Author: நலன் விரும்பி
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் தமிழரசு கட்சியில் வாலிபர்
முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை
தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர்
வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.
கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி
கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள்
பங்கேற்க வழிவகை செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர்,
மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர்
சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏப்.30 முதல் பொது இடங்களில் தடை
தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏப்.30 முதல் பொது இடங்களில் தடை
ஏப்ரல் 30 முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி
போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட
வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று (05) காலை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களில் காதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொது இடங்கள்’ மற்றும் ‘முழு தடுப்பூசி’ பற்றிய வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம்
கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம்
கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின்
தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதை தெரிவித்தார்.
தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும்.
மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டுடன் சிக்கிய நபர்
வெடிகுண்டுடன் சிக்கிய நபர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து
நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
உக்கிரேன் ,ரசியாவுக்குள் அதிக முறுகல் இடம்பெற்று வரும் நிலையி தற்போது உக்கிரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஜெர்மனியில் தரை இறக்க பட்டுள்ளன
உக்கிரேன் ஜெர்மன் எல்லை மிக அருகில் இந்த படைகள் தரை இறக்க பட்டுள்ளன
அவசர படை உதவிகளுக்கு இவை இங்கு வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
லண்டன் Medway, near Cannon Lane in Tonbridge. பகுதி ஆற்றுக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்
அவசர உதவி மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொழுதும் அவரை
காப்பாற்ற முடியவில்லை ,அவர் இறந்துவிட்டார்
குறித்த நபராது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா
காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா
மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா
காஜல் அகர்வால்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும்
வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5
அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,
பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா
வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்
சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்
அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல் – வைரலாகும் புகைப்படம்
கமல்
சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கித்தில் வெளியாகியுள்ள
திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தில் ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராதன்
இசையமைத்துள்ள இப்படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில்
படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு கமலுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.
உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி தங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அமெரிக்க படை சுற்றி வளைத்த போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி, தனது குடும்பத்தினருடன் அந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்தார்.
அமெரிக்க படையினரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த அவர், குடும்பத்தைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி அவர் தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த தாக்குதலில் கட்டிடம் கடும் சேதம் அடைந்தது. அந்த கட்டிடத்தில் அமெரிக்க படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.
ஈராக்கின் மொசூல் உள்பட பல்வேறு நகரங்களிலும், சிஞ்சார் மலைப்பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்பு படையினரையும், பொது மக்களையும் கொடூரமாக கொன்றனர்.
இதையடுத்து அப்போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளை ஈராக் படையினர் மீட்டனர்.
சிரியாவிலும், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு படையினர் பயங்கரவாதிகளை விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும்
பயங்கரவாதிகள் தலை தூக்க தொடங்கினர். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க படை தாக்குதலின் போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தலைவர்களும் ஒரே மாதிரி குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் -அணைவரும் மரணம்
இறந்தவர்களில் 5 பேர் சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான விமானம்
பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.
தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.
விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு
இலங்கைக்கு பிரிட்டன் கடும் கண்டனம் – சுதந்திர தின நாளில் அறிவிப்பு
இலங்கையில் 2020 மற்றும் 2021 ஆண்டளவில் பாலியல் ,கடத்தல் மற்றும் சித்திரவதைகள் என்பன இடம்பெற்றுள்ளதாக தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தொனியா பாராளுமன்றில் பேசியுள்ளார்
மேலும் கோனம்வெல்த் வெளிநாட்டு அமைச்சும் ,சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் என்பன கடுமையான கண்டனத்துடன் அறிவித்துள்ளன
கோட்டா ஆட்சியில் மக்கள் நாடளாவிய ரீதியில் பலமாக பாதிக்க பட்ட வண்ண உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
80500 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இலங்கையின் 74 வைத்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தில்
80500 க்கு மேற்பட்டவர்களுக்கு பதவிஉயர்வு வழங்க பட்டுள்ளது
இவ்விதம் வழங்க பட்டவர்களில் 480 உயர்தர அதிகாரிகள் ,இவர்களே முள்ளிவாய்க்கால்
அழிவின் முக்கிய சூத்திரதாரிகள் என்பது குறிப்பிட தக்கது
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாள் – சுபீட்சமான தாய் நாடு’ என்ற தொனிப்பொருளில் ,இலங்கையின் 74ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன.
கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தேசத்தின் அபிமானத்தைகாக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைபாடுகளுமின்றி கம்பீரமானதாகவும் எளிமையான முறையிலும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை சுதந்திர தின அணி வகுப்புகளில் 3,463 இராணுவத்தினரும் 919 கடற்படையினரும் 804 விமானப் படையினரும் 336 பொலிசாரும் 282 பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் 437 சிவில் பாதுகாப்புப் படையினருமாக மொத்தமாக 6,500 முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் அணி வகுப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.
விமானப் படையினரின் விமான சாகசங்களும் நடைபெறவுள்ளன. வழமை போன்று இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படையின் அணிவகுப்புடன் முப்படைகளின் பல்வேறு வகையான கவச வாகனங்களும் இயந்திரங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து தலைவர்களையும் நினைவு கூர்ந்து இம்முறை சுதந்திர தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலுள்ள உருவச்சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
சுதந்திரதின நிகழ்வுகளில் இம்முறை பொது மக்கள் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன் கொழும்பு 07 சுதந்திர சதுக்க பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் 21 வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் அதற்கான மாற்றுவழிகளை வாகன பயன்படுத்துமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வுகளில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புகள் இடம்பெறுவதுடன் கலை கலாசார அம்சங்களும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன. பாடசாலை மாணவ மாணவிகள் ஜய மங்கள கீதம் இசைப்பதுடன் அவர்களுக்கு மேலதிகமாக தேசிய மாணவர் படையணிகளைச் சேர்ந்த 259 மாணவ மாணவியர் பங்கேற்கும் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களும் நடை பெறவுள்ளன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதுடன் தேசிய கீதத்தையடுத்து பாடசாலை மாணவ மாணவிகளின் ஜய மங்கள கீதம் இசைக்கப்படும். அத்துடன் நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. அதனைத்தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தனதுசுதந்திர தின பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.
இம்முறை தேசபிதா டி.எஸ். சேநானாயக்கவிற்கு மேலதிகமாக தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அவருடன் இணைந்து போராடிய ஏனையவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர்சமல் ராஜபக்ஷ தெரிவித்தார
இதேவேளை, கொழும்பில் நடைபெறும் பிரதான நிகழ்வுகளுக்கு மேலதிகமாக சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். விசேட நடவடிக்கைக்கான செயலணி மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரதின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில் இணைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடலேபிள்களுடன் காலை 7.30மணிக்கு முதல் வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இலங்கை கடற்படையினரால் தாய் நாட்டிற்காக கஜபாகு கப்பலிலிருந்து 25 பீரங்கி வேட்டுக்கள் காலி முகத்திடலில் தீர்க்கப்படவுள்ளன.
இன்று தமிழர்களின் கரிநாள் – தமிழர்கள் கருப்பு கொடி போராட்டம்
இன்று தமிழர்களின் கரிநாள் – தமிழர்கள் கருப்பு கொடி போராட்டம்
ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்
வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு
மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்
பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
துரத்தும் டெங்கு – 8000 பேர் பாதிப்பு
துரத்தும் டெங்கு – 8000 பேர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் நாடளாவிய ரீதியில்
டெங்கு நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 8000 க்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்றுப்புற சூழல் சுத்த இன்மை காரணமாகவே அதிக நோயாளர்கள் பாதிக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை
எரிபொருள் நெருக்கடிக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் ,கனிய வள
உற்பத்தியை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 டொலர் மில்லியன்
அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வில் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் கலந்துக்கொண்டார்.
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் கையளிப்பு…
06 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய
இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்றது.
இதற்காகச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 250 மில்லியன் ரூபாயாகும்.
பசுமை விவசாயத்துக்காக விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படும் “காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசனத்
திட்டம்” ஆகியவற்றின் கீழ், கமநலச் சேவை நிலையங்களுக்கு இந்த விவசாய இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்யும் இயந்திரங்கள், களை பறித்தல் இயந்திரங்கள், நாற்று நடும் இயந்திரங்கள், 45 குதிரை வலுவுடைய டிரெக்டர் வண்டிகள் உள்ளிட்ட 7 வகையான
இயந்திரங்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன. வடக்கு, வடமத்தி, கிழக்கு, வடமேல்,
ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு உரித்தான 11 மாவட்டங்களில் அமைந்துள்ள 47 கமநலச் சேவை நிலையங்களுக்கே இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்
டீ.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரும் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு
- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது
- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டன் கென்ட் Horsmonden Road in Brenchley பகுதியில் காலை பத்து முப்பது
மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,இதன் பொழுது அந்த காரை செலுத்தி சென்ற [பெண் அதற்குள் சிக்கி கொண்டார்
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காரின் கதவுகளை வெட்டி அதற்குள் சிக்கி இருந்த பெண்ணை மீட்டனர்
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பெண்மணி Tunbridge Wells மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான
இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை

























