Author: நலன் விரும்பி
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு
நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க
அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு
600 அகதிகளுடன் இத்தாலிக்குள் நுழைந்த அகதிகள் படகு
அறுநூறு அகதிகளை தாங்கிய படி இத்தாலிக்குள் மீன் பிடி படகு ஒன்று கரை ஒதுக்கியுள்ளது
இதில் ஒருவர் பலியாகியுள்ளார்
ஏனையவர்கள் இத்தாலிய கடல் படையால் காப்பற்ற பட்டு அழைத்து செல்ல பட்டுள்ளனர்
பெரும் உயிரிழப்பு தடுக்க பட்டுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன
காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்
காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்
பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 30ஆம் தேதி கௌதம் கிச்சல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார்.
காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்… வைரலாகும் புகைப்படங்கள்
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண வாழ்க்கையில், புகுந்து விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக்
கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
காஜல் அகர்வால்
இந்தியன் 2 படம் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போக, அந்தப் படத்திலிருந்தே விலகிவிட்டார் காஜல் அகர்வால். ஏன் விலகினார் என்று பலரும் கேட்ட நிலையில் அதன்
பிறகுதான் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்தியன் 2 படத்தில் காஜலுக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் ஆனார்.
காஜல் அகர்வால்
கணவருடன் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம்
நடந்தேறியிருக்கிறது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா
.ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா
தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகிலா, தனியார் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா
ஷகிலா
தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது
படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஷகிலாவின் வாழ்க்கை
கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
ஷகிலா
இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள்
திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோவை ஷகிலா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை
ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 ரஷ்ய வங்கிகள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்பியதை அடுத்து, 5 ரஷ்ய வங்கிகள் மற்றும் 3 பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜெனடி டிம்சென்கோ, போரிஸ் ரோட்டன்பெர்க் மற்றும் இகோர் ரோட்டன்பெர்க் ஆகிய மூன்று பேரின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் இங்கிலாந்தில் நுழையவும் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-
இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும்.
இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது.
மேலும், ஐந்து ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனரல் வங்கி, ப்ராம்ஸ்வியாஸ் பேங்க் மற்றும் பிளாக் சீ ஆகிய வங்கிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இறையாண்மையுள்ள உக்ரைனில் ரஷ்யா படைகளை நிலைநிறுத்துவது அந்நாட்டின் மீது மீண்டும் படையெடுப்பதற்கு சமம் என்பதில் சபைக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த- அமெரிக்கா
ரஷ்யாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்த அனுமதிக்கும்படி அதிபர் புதின் எழுதிய கடிதத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்.
ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.
உக்ரைன் பற்றிய ரஷ்ய ஜனாதிபதி புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். புதின் தொடர்ந்தால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும்.
உக்ரைனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டார்
யாழில் சிசுக்களை வைத்து கூலிக்கு பிச்சை எடுத்த கும்பல் கைது
யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள்
கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு டீசல் கப்பலும் பெற்றோல் கப்பலொன்றும் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டால், எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது பத்து நாட்களுக்கு மாத்திரமே பெற்றோலும் 7 நாட்களுக்கும் மட்டுமே டீசலும் கையிருப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக்
கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள்.
இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.”
- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி. பற்றி பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி. குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்குப்
பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரனின் சடலம் எனக் காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை முழுவதும் பவனியாகக் கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த விடயங்கள்
தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது?
அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரன் ஒரு போர் வீரன்; கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர், பிரபாகரனின் கழுத்தில்
இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். ஆயுதங்கள் இல்லாமல்தான் எதிரியிடம் மண்டியிடுவதையே சரணடைதல் என்பார்கள்.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காகக் கருணாவையும், தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை?
ஹெலி மூலம் கருணாவைக் கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியைக் கூட்டிச்சென்று இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை? இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை?
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார், சடலத்தை எடுத்தோம், புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார்” – என்றார்
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
வட்டவளை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வந்த பிக்கு ஒருவர் 13 வயது
சிறுவன் ஒருவரை பாலியல் உறவு புரிந்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் பிக்கு கைது செய்ய பட்டுள்ளார்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் பணி புரிந்து வந்த இலங்கையை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்
,சம்பவ தினம் அன்று இரண்டு சிங்களவர்களும் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த
பொழுது வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பாத சாரிகள் மீது மோதியது
இதன் போது சம்பவ இடத்தில இருவரும் பலியாகினர் ,குறித்த விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்று கலாய்த்த நெட்டிசன்களுக்கு நெத்தியடி கொடுக்கும் படி பதிலளிக்கப்பட்டுள்ளது.
கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
விஜய்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை
சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
இன்சூரன்ஸ்
அவர் பயணித்து வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை அதில் தான் விஜய் வாக்களிக்க வந்தார் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு
பதிலளிக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொண்ட கமல், ரஜினி
மணமக்களை வாழ்த்திய ரஜினி
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர்
அன்புசெழியனின் இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
மணமக்கள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு
, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், வைபவ், சுப்பு பஞ்சு, அம்மா சிவா, மனோபாலா
, மயில்சாமி, இயக்குனர்கள் லிங்குசாமி, சுசிகணேசன், சரண், ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
கமல்
மேலும் அரசியல் பிரமுகர்களான தங்கம் தென்னரசு, சேகர் பாபு, டிடிவி.தினகரன், எஸ்.வி.சேகர், ராணிபெட் காந்தி, கு.பிச்சாண்டி, விவி.ராஜன் செல்லப்பா, R B
உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எல்.கே.சுதீஷ், ஆகியோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
பாடசாலைக்குள் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
ஈரான் நாட்டின் அரசஇராணுவத்தின் விமனம ஒன்று திடீரென Tabriz பகுதியில் உள்ள
பாடசாலை ஒன்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த விமானத்தை
செலுத்தி சென்ற இரு விமானிகள் மற்றும் அதே பகுதியில் வசித்த இருவர் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் கனமழை புயல் காரணமாக பிரிட்டன்
தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது ,தற்போது லண்டன் கென்ட்
பகுதியில் உள்ள சில கிராம பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
அமெரிக்கா suburban Denver பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் உள்ள கட்டடம்
ஒன்றுக்குள் இருந்து இறந்த நிலையில் ஐந்து பேரது சடலம் மீட்க பட்டுள்ளது
இந்த அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த இவர்கள் போதைவஸ்துக்கு
அடிமையானவர்கள் என தெருவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
லண்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட கழிவு கொண்டனர் மீள லண்டனுக்கு திருப்பி அனுப்பு
பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்ப பட்ட மருத்துவ கழிவுகளை ஏற்றிய
கொண்டனர் மீளவும் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்தில் வைக்க பட்டிருந்த இந்த கொண்டர்களில் 45 மீள பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்க பட்டுள்ளது
ஐந்தே கொண்டர்களில் மக்களின் உடல் பாகங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்க
பட்டு சர்ச்சை எழுந்திருந்தமை இங்கே கவனிக்க தக்கது
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில்
உக்கிரேனில் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அறிவித்துள்ளது
மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர
அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறு வேண்ட பட்டுள்ளது
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்
விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் (ட்ரோன்) தண்டனைக்குறிய குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான
நடவடிக்கைகளுக்கும் (ட்ரோன்) சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








