இன்று தமிழர்களின் கரிநாள் – தமிழர்கள் கருப்பு கொடி போராட்டம்
ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்
வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு
மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்
பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு











