Author: நலன் விரும்பி
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.
பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிகினி உடையில் லுங்கி டான்ஸ்… ஜான்வி கபூர் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.
ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
ஜான்வி கபூர்
ஆனால், ஜான்வி ‘லுங்கி டான்ஸ்’ என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
பா.ரஞ்சித்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில்
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.
இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம்
தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
ரஞ்சித்
இந்நிலையில், ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர்
பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை
முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை
லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம்.
2013 முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா, லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன்
நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் காதல் காட்சிகள் குறித்த கேள்விகள்
கேட்கப்பட்டன. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:
இங்குப் பலரும் திருமணம் செய்தவர்களாக உள்ளீர்கள். உங்களை யாரும் சங்கடப்படுத்த
விரும்பவில்லை. பொதுவாக முதலிரவில் என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள்! அதுதான்
படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகளில் நான் நடிப்பதாக இருந்தால் அதற்குக்
காரணம் இருக்கும். படத்தைப் பார்க்கும்போது அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்றார்
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு
வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்
துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது
மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது
,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே
குறிப்பிட தக்கது
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ
இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது
இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு
பிடிக்க பட்டுள்ளது .
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து
பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்
207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்
இன்று சற்று நேரத்தில் பாராளுமன்றில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க படவுள்ளது ,இந்த
அறிக்கையின் பின்னர்
இலங்கையில் பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்
இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்
தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்
முடிவாக உள்ளது
வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.
அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை
தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.
தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர்.
விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
சூர்யா – விஜய்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று
வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.
சூர்யா – விஜய்
இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில்
படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று
வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய 288 பேர் – கடற்படையால் மீட்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கிய 288 மக்களை தாம் மீட்டு கரை சேர்த்துள்ளதாக இலங்கை
கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் படகுகளுடன் மீட்பு மற்றும் உதவி பணிகளில் தம ஈடுபட்டுள்ளதாக சிங்கள கடற்படை
தெரிவித்துள்ளது
மனைவியை அடித்து கொன்ற கணவன்
மனைவியை அடித்து கொன்ற கணவன்
இலங்கை மாத்தறை பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ள
து
இதனால் ஆத்திரமுற்ற கணவன் பொல்லு ஒன்றினால் மனைவியை தாக்கி படுகொலை
செய்துள்ளார்
தற்போது கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறான குற்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 212,030 குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
கூட்டமைப்பு எம்பிக்கு கொரனோ
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுள்ளார்
மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு
மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம்
ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன்
லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் – டோவினோ தாமஸ்
‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின்
மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய்
பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா
சூர்யா – சிவா
ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை
ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சோனியா அகர்வால்
சோனியா அகர்வால் – விமலா ராமன்
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையிலும்
காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில்
தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.












