Posted in Uncategorized

லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை 6.00 மணியளவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு குறித்த சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகநபர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

    Posted in Uncategorized

    பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

    பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

    யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம்: சிறீதரன் எம்.பி!


    யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ்

    தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
    பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்தபோதே அவர்

    மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,


    பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 3500க்கும் மேற்பட்ட தொற்றா நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிப்படை

    வசதிகள் இருந்தும் ஒரு வைத்தியரும் மற்றொரு பல் வைத்தியரும் அவருடன் இணைந்த 4 ஊழியர்களுடனேயே வைத்தியசாலை இயங்கிவருகின்றது.


    வெளிநோயாளர் பிரிவு இயங்கி வந்தாலும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


    ஐந்து ஏக்கர் காணி பரப்பிலே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


    வைத்தியசாலை பாவனைக்காக பொதுமக்களால் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான அடிப்படை வசதிகள் இருந்தும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை முழுமையான சேவையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


    தரம் இரண்டிலிருந்து இந்த வைத்தியசாலை தரம் ஒன்றிற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் வைத்திய சேவைகளை பெறுவதற்காக அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில்,

    அருகிலேயே இந்த வைத்தியசாலையை தரம் மாற்றினால் ஆளணியும் உயர்வதுடன்
    இந்த பகுதி மக்கள் இங்கேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


    உரிய தரப்புகளுடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.
    அத்துடன் மாதகல் சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பண்டத்தரிப்பு

    பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் பண்டத்தரிப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன் பாடசாலைகளின் தேவைகள் மற்றும் தேவாலயத்தின் தேவைகள்

    தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு பாடசாலையின் முதல்வர்களாலும் தேவாலயத்தின் அருட்தந்தையினாலும் விளக்கமளிக்கப்பட்டது.


    நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த விஜயத்தின் போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்

    ஜோன் ஜிப்ரிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது

      புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது

      மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் ஒருவர் புலிகள் படங்களை இணையத்தில் பதிவேற்றினார் என்ற

      குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

      இவ்வாறு காது கைது செய்ய பட்டவர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் ,அப்பாவி தமிழர்கள்

      பயங்கரவாதிகளுக்கு உதவினார் மற்றும் அவர்களை மீள் உருவாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில்

      சிங்கள படைகள் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு

        சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு

        தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார்.

        அத்துடன், தமிழ்க் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் கூறினார்.

        ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக, நேற்று முன்தினம் (28), அவர் அனுப்பி வைத்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

        அவ்வறிக்கையில், தங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் தமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

        தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13ஆவது திருத்த சட்டத்தை இதனால்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

        அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம் எனத் தெரிவித்துள்ள அவர், அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம் எனவும் இன்று எமது நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியதாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள.கால்.

        “தீர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை.

        “தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும்.

        “அதனால்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது.

        “ஆகவே, ஏற்கெனவே இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்” எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்

          பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்

          அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை

          மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

          அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ

          மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

          2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள்

          நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துகொண்டே கூறுகிறார். ஆனால்

          உண்மையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

          நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம்போல வெளிநாடுகளுக்கு சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை எனவும் அவர் கூறினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            டுபாய் பறக்கும் மகிந்தா

            டுபாய் பறக்கும் மகிந்தா

            எதிர்வரும் இரண்டாம் திகதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா டுபாய் செல்லவுள்ளார் ,


            அங்கு செல்லும் இவர் இருநாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவார்

            எனதெரிவிக்க படுகிறது ,கொள்ளையடித்த பணத்தில் பல முதலீடுகள் டுபாயில் மகிந்த

            வைத்திருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை

            கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை

            கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

            கண்டாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

            கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சம்மேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

            இதன்போது காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத்திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர் வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.

            அமைச்சர் சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

            விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உயர்ந்தபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

            கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொடுத்தார்.

            நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

            பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது

            கைது செய்யப்பட்ட கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை தொடர்ந்து

            விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

            ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

            பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்

            கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              காணிகளுக்கான உறுதி வழங்க நடவடிக்கை

              காணிகளுக்கான உறுதி வழங்க நடவடிக்கை

              காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ‘காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு’ என்ற வேலைத்திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

              இதன் கீழ் கம்பஹா, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில், பல வருடங்கள் பணம் செலுத்தியும்

              இதுவரையிலும் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு நேற்றும் (27) இன்றும் (28) காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

              காலி மாவட்டத்தில் 300 பேருக்கும், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 500 பேருக்கும்

              காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

              காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வீட்டு வாசலுக்கே காணி

              உறுதிப்பத்திரம்’ திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 3000க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

              பல வருடங்களாக பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பதிரங்கள்

              கிடைக்கப்பெறாதவர்களுக்கு, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்குடன், இந்த வேலைத்திட்டம்

              நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டு (2021) ஐயாயிரம் உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

              இத் திட்டம் , நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, தற்போது 20 மாவட்டங்களில்

              உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் 5,000 காணி உறுதிப்பத்திரங்கs; வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                Posted in சினிமா

                பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

                பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

                சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

                வாவ்… வாட்ட மூவி… பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி
                ரஜினிகாந்த்


                இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கபட்ட திரைப்படம் 83. இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி, ஜீவா

                போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து

                வந்தது. அதன்பிறகு இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து அனைவரையும் அந்த படத்தை பற்றி முணுமுணுக்க வைத்தது.

                இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

                அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் 83 படம் குறித்து அவருடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

                அதில் அவர் கூறியிருப்பது, வாவ் வாட்ட மூவி, அற்புதமான திரைப்படம் படத்தில் பணியாற்றிய

                அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.

                  Posted in சினிமா

                  இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்

                  இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்

                  தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

                  ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்
                  ஷ்ரத்தா ஸ்ரீநாத்


                  விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.

                  இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.

                  இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர்

                  இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

                  போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி

                  வரும் ‘கலியுகம்’ திரைப்படம் இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதால் இத்திரைபடத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு

                    வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு

                    இலங்கையில் நாள் தோறும் பரவலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது

                    ,இதனால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

                    கடந்த தினம் கட்டன் பகுதியில் வீடொன்றில் மேற்படி சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது ,தேநீர்

                    வைப்பதற்கு அடுப்பை எரிய வைக்க முற்பட்ட பொழுது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                    இது கோட்டா அரசினால் திட்டமிடப்பட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்ய பட்ட ஒன்றாக கூற படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 11 லட்சம் தடுப்பூசிகள்

                      நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 11 லட்சம் தடுப்பூசிகள்

                      இலங்கைக்கு மேலும் 11 லட்சத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் இன்று வந்தடைந்துள்ளன


                      மேற்படி ஊசிகள் விரைவில் பகிர்ந்து மாவட்ட ரீதியாக மக்களுக்கு செலுத்த படும் என ஆளும்

                      அரசு தெரிவித்துள்ளது
                      மேலும் பரவி வரும் நோயினை கட்டு படுத்த முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ள படும் என

                      தெரிவிக்க பட்டுளள்து

                        Posted in Uncategorized

                        கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு

                        கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு

                        கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் தினத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த

                        பாதர் மார் கார் ஒன்று அதே சாலையில் அதிக போதையில் நின்ற தெரு ரவுடி கும்பலினாலே வழிமறிக்க பட்டது

                        அதற்கு நிற்க மறுத்து செல்ல முற்பட்ட இவர்கள் மீது குறித்த குழுவினர் சரமாரியாக தாக்குதலை

                        நடத்தினர் ,இதில் வண்டி கண்ணாடிகள் உடைத்து நொறுக்க பட்டதுடன் வாகனம் பலத்த

                        சேதமடைந்துள்ளது ,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி

                        சுட்டு கொலை செய்ய பட்ட 4 பொலிசாருக்கு அஞ்சலி

                        திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நான்கு பொலிசாரின் பூதவுடல்களுக்கு பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன (28) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

                        அவர்களின் குடும்பங்களுக்கு பொலிஸ்மா அதிபரினால் பணத்தொகையும் ,நன்கொடையும்

                        வழங்கப்பட்டுள்ளன. மேலும், பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய பதவி உயர்வு

                        அடிப்படையில் தற்போது உள்ள தரத்தில் இருந்து அடுத்த தரத்துக்கு பதவி உயர்வும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

                        அத்துடன், உயிரிழந்த பொலிசாரின் வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர், இலங்கை பொலிஸ் சார்பாக அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

                        திருக்கோவில பொலிஸ் நிலைய சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியான,,கே. எல். எம் அப்துல் காதர்,

                        பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஏ. நவிநாத் மற்றும் டி. பி. கே. பி. குணசேகர மற்றும் பொலிஸ்

                        கான்ஸ்டபிள் சாரதி டி. எம். டி. எச். புஷ்பகுமார ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in சினிமா

                          பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                          பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                          கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

                          பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                          தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.

                          நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம்

                          நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை

                          குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்.

                            Posted in சினிமா

                            பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை

                            பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை

                            தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை பாலிவுட்டில் தடம் பதிக்க தயாராகவுள்ளார்.

                            பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
                            அமலா பால்


                            மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில்

                            ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

                            பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார்.

                            தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

                            அமலா பால்

                            இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட்

                            நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

                            மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில்

                            உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடல்

                              வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்

                              நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.


                              அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும்.

                              உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே

                              வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

                              வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்:
                              அபுஜா / நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

                              பிராங்பேர்ட் / ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,

                              நிக்கோசியா / சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்

                              தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத

                              உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள

                              உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.

                              இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.

                              செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக / பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

                              வெளிநாட்டு அமைச்சு,

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க

                              இலங்கை வங்கிகளுக்கு வரி – கொஞ்சம் இதை பாருங்க

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை

                                கிளிநொச்சியில் வாலிபர் வெட்டி கொலை

                                கிளிநொச்சி பூநகாி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு

                                குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த இளைஞா் ஒருவா் கூாிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா்.

                                குறித்த சம்பவம் நேற்று மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                                சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது.

                                இதேபோல் குருநகாில் இருந்து படகு மூலம் மற்றொரு குழு அங்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையிலும் உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறிய நிலையில்

                                ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சோ்ந்த ரஞ்சன் நிரோசன் (வயது22) என்ற இளைஞன்

                                கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் உயிாிழந்துள்ளாா்.

                                சம்பவத்தையடுத்து குருநகாிலிருந்து படகு மூலம் அங்கு வந்திருந்த குழு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.