Author: நிருபர் காவலன்
ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்
ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்
ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில் ,நாட்டின் இராணுவப் படைகள் சிறந்த நிலையில் இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நாட்டைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி கூறுகிறார்.
ஈரான் மண்ணில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் வீரமரணம் அடைந்த இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (IRGC) குத்ஸ் படையின் முன்னாள் மூத்த தளபதி
முகமது-சயீத் இசாதியின் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் விழாவில் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்தார்.
தியாகி இசாதி தனது வாழ்நாள் முழுவதையும் கடவுளின் வழியில் ஜிஹாதின் காரணத்திற்காக அர்ப்பணித்தார், மேலும் அவரது பெயர் எப்போதும் அல்-
குத்ஸ், பாலஸ்தீனம் மற்றும் பிரபலமற்ற சியோனிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் தியாகிகளுடன் பிரகாசிக்கும் என்று மௌசவி கூறினார்.
நாட்டையும் ஈரானிய நாட்டையும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகளின் முழு தயார்நிலையை வலியுறுத்தி, உயர்மட்ட ஜெனரல், “ஆயுதப்படைகளின் திறன்கள் சிறந்த நிலையில் உள்ளன” என்றார்.
வெள்ளியன்று, ஈரானின் இராணுவத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி, நாட்டின் முழுப் பரப்பையும் பாதுகாப்பதில் படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சியோனிச ஆட்சி ஜூன் 13 அன்று ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரை நடத்தி ஈரானின் இராணுவம், அணுசக்தி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை 12
நாட்களுக்கு தாக்கியபோது, அமெரிக்கா நுழைந்து ஜூன் 22 அன்று ஈரானின் Natanz, Fordow மற்றும் Isfahan ஆகிய மூன்று அணுசக்தி தளங்களில் இராணுவத் தாக்குதல்களை நடத்தியது.
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா ,அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச மூலதனச் செலவினம், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை
நினைவுகூர்ந்து, இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிடுவதற்கும், அதன் மூலம் இந்த நிதி ஆண்டில் எதிர்பார்த்த
பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது, அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை நடைபெற்ற மாத்தறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவன மட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, இதுவரை தொடங்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள
வேலைத்திட்டங்களின் தற்போதைய பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டன. அங்கு, விவசாயம், சுகாதாரம், கல்வி,
கிராமிய அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நில்வலா ஆற்றின் உப்புத் தடுப்பு நிர்மாணிப்பு குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கும், அந்த குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள்
பெற்றுக்கொள்வதற்கும் இங்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததுடன், மாத்தறை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை முழுமையாகக்
கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
தற்போது பயன்படுத்தப்படாத மற்றும் முழுமைபெறாத அரச கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களை செயற்திறன் மற்றும் உரிய பயன்பாட்டுக்கு
கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்கான மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், பொல்ஹேன உத்தேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலையை நிர்மாணிப்பது தொடர்பான பரிந்துரையை தயாரித்து முன்வைக்குமாறும்,
அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால், இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எந்த சம்பந்தமும்
இல்லாத பொதுமக்கள்தான் என்றும், இனிமேலும் இது நடக்க இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ,மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் இருவர் பலி
வாகன விபத்தில் இருவர் பலி
வாகன விபத்தில் இருவர் பலி ,ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துவிச்சக்கரவண்டியில் சென்றவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
விபத்தில் மரணித்தவர்கள் 28 மற்றும் 73 வயதுடைய பரவர்தனஓய மற்றும் ஹசலக பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சடலங்கள் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொஸ்கொட துப்பாக்கிச் சூடு
கொஸ்கொட துப்பாக்கிச் சூடு
கொஸ்கொட துப்பாக்கிச் சூடு ,பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்று (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அஹுங்கல்லவிலிருந்து கொஸ்கொட நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த
இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொஸ்கொடவைச் சேர்ந்த கலதுர நிமுத்து அபிஷான் அபய டி தப்ரூவ் (ரன் மஹத்தயா) என அடையாளம் காணப்பட்டார்.
காயமடைந்த நபர் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வௌிநாட்டுல் உள்ள ‘ஷான் மல்லி’ என்ற நபரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், முச்சக்கர வண்டி உரிமையாளரான ‘பாலே’ என்ற நபரை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, முச்சக்கரவண்டியில் பாலே என்பவரின் உறவினரான காயமடைந்தவரான நிமுத்து அபிஷான் என்ற நபரே பயணித்துள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அஹுங்கல்லவில் பாலே என்பவரை இலக்கு வைத்து, அவர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு ,பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர் ,கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான
அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான (Bureau of South and Central Asian Affairs) சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான்,
இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.
முன்னதாக நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார் ,வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம்
சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.
அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்ய சென்றபோது
இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.
பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது.
எயார் இந்திய விமான விபத்து
எயார் இந்திய விமான விபத்து
எயார் இந்திய விமான விபத்து ,கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 இயந்திரங்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், RAT (Ram Air Turbine) என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது.
அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு இயந்திரம் மட்டுமே செயற்பட்டுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள் கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பாக அத தெரண வினவியபோது, கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தது.
அதிகாலை துப்பாக்கிச் சூடு
அதிகாலை துப்பாக்கிச்சூடு
அதிகாலை துப்பாக்கிச் சூடு , ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு ,ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீது
தெய்வம் ஆடியவர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி
பெரும் பதற்றம்
நாளான நேற்று (10) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பதற்றம்
இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்த போது, 37 வயதான ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கியதில்
இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக்கொண்டிருந்தவர், இன்னொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையம்
மத்தள விமான நிலையம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை விமானங்களுக்கு தயார்படுத்த இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலை
விமான நிலையத்தை அதன் தற்போதைய நிலையில் பராமரிப்பதன் மூலம் அரசாங்கம் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (10) விமான நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“மத்தள விமான நிலையத்தை விமானங்களை கொண்டு வரக்கூடிய அளவுக்கு கட்டமைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். ஓரிரு வருடங்களில் அதை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
ஆனால் இந்த விமான நிலையம் எங்களிடம் இருப்பதால், எங்களுக்கு நிறைய செலவுகள் மற்றும் கடன் உள்ளது.
மேலும், இலங்கைக்கு ஒரு மாற்று விமான நிலையம் தேவை. இது எங்களுக்கு கூடுதல் நன்மையாக உள்ளது.
நாங்கள் தற்போது கலந்துரையாடி வருவது விமானங்களை கொண்டு வர. இது ஒரு பெரிய விடயம்.
சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும்
இதற்காக சரியான முதலீட்டாளர்களை நாம் கொண்டு வர வேண்டும்.
இதற்கிடையில், விமானங்களை பழுதுபார்ப்பது போன்ற தொழில்களைச் செய்ய முடியும்.
விமான நிலையத்தில் நிறைய இடம் இருப்பதால், விமான ஓடுபாதைக்கு வெளியே உள்ள பகுதிகளில் சோலார் பேனல்கள் போன்ற தொழில்களுக்குச் செல்ல முன்மொழியப்பட்டுள்ளது.
இது உண்மையில் வணிகத் திட்டம் இல்லாமல் கட்டப்பட்ட விமான நிலையமாகும். கடன் மலைபோல் குவிந்துள்ளது.
260 மில்லியன் டொலர் கடன். 2030க்குள் அதை செலுத்த வேண்டும்.
கட்டுநாயக்காவில் சம்பாதித்த பணம் இங்கு கொண்டு வரப்படுகிறது. “இது பணத்தை வீணடிப்பதாகும். இது ஒரு வெறிச்சோடிய விமான நிலையம்,” என்று அவர் கூறினார்.
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி ,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு
ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணி
மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி
வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.
அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில்
பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள்
O/L பரீட்சை பெறுபேறுகள் ,2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்,
மாகாண வாரியாக மாணவர் சித்தி சதவீதம் பின்வருமாறு,
மேல் 74.47%
மத்திய 73.91%
தெற்கு 75.64%
வடக்கு 69.86%
கிழக்கு 74.26%
வடமேல் 71.47%
வட மத்திய 70.24%
ஊவா 73.14
சப்ரகமுவ 73.47%
பாட வாரியாக சித்தி சதவீதம் பின்வருமாறு,
பௌத்தம் – 83.21%
சைவநெறி – 82.96%
கத்தோலிக்கம் 90.22%
கிறிஸ்தவம் 91.49%
இஸ்லாம் 85.45%
ஆங்கிலம் 73.82%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03%
வரலாறு 82.17%
அறிவியல் 71.06%
கணிதம் 69.07%
அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் சதவீதம் 2.34%
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி
கோர விபத்து 4வயது சிறுவன்பலி , மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவரும்போது, அப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய்,
மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் இன்று (10) மாலை நானாட்டான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது,
நானாட்டான் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு
பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்.
மேலும், தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறு சீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு ,இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட
தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்
ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள்
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.
ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு,
மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
வேல் கொண்டு வினைதீர்க்கும் முருகையா
வேல் கொண்டு வினைதீர்க்கும் முருகையா |பக்தி பாடல் |முருகன் பாடல்கள் |முருக பாடல்கள்
தினேஷ் கனடா வேல் கொண்டு வினை தீர்க்கும் புதிய பாட்டு
வேல் கொண்டு வினை தீர்க்கும் முருகையா புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தினேஷ் கனடா
-தயாரிப்பு – தினேஷ் கனடா
வெளியீடு – எதிரி இணையம்
பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல்
பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல்
பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல் ,டெல் அவிவ் விமான நிலையத்தை ஏமன் ஏவுகணை மூலம் குறிவைக்கிறது
காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வரும் நிலையில், யெமன் ஆயுதப்படைகள் டெல் அவிவ் பென் குரியன் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யெமன் படைகள் இந்த நடவடிக்கையில் சுல்பிகார் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறியதாக பிரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
யெமன் ஏவுகணைத் தாக்குதல் “வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்தது” என்றும், இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களில் 300 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் வான்வழித் தாக்குதல் சைரன்களைத் தூண்டியது என்றும் அது மேலும் கூறியது.
இந்த நடவடிக்கை மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகளை தங்குமிடங்களுக்கு அனுப்பியது மற்றும் பென் குரியன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தை நிறுத்தியது.
மேலும், யெமன் படைகள் தங்கள் இராணுவத் திறன்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் தங்கள் போரை முடுக்கிவிடவும் சபதம் செய்தன.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் உள்ள இலக்குகள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எதிராக தங்கள் தாக்குதல்களை விரிவுபடுத்த அவர்கள் பணியாற்றி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
“காசா மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு முற்றுகை நீக்கப்படும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
சமீபத்தில், செங்கடலில் வழிசெலுத்தல் தடையை மீறியதற்காக, இஸ்ரேல் நோக்கிச் செல்லும் இரண்டு கப்பல்களான மேஜிக் சீஸ் மற்றும் எடர்னிட்டி சி ஆகியவற்றை யேமன் படைகள் மூழ்கடித்தன.








































