Author: நலன் விரும்பி
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில்
ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட
ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும்,
அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும்
வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில்
யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.
அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம்,
சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்” – என்றார்
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில்
ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று
(20)ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்பதாக யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,
கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
30 கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் 8 பேர் கைது
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர்
விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் வரலாறு காணாத பெரும் புயல் வீசிய வண்ணம் உள்ளதால் தொடர்ந்து பேரழிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த புயலின் கோரத்தில் சிக்கி வீடுகள் ,மரங்கள் ,கடைகள் என்பன பாதிக்க
பட்டுள்ளன ,மேலும் அதிக மழை வீழ்ச்சியால் வெள்ள பேருக்கும் ஏற்பட்டுள்ளது

கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி
அமெரிக்கா மியாமி கடல் ப்குதிக்கு மேலாக பறந்த்து கொண்டிருந்த உலங்குவானூர்தி ஒன்று திடிரென கடலுக்குள் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர்
இதில் இருவர் காப்பற்ற பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .,இருவரும் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரியங்கா தேஷ்பாண்டே 96 ஜானுவாக களம் இறங்கியிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
96 ஜானுவாக களம் இறங்கிய பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா
பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதன்பின் பிக் பாஸ் சீசன் 5
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் கலந்து கொண்ட பிரியங்கா அவரின் தனித்துவத்தால் இப்போட்டியில் இரண்டாம் இடத்தை
பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் தொகுபாளினியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே – திரிஷா
திரிஷா – பிரியங்கா தேஷ்பாண்டே
இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 96 படத்தில் இடம்பெறும் திரிஷாவின் ஜானு
கதாப்பாத்திரத்தை போன்று உடை அணிந்து பதிவிட்டிருக்கிறார். இப்புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த
திரிஷா அவருக்கு பதிலளிக்கும் வகையில் “ஹா ஹா லவ்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து ராணிக்கு கொரனோ
இங்கிலாந்து ராணிக்கு கொரனோ
பிரிட்டன் ராணி எலிசபெத் கொரோனா நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயின் தாக்குதலை அடுத்து வருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது ,இவரது கணவர் பிலிப் இறந்துள்ள பொழுதும் அவரது
சடலம் மெழுகில் வைத்து பாதுகாக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் கடந்த மூன்று திணைகளாகி அதிக புயல் வீசிய வண்னம் உள்ளது ,இதனால் வரலாறு காணாத பேரழிவை பிரிட்டன் சந்தித்துள்ளது
தற்போது அதிவேக நெடுஞ்சாலையும் முக்கிய நுழைவாயிலாக அமைய பெறும் Dartford Bridge தற்போது அடித்து பூட்ட பட்டுள்ளது
கால நிலை மீள் நிலைக்கு திரும்பியதும் இதன் ஊடான போக்குவரத்துக்கு அனுமதிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இந்த புயல் லொறிகளை கூட கவிழ்த்தமை குறிப்பிட தக்கது
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்
கள்ள கணவருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தூ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
தீயில் எரிந்து அழிந்த 7 கடைகள்
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடபுஸ்ஸலாவை நகரில் நேற்று (19) மாலை ஏழு கடைகள் தீபிடித்து முற்றாக எரிந்துள்ளதாக.உடபுஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பல வருடகாலமாக இந்த கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததாகவும், இவ் இடம் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபைக்கு சொந்தமான இடத்தில், இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குறித்த இடத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என
அறிவித்தல் விடுக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றி முட்கம்பி வேலிகளையும் பிரதேச சபை அமைத்திருந்தது.
எனினும் இதனையும் மீறி, தற்காலிக கடைகளை அமைத்து தமது நாளாந்த வர்த்தகத்தை குறித்த கடைகளின் உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்ததுடன்,
முறையான மின்சார இணைப்பையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த இக்கடைகள் நேற்று (19) மாலை திடீரென தீப்பற்றி எறிந்து முற்றாக எறிந்து நாசமாகியுள்ளதுடன், பாரிய
நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை உடபுஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
வாய்ச் சண்டை முற்றல் – எதிராளி அடித்து கொலை
.காங்கேயனோடையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காங்கேயனோடை வாவிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை 13யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43வயதுடைய உதுமாலெவ்வை முகம்மட் இல்பான் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் சம்பவம் இடம் பெற்ற இடத்தினை பார்வையிட்டார்.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியாசலைக்கு சென்று அங்கு உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனைகளை மேற் கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரான காங்கேயனோடையைச் சேர்ந்த கையூம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் எனவும் அன்மையிலேயே இவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழாவைப் பார்க்கச் சென்ற சிறுவனே இதுவரை வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவன் இறுதியாக சாம்பல் நிற டீசேர்ட்டும் நீல நிற டெனிம் காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் மாத்தளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ள சிறுவனின் பெற்றோர், சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலிருக்கும் பொலிஸ்
நிலையத்துக்கோ அல்லது 070-7778940 என்ற அலைபேசிக்கோ அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நோய் பரவல் -சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
.நோய் பரவல் – சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருப்பதாகவும், 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும் அத்தோடு அதில் நான்கு போர் மரணத்தை தழுவியிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த டெங்கு நோயின் பரம்பலில்
முக்கிய விடயமாக காணப்படுவது டெங்கு நுளம்பை அழித்தல் என்னும் விடையத்தில் நாங்கள் அனைவரும் விளங்கிக்கொள்ளுதல் அவசியமானதெனவும், அதிலும் குறிப்பாக
மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டொங்கு நோயாளர்களை இனங்கண்டிருப்பதால், முக்கியமாக நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்பை அழிக்கும் செயற்பாட்டை தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாக இருப்பதாக
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதன்போது தெரிவித்துள்ளார்.
மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி
மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.”
-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் எனப் பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன்போது வன்னிப் பிரதேசத்துக்கு வந்து பல சேவைகளைச் செய்துள்ளேன். 2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.
ஜனாதிபதியாக இருந்தபோது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்றுதான் பார்க்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளைப் பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்குச் சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்துக்குத் தேவையான பெருட்களுக்குத் தட்டுபாடு இருக்கவில்லை. வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கின்றார்கள். விவசாயிகளுக்காகப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். உங்களிடத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சினை இருக்கின்றது. மின்சாரத் தடை ஏற்படுகின்றது. பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்குச் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாகச் செல்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.
நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம்.
எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்குக் கொடுத்துள்ளோம். இந்த அரசின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தட்டிக் கேட்கப் பின்னிற்கமாட்டோம்.
உங்களுக்கு உள்ள சகல பிரச்சினைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் கட்சி, அரசு என்ற வகையில் நாங்கள் சந்தோஷமடைய முடியும். மக்களுடன் பேசும்போது அவர்கள் பல கவலைகளைக் கூறுகின்றார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சினையாக இருக்கின்றது. கஷ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புப் பிரச்சினை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை” – என்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்
உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்
மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று
வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்
உக்கிரேன் Luhansk, பகுதியைக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் ஏற்பட்ட
சேத விபரங்கள் பலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து ரசியா திடீர் முற்றுகை தாக்குதலை நடத்தி உகிரேனை தனது காட்டு
பாட்டுக்குள் கொண்டு வரலாம் அல்லது தனது பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு நிறுவலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஆட்சி கவிழ்ப்பு அல்லது நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற
நடவடிக்கையில் ரசியா ஈடு படும் என்றே எதிர் பார்க்க படுகிறது
ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
.ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
ஏவுகணை சோதனை
ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.
எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
போர் பயிற்சி
இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷியா கூறி உள்ளது.
எதிரிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் படைகளின் செயல்திறனை முழுமையாக வெளிப்படுத்துவதே இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் என ராணுவ தளபதி வாலரி தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புதினிடம் தெரிவித்தார். ரஷிய அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் புதின், இந்த பயிற்சிகளை பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்… இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால்
அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.
முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு
கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை
ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டாராம்.
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில்
நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.
இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின்
இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்








