சிறிதரன்
Posted in Uncategorized

துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video

துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்

பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்

இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே

காணப்படுகின்றார்- சி.சிறீதரன்

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/

    உயிர் குடிக்கும் டிப்பர்
    Posted in இலங்கை செய்திகள்

    உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

    உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்

    கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில், இன்று (01) மாலை 5.30 மணியவில் இடம்பெற்ற விபத்தில்

    இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

    வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த

    மூவர், எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதையடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.

    இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    விபத்தில், பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), அதே

    இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

    ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன்

    படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

    மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடயில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

    டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்துசெல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று

    கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

      சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு - பதட்டம் அதிகரிப்பு
      Posted in Uncategorized

      சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு

      சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு

      அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

      அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

      இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

      அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை

      வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

      புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

      இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.

      இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான

      முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

      இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

      லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

        Posted in சினிமா

        புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

        புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

        நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

        புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
        சிவகார்த்திகேயன்
        நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது

        . இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது.

        இந்நிலையில் , சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

        புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை

        பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

        தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன்

        சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

          Posted in சினிமா

          ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

          ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

          தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.

          ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்
          விக்னேஷ் சிவன் – நயன்தாரா


          இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின்

          வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா

          மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

          நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

          மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.

          அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

          இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

            கொரானா
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்

            இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்

            இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த

            தினம் 17 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 499 பேர் பாதிக்க பட்டுள்ளதாகக் சுகாதார

            அமைச்சு தெரிவித்துள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு

              வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு

              கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய

              சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட

              வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.

              இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

              கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்பட்ட

              நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுகை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.

              எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும்

              தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              மேலும் இச் சேவையின் முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம்,

              விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம்,

              ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம், அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு

              மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு

              திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் அறிவித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்

                ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்

                யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த


                ரயிலுடன் கார் ஒன்று மோதி சிதறியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்

                கார் பலத்த சேதமடைந்துள்ளது

                ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது

                  பெண்கள்
                  Posted in இலங்கை செய்திகள்

                  நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

                  நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

                  ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.

                  நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

                  இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

                  மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

                  ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.

                  இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

                  உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.

                  மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.

                  காணாமல் போனவர்கள்

                  எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14
                  132 மடம் கொன்வன்ட் வீதி யாழ்ப்பாணம்

                  வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய – வத்தளை

                  காணி
                  Posted in இலங்கை செய்திகள்

                  திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

                  திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

                  புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை

                  பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

                  காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான

                  காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

                  எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.

                  ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான

                  விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

                    இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்

                    புத்தாண்டு விடியலை முன்னிட்டு புதுவருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில்

                    ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை எடுத்துக்காட்டுவதற்காவும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின்

                    தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

                    இதன்போது மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அனைத்து முப்படை வீரர்களின் நினைவாக முதலில் அஞ்சலி செலுத்தினார்.

                    குணமடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் நலமுடன் இருக்க பிராத்தனை செய்தார். மேலும் முப்படையினர்களினால் மீட்புபணிகளில் ஆற்றப்படும் சிறந்த

                    பணிகளை இராணுவத் தளபதி பாராட்டியதுடன் அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

                    ‘2021 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, நீங்கள் மற்றும் எங்கள் சகோதர சேவைகள், சொந்த உயிருக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், தேசத்தின் சிறந்த

                    நலனுக்காக எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ‘முடியாதென்று எதுவும் கிடையாது’. என்ற உறுதிமொழியுடன் தொற்றுநோயின் மோசமான நிலையைக்

                    கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கு கடற்படை பெரிதும் பங்களித்துள்ளது.

                    ஜனாதிபதி மற்றொரு சவாலான சேதனை பசளை உற்பத்தியை ஆரம்பித்து அதற்காக தொழில்முறை வீரர்களாகிய எமக்கு இப்பணியை ஒப்படைத்துள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் பசுமை வேளாண்மை நடவடிக்கை மையத்தின் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்,

                    மேலும் இந்த புதிய சவாலான பொறுப்பில் உங்கள் பங்கேற்பு நாட்டை பசுமையாக மாற்றும் அதே வேளையில் விரும்பிய இலக்குகளை அடைய உதவும், ‘என்று அவர் குறிப்பிட்டார்.

                    போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை எமது மண்ணில் இருந்து ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

                    ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு

                    மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும்

                    சமாந்தர முக்கியத்துவமானது. அந்த தேசிய பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது

                    26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது

                    முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள்

                    கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

                    இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள கோட்டாபய முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து

                    மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 89 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

                    மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்

                    கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

                    இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூ.26 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                    இந்த முழு நடவடிக்கையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விஸ்வமடு தெற்கு,

                    உடையார்கட்டு, உடையார்கட்டு தெற்கு மற்றும் மூங்கிலாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

                    கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட

                    நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது

                      Posted in சினிமா

                      சிம்புவுடன் இணையும் நடிகை

                      சிம்புவுடன் இணையும் நடிகை

                      சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய புதிய அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

                      இறுதி கட்டத்தில் சிம்புவுடன் இணையும் நடிகை
                      சிம்பு – சிட்தி இட்னானி


                      மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல

                      வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

                      இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்

                      இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் மற்றொரு கதாநாயகியாக சிட்தி இட்னானி இணைந்திருக்கிறார்.

                      பாவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிட்தி இட்னானியை படக்குழுவினர் இன்று வரவேற்பு போஸ்டர்

                      ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, சிட்தி இட்னானி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

                        Posted in சினிமா

                        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்

                        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்


                        முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்
                        விஜய்


                        விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                        இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                        அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை

                        கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்

                        . செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

                          Posted in சினிமா

                          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

                          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

                          தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

                          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகையின் புகைப்படம்
                          கணவருடன் ஸ்ரேயா


                          தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி,

                          விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி,

                          தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய

                          தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

                          அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும்

                          வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி

                          இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

                            Posted in சினிமா

                            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

                            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

                            சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.

                            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி – அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
                            சாய் பல்லவி


                            பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து

                            அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில்

                            நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

                            சாய் பல்லவி

                            இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில்

                            உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் படத்தை கண்டு ரசித்துள்ளார்.

                            யாரும் அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த

                            வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

                              Posted in Uncategorized

                              இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                              இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                              இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்


                              இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14,962 ஆக பதிய பெற்றுள்ளது

                              தொடர்ந்து நோயானது பரவி வருவதால் நாடு மீளவும் முழு அடைப்புக்கு செல்ல கூடும் என நம்ப படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்

                                அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா

                                பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

                                பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                                  Posted in Uncategorized

                                  இலங்கையில் கொரானாவுக்கு 21 பேர் மரணம்

                                  இலங்கையில் கொரானாவுக்கு 21 பேர் மரணம்


                                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 21 பேர்

                                  பலியாகியுள்ளனர் ,மேலும் 1,597 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                  தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் சில தடைகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ

                                    பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ

                                    கிளிநொச்சி பளை பகுதி காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கொரனோ நோயானது

                                    தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுளளார்

                                    இவர் சென்று வந்த இடங்களுக்கும் இவர் குறித்த நோயினை பரப்பி இருப்பார் என மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்