Posted in Uncategorized

லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

கடந்த தினம் லண்டன் Wheeler Street, Maidstone. பகுதியில் காவல்துறை வான் ஒன்று


மோதி சிதறியதில் அந்த வண்டியில் பயணித்த இரு காவல்துறை ஊழியர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்

இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


எனினும் இவர்களுக்கு ஆபாயகரமான காயங்கள் ஏதும் இல்லை என கென்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

    Posted in Uncategorized

    தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

    தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

    Colorado பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த

    மக்கள் மீது மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்


    இதன் பொழுது அங்கிருந்த மக்களில் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

    தாக்குதல் இடம்பெற்ற வேளை இருபது பேர் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

    ,எனினும் அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி தப்பி கொண்டனர்

    இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

    ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

    ஈராக்கின்Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
    தொடரணியை இலக்கு வைத்து
    கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இதில் அமெரிக்கா படைகளின் கவச வண்டிகள் சிதறின

    எனினும் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை அமெரிக்கா படைகள் தெரிவிக்கவில்லை

    ஈராக்கில் தொடராக அமெரிக்கா இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

      பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

      ஆப்கானிஸ்தான எல்லையில் பயணித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த
      ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

      தலிபான்கள் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தொடராக பாகிஸ்தான் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

        Posted in சினிமா

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

        லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

        இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து உருக்கம்
        வைரமுத்து


        பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை

        8.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

        ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்

        . அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

        அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

        “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த

        காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை

        வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின்

        வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

          Posted in சினிமா

          கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

          கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

          பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

          கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்
          யாஷிகா ஆனந்த்


          தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில்

          முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.

          கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

          அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள்

          கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார்

          யாஷிகா. யாஷிகாவின் இந்த துணிச்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

            கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

            இலங்கை கடல் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது ,இவ்விதம்

            இலங்கை சுதந்திர தின நாளில் வெள்ளைவத்தை பகுதி கடலில் காணாமல் போன் இருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

            இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் மாலைதீவை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
            இவை திட்டமிட்ட கொலைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

              Posted in Uncategorized

              இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

              இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

              இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்

              மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

              லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.

              தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.

              சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.

              2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது

                Posted in இலங்கை செய்திகள்

                வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்

                வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்

                கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

                மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

                அவர்கள் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறைவாகவும்,

                கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

                  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

                  தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

                  வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                  சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                  சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    திதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு

                    புஸ்ஸல்லாவ நிவ்மெல்போட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு பிரதம குருக்கள் ஞானவரத

                    ஐயப்பன் தேவஸ்தான பீடாதிபதி சிவஸ்ரீ க.மஹேஸ்வர குருக்கள் அவர்களின் தலைமையில் (05.01.2021) நடைபெற்றது

                    இந் தெய்வீக நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் கலந்துக் கொண்டு ஸ்ரீ ஞானசக்தி விநாயகருக்கு எண்ணெய் சாய்வித்தனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                      கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                      காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் ஒருவனை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டவனை முன்று

                      தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

                      காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

                      இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.

                      இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாhஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச்

                      சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் இதில் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை

                      கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதுடன்

                      இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.

                      றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

                        கவிழ்ந்த கார்
                        Posted in உலக செய்திகள்

                        லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                        லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                        லண்டன் Nelson Road, Gillingham பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
                        தலைகீழாக கவிழ்ந்தது ,

                        அவ்வேளை ,சாரதி காரின் கூரைக்குள் சிக்கிய தவித்து கொண்டிருந்தார்

                        விரைந்து வந்த அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

                        ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒத்த விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

                          எடகோன்
                          Posted in Uncategorized

                          துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

                          துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

                          துருக்கிய நாட்டின் அதிபர் எடகோன் அவர் மனைவிக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது
                          கண்டறிய பட்டுள்ளது

                          இதனால அவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                            கண்ணிவெடியால்
                            Posted in Uncategorized

                            கண்ணிவெடியால் வெடித்து சிதறிய வண்டி -10 பேர் மரணம்

                            வெடித்து சிதறிய வண்டி 10 பேர் மரணம்

                            சோமாலிய Kismayo பகுதியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மினி பஸ்


                            ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது .இதன் பொழுது அதில் பயணித்த பத்து பேர்

                            பலியாகினர் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

                            பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,மேற்படி பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்

                              தன்ஷிகா
                              Posted in சினிமா

                              தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

                              தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

                              பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா முதல்முறையாக புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

                              தன்ஷிகாவிற்கு இது முதல்முறை
                              தன்ஷிகா


                              தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது முதல் முறையாக

                              இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மனோகரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

                              நவாஸ் அகமது இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன்,

                              குடந்தை முத்து இவர்களுடன் கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

                              தன்ஷிகா

                              இப்படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது கூறும்போது, ‘நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி. சிவாஜி கணேசன் நடித்து

                              மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

                              சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும்

                              திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

                                அட்லீ - நெல்சன் - லோகேஷ் கனகராஜ்
                                Posted in சினிமா

                                விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

                                விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

                                தமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்
                                விஜய்


                                தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும்

                                இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

                                விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லீ இயக்கி

                                இருந்தார். இந்த மூன்று இளம் இயக்குனர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் கிளிக் செய்திருக்கிறார்.

                                இந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள

                                பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

                                  Posted in Uncategorized

                                  லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

                                  லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

                                  லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு
                                  லாட்டரி சீட்டு

                                  கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர்

                                  வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது.

                                  பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது.

                                  இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                  இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 1 மில்லியன் திர்ஹம் ( ரூ.2

                                  கோடி ) பரிசு கிடைத்துள்ளது. கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரு, பரிசுத் தொகையை 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதில் ஒரு பகுதியை தன

                                  து ஏழை நண்பர்களுக்கு உதவுவதாகவும் கூறினார். நான் என் பெற்றோருக்கு கொஞ்சம் பணம் தருவேன். எங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக எனது மனைவி மற்றும் மகளுக்கு மீதியை சேமிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                  கடந்த ஆண்டு, துபாயில் ஓட்டுநராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்,

                                  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டு குலுக்கல் மூலம் ரூ. 40 கோடி ஜாக்பாட் வென்றது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை சுதந்திரதினம் …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல….photo in..!

                                    இலங்கை சுதந்திரதினம் …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல….!

                                    பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 4ஆம் திகதி(04-02-2022) தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்கள் உடன் இணைந்து தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும்
                                    ஒரு எழுச்சிப் போரட்டத்தை ஒழுங்கு செய்து நடத்தி இருந்தனர்.

                                    இந்த ஆர்பாப்ட்டாத்தின் போது இலங்கையின் சுதந்திரதினமானது இலங்கை …சிங்களவருக்கானதே ..தமிழர்களுக்கானதல்ல…என்ற எதிர்ப்பை அழுத்தமாக தெரிவித்தனர்.


                                    இந்த போராட்டாத்தின் போது புலம்பெயர் சமூகம் 13A திருத்த சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தெரிவித்தனர்.


                                    இலங்கை அரசு ஒழுங்கு செய்யும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் பங்கு பற்றுவோர் இலங்கையில் இருக்கும் அனைத்து
                                    ஒடுக்கப்படும் மக்களுக்கும் விரோதிகளே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


                                    புலம்பெயர் மக்களின் ஆதரவு இருக்கு என்று பொய் சொல்லி எங்களது பெயரில் தமிழ் மக்களின் உரிமைகளை விற்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை
                                    எனவும் அழுத்தமாக தெரிவித்தனர்.

                                    ஆர்பாப்ட்டாத்தின் போது போரட்டத்தை ஒழுங்கு செய்திருந்த போரட்டகாரர்களால்

                                    *அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்.

                                    *ஒற்றை ஆட்சியை நிராகரிபோம்

                                    *13A தீர்வல்ல – நாம் கோருவது பிரிந்து போகும் உரிமை உட்பட்ட சுய நிர்ணைய உரிமை.

                                    *நில ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்து.

                                    *போராட்ட செயற்பாட்டாளர்கள் மேல் வன்முறை செய்வதை உடனடியாக நிறுத்து.


                                    என்ற கோஷங்கள் முழங்க அழுத்தமாக கோஷமெழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

                                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்

                                    குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்

                                    நிகவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

                                    குறித்த பெண் கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தம்மிக்க பத்திரன (வயது – 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                    நேற்று குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

                                    குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                                    குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

                                    இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                                    இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.