புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

Spread the love

புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

ன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்

பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த

சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்று இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள். கடந்த டிசெம்பர்

20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்தார்கள். 136 பேர் காயமடைந்தார்கள்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில்

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *