551 பேர் ஒரே நாளில் பாதிக்க

பட்டுள்ளனர் இவர்களுடன் 29,258 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 445 பேர் பலியாகியும் 57,725 பேர் பாதிக்க பட்டுள்ளன ,

இதுவே பிரிட்டனில் இதுவரை பாதிக்க பட்ட மக்கள் அதிக தொகையினை காண்பிக்கிறது

வரும் நாட்களில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

ன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்

பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த

சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்று இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள். கடந்த டிசெம்பர்

20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்தார்கள். 136 பேர் காயமடைந்தார்கள்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில்

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது திரையரங்களுகள் அதன் திறனில் 25 மாத்திரமே செயற்பட இடமளிக்க அனுமதிக்கப்படுள்ளது.

இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார

வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் நாடளாவிய

ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்கத்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

2021 ஆண்டு அயர்லாந்து Dublin நில் பிறந்த முதலாவது சிசு இதுவாக

பதிய பெற்று சாதனை படைத்துள்ளது ,
புத்தான்டு

பிறந்து நான்கு செக்கனில் இந்த குழந்தை பிறந்து சாதனை பெற்றுள்ளது

2021 ஆண்டில் பிறந்த முதலாவது சிசுவாக இந்த சிசு முதல் இடம் பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது ,


சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

புத்தாண்டு முதல் பிறந்த சிசு
புத்தாண்டு முதல் பிறந்த சிசு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

வட அயர்லாந்தில் புத்தான்டு தினத்தில் வீடுகளில் பாட்டி வைத்து

மகிழ்ந்த 126 பேருக்கு போலீசார் தண்டம் அறவிட்டுள்ளனர்

இவ்வாறு தலா ஒருவருக்கு இருநூறு பவுண்டுகள் விகிதம் அறவிட பட்டுள்ளது

,மேற்படி குற்ற பணம் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அவர்களுக்கு

மேலும் தண்டம் அதிகரிக்க படும் ,இதேவேளை 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

சமகால நிகழ்வு விதிகளை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வின்

பொழுது போலீசார் மேற்படி தண்டத்தை அற விட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்

நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல

நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்

எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது

இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்

அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு

ஆயுத முனையில் பெண்ணை கற்பழித்த நபர் பெருமளவு ஆயுதங்களுடன் மடக்கி பிடிப்பு

பிரிட்டன் எம் 5 வேக சாலையில் கார் ஒன்றுக்குள் பெண் ஒருவர் கற்பழிக்க

பட்ட நிலையில் மீட்க பட்டார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இறங்கிய தகவலை அடுத்து நடத்த தேடுதலின் பொழுது

சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய காரினை போலீசாரை மடக்கினர்

அப்பொழுது அந்த கார் காப்புறுதி இல்லாமை இருந்தமையும், அதற்குள் இருந்து பல ஆயுதங்கள் மீட்க பட்டது

மேலும் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான நிலையில் மீட்களை பட்டுள்ளார்

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற இந்த செயல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,மேலும் ஒருவர் துப்பக்கி சூட்டு

காயங்களுடன் மீட்க பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணியாகில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 2,028 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 156,497 பாதிக்க

பட்டுள்ளனர் இவர்களுடன் சுமார் 29,179 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது , சமீப நாட்களில்

மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேலானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,

இதனால் வரும் நாட்களில் உயிர்பலி அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

அதே போல பிரிட்டனில் 613பேர் பலியாகியுள்ளனர் ,53,285 பேர் ஒரே நாளில் மீளவும் பாதிக்க பட்டுள்ளனர் ,


பிரிட்டனினில் சமீப நாட்களாக பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இதனால் இங்கும் மரணங்கள் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் கிஸ்புல்லா – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்காலத்தில் மிக பெரும் தாக்குதல்

ஒன்றுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் மிக முக்கிய இராணுவக தளபதி எச்சரித்துள்ளார்

இவர்களது இந்த தாக்குதல் மிக அருகில் நடக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளனர்

ஈரன் தமது பழிவாங்கும் தாக்குதல்களை தொடரும் என்ற நிலையிலும் ,

சமீப நாட்களாக லெபனான் எல்லையோரத்தில் பெரும் ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டன

அதன் எதிரொலியாக இவ்விதமான அறிவித்தல் வெளியாகியுள்ளது

,ஈரான் வழங்கிய ஒரு லட்சம் ஏவுகணைகளுடன் ஹிஸ்புல்லா தயார் நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கிஸ்புல்லா
கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் வெளிநாடுகளுக்கும் புகும் முகமாக

அல்ஜீரியா நாட்டுக்குள் நுளைந்தனர் ,அந்த நாட்டின் சாரதி ஒருவர் இந்த

குடியேற்ற வாசிகளை காவிய படி வீதியில் பயணித்த்துள்ளார்

,அப்பொழுது திடீரென முடக்கு திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி வாகனம் சிதறியது

இதில் சம்பவ இடத்தில இருபது பேர் பலியாகினர்

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது


மேலும் 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள்

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் பழனிச்சாமி

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் பழனிச்சாமி

நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி, விஜய்


நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர்

படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத

பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.

விஜய்

அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல்

உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும்

கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை

தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்

ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ

இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம்

காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக

அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுடைய மேலும் 7,776 பேர் தொடர்ந்து

வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், 35,329 பேர் குணமடைந்துள்ளனர்.