Tag: அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி ,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு
ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணி
மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி
வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.
அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில்
பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள்
முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்
மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (21) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வுப்பணி தொடர்பாக இன்று (20) தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
அகழ்வு பணி நாளை காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை
அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும்.
இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்



















