Posted in சினிமா

என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா

.என்னை கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்னையும் கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா பரபரப்பு டுவிட்
ஓவியா


தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில்,

போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ஹேஷ்டேக்கை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார்.

ஓவியாவின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற

ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்

    ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சல்மான் கான்

    பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி

    வரவேற்பை பெற்றுள்ளது. பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ராதே படம் ரிலீசான சில மணி நேரத்தில் திருட்டு இணைய தளத்திலும் வந்தது.

    ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு

    அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக ராதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சல்மான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராதே படத்தின் போஸ்டர்

    இதுகுறித்து அவர் கூறியதாவது: “ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம். இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு

    இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள்

    படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்

      தமிழ் இன படு கொலை நாளை அனுஷ்டிக்க நீதிமன்றம் அனுமதி-சுமந்திரன் கிண்டல்

      முள்ளி வாய்க்கால் தின நிகழ்வை நடத்திடமுல்லைதீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி

      அளித்துள்ளது ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைபிடித்து இந்த நிகழ்வை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

      எனினும் அந்த சாலையை மூடி விடும் நகர்வில் சிங்கள இராணுவம் ஈடுபட்டுள்ளது ,அங்கு

      செல்பவர்களை கைது செய்யும் நகர்வில் ஈடுபடலாம் என அச்சம் தெரிவிக்க படுகிறது

      சுமந்திரன் காணொளி வாயிலாக நினைவு கூறுவோம் என கிண்டலாக பேசியுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

        கொரனோ ஊசி செலுத்திட வரிசையில் நிற்கும் சிங்களவர்கள் -கொரனோ பரப்பல் -படம் உள்ளே

        இலங்கையில் தனி பெரும் சிங்களவர்கள் அதிகமாக வசிக்கும் கம்பாக பகுதியில் கொரனோ தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

        எனினும் இங்கே கூடி நிற்பவர்கள் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்றாது மிக நெருக்கமாக உள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது

        மேலும் கொரனோ ஊசி செலுத்த படும் பகுதியிலும் தாதிமார் மற்றும் வைத்தியர்கள் குவியலாக உள்ளது இலங்கையில்

        கொரனோ கட்டுப் பாடு எவ்வாறான கீழ் நிலையில் உள்ளது என்பதையும் ,இதில் இருந்து இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது என்பதையும் அடித்து கூறலாம்

        வெளி நாடுகளில் இவ்விதம் அல்ல ,அதனால் தான் லண்டனில் இந்த நோயானது விரைவாக கட்டு படுத்த முடிந்தது என்பது குறிப்பிட தக்கது

        இலங்கை அரசுக்கு வேண்டும் என்றால் நாங்க கொஞ்சம் பயிற்சி தரலாம் வாங்க ,

        கொரனோ ஊசி
        கொரனோ ஊசி
          Posted in இலங்கை செய்திகள்

          தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது-மனோ

          தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் இன்றைய தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது

          • மனோ கணேசன்

          ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள்.

          இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.

          அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

          இன்று நடைபெற்ற தேர்தல்முறை தெரிவுக்குழுவின் முதற்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

          இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி

          கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை.அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

          ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.

          ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல

          அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும்கூட இடமளிக்காது.

          அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.

          பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம்

          வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.

          இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே ஒன்பது (9) தமிழ் எம்பீக்களும், இருபத்திஐந்து (25) தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும், ஏழு (7) முஸ்லிம் எம்பீக்களும், பதினெட்டு (18) முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவாகின்றார்கள்.

          இந்நிலையில் தேர்தல் முறையை மாற்ற கிளம்பும் அரசுக்கு, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், 20ம் திருத்தத்துக்காக அரசு பக்கம் தாவிய சிறுபான்மை எம்பீக்களும் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.

          இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு, மாற்று

          யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

          தேர்தல் சீர்திருத்தை கோருவது அரசாங்கம்தான். ஆகவே இது தொடர்பான நியாயமான யோசனைகளை முன்வைக்க வேண்டியது அரசாங்கமே ஆகும். ஆகவே இது தொடர்பான பந்தை நாம் அரசாங்க பக்கத்துக்கு அடித்து அனுப்ப வேண்டும்.

          மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை ஆரம்பத்திலேயே முன் வைப்பது முறையாகாது. இதுபற்றிய தெளிவும்,

          அனுபவமும் அற்ற ஒருசிலரின் யோசனை முன்மொழிவுகள், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.

          அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமையை முன்வைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, ஜனத்தொகைக்கு ஏற்ப, இன்றைய தேர்தல் மாவட்டங்களை, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.

          இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக

          பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம். ஆகவே இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் என்ற விடயம் தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

          பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல்

          முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும்.

            Posted in இலங்கை செய்திகள்

            கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்


            கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்

            இலங்கை போகம்பர சிறை சாலியின் கூரையில் ஏறி நின்று நாற்பதுக்கு மேற்பட்ட கைதிகள் போராட்டத்த்தில் குதித்துள்ளனர்


            தமது கோரிக்கைகள் நிரைவேற்ற படும் வரை தாம் சாகும் வர போராட்டத்த்தில் ஈடுபட

            போவதாக கைதிகள் தெறிவித்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              70 கிராமங்கள் தனிமை படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

              70 கிராமங்கள் தனிமை ய் படுத்தல் – நெருக்கடியில் இலங்கை

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி

              கொள்ளும் முகமாக உடனடி அமுலாகும் வகையில் பத்து மாவட்டங்களை சேர்ந்த எழுபது

              கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

              நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் மூவாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு

              வருவதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன

                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                கம்பியால் அடித்து மனைவியை கொன்ற கணவன்

                இலங்கை பமுனுவ பகுதியில் கம்பி ஒன்றால் மனைவியை தாக்கி கனவை படுகொலைசெய்துள்ளார்


                இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி மேற்படி கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது

                சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,கணவன் கொலை குற்ற

                சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                  முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                  இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது

                  செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                  நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்

                  எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

                    யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

                    யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் அடையாளம்

                    காணப்பட்டுள்ளனர் ,தற்போது யாழ்ப்பாண பகுதியில் அதிக நோயாளிகளை கொண்ட பகுதியாக

                    மாற்றம்பெற்று வருகின்றது ,இதனால் பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

                      Posted in சினிமா

                      அசுரன்’ படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு

                      அசுரன்’ படத்திற்கு இந்தியில் அமோக வரவேற்பு

                      வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு

                      தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை

                      செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தது.

                      தனுஷ்

                      அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதேபோல் இந்தியில் கடந்த மார்ச் மாதம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு

                      கிடைத்துள்ளது. இப்படத்தை இரண்டே மாதத்தில் 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில்

                      பார்த்துள்ளனர். அசுரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது தனுஷின் கர்ணன் படமும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.

                        Posted in சினிமா

                        மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா

                        மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா

                        தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

                        இதையடுத்து தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

                        மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து

                        வழங்கினார். கொரோனா காலம் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

                        இந்த நிலையில் வாரத்தில் புதன்கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாரம் புதன்கிழமை அன்று ஊழியர்களுக்கு

                        கொரோனோ பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                        இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர்-நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில்

                        அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் இரண்டு வாரங்களுக்கு மலையாளத்தில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

                          Posted in சினிமா

                          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு

                          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு

                          மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் 2 காா்களை வழங்கினா்.

                          கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை – விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு
                          விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய்


                          தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை

                          மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

                          இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக

                          அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.

                          விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய கார்

                          விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற

                          நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் இரண்டு காா்களையும் மன்ற நிா்வாகிகள் ஒப்படைத்தனா்.

                            Posted in Uncategorized

                            முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு

                            முள்ளி வாய்க்கால் தினத்தில் இணைய தளங்கள் கைக் பண்ண படலாம் -பீதியில் இலங்கை அரசு

                            இலங்கையில் ஆண்டு தோறும் வைகாசி 18 ஆம் திகதி அன்று அரச இணையதளங்கள் கைக்கிங் குழுவால் கைக்கு செய்ய பட்டு முடக்க பட்டு வருகின்றன

                            அவ்வாறு இம்முறையும் இடம்பெறலாம் எனவும் ,இவ்வேளை இணைய தளங்கள் நடத்துபவர்கள் மிக அவதானமாக செயல் படுமாறு இலங்கை அரசு எச்சரித்துள்ளது

                            ஆண்டுகள் தோறும் இலங்கை அரச பயங்கரவாதத்தின் இணையத் தளங்களான இராணுவ

                            இனையதளம் ,மற்றும் அரசின் முக்கிய இணைய சேவைகள் முடக்க பட்டமையும் ,அதில் புலிக்கொடி பறக்கவிட பட்டமையும் குறிப்பிட தக்கது

                            இம்முறை அந்த கைக்கர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வலைவிரித்து இலங்கை அரசு காத்துள்ளதாம்

                              Posted in Uncategorized

                              சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

                              சினிமாவில் கீரோ – அரசியலில் சீரோ – கமலை கிண்டலடிக்கும் ஊடகங்கள்

                              நடந்து முடிந்த தமிழக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல் படு தோல்வியை சந்தித்தார்

                              ,மக்களின் பெருமித ஆதரவு தனக்கு உள்ளதாகவும் தான் தமிழகத்தின் முதல்வர் என சூளுரைத்தவாறு போட்டியிட்டார்

                              அவரது அந்த எதிர் பார்ப்பு பலத்த தோல்வியில் முடிவுற்றது ,இதனை அடுத்து தற்போது சர்வதேச ஊடகங்களினால் அவர்கள் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ,

                              சினிமாவில் திறன் மிக்க கீரோவாக வலம் வரும் அவர் அரசியலில் சீரோ என தெரிவித்து வருவது கமலுக்கு பெரும் அவமானத்தையும் ,துயரையும் ஏற்படுத்தியுள்ளது

                              இது போலவே ரஜினிகாந்தும் போட்டியிட முற்பட்டு திடீரென கட்சியை கலைத்து விலகினார்

                              ,அதனால் அவர் தனது நடிப்பு தொழிலை முடக்காது தப்பித்து கொண்டார் என்ற வாதம் இபொழுது முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                                இஸ்ரேலில் உள்ள இலங்கையருக்கு அவசர எச்சரிக்கை

                                இஸ்ரேல் நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ மோதல்களை அடுத்து , மக்களை

                                வெளியில் செல்ல வேண்டாம் என்றும் ,பாதுகாப்பான இடத்தில தங்கி கொள்ளுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                மேலும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                                ,தொடர்ந்து ஹிஸ்புல்லா மாற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்று வரும்

                                நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

                                வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 20 பேருக்கு கொரனோ – திணறும் இலங்கை

                                இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

                                மாரவில ஆதார வைத்தியசாலையின் பணிபுரியும் ஐந்து மருத்துவர்கள் ,எட்டு தாதிமார் உள்ளிட்ட

                                20 ஊழியர்களுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி தனிமை படுத்த பட்டுள்ளனர்

                                இஸ்ரேலை போன்று இலங்கையிலும் மருத்துவர்கள் அதிகம் பாதிக்க பட்டு வருவதால்

                                இலங்கையில் மருத்துவமனைகள் மூட படும் அபாயம் ஏற்படலாம் என அஞ்ச படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                  அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                  அடிகாயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு – எகிறும் படுகொலைகள்

                                  இலங்கை பொத்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் இருந்து முப்பத்தி ஐந்து வயது மதிக்க

                                  தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உடலில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                                  இவர் அடித்து கொலை செய்ய பட்டு வயல் வெளியில் வீச பட்டு இருக்கலாம் என்ற சநதேகம் வலுத்துள்ளது


                                  மேற்படி கொலையுடன் தொடர்பு பட்டார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

                                  தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,கோட்டா ஆட்சியில் இலங்கையில்

                                  தொடர்ந்து இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

                                    இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்

                                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் கடந்த தினம் மரணமாகியுள்ளனர்

                                    இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 962, பேர் பலியாகியுள்ளனர் ,வேகமாக உருவெடுத்து

                                    பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த ,வரும் நாட்களில் இருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன

                                    இதனை அடுத்து நோயின் தாக்குதல் குறையலாம் என கருத படுகிறது

                                      Posted in Uncategorized

                                      விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

                                      விபச்சாரத்தில் ஈடுபடுத்த 3 பெண்கள் -அனுபவிக்க வந்த இருவரும் கைது

                                      இலங்கை மொரட்டுடவ பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டனர்


                                      உல்லாசம் அனுபவிக்க வந்திருந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

                                      கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொரனோ

                                      காலத்திலும் இவ்வாறான விபச்சார நிலையங்கள் இயங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது