Author: நிருபர் காவலன்
லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல்
லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல்
லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ,தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் வீரமரணம்.
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி
லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஐதா அல்-ஷாப் நகரில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில்
தெற்கு லெபனானில் உள்ள ஐதா ஆஷ் ஷாப் நகரில் ஒரு வாகனத்தின் மீது இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
பின்ட் ஜபீல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஐதா அல்-ஷாப்பில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆட்சி ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ட்ரோன் தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இஸ்ரேலிய ஆட்சி லெபனானில் தினசரி ஆக்கிரமிப்புகளையும் போர்நிறுத்த மீறல்களையும் தொடர்கிறது, மனிதாபிமான அல்லது நெறிமுறைக் கொள்கைகளை மதிக்கவில்லை.
தாய்லாந்து கம்போடிய மோதல்
தாய்லாந்து கம்போடிய மோதல்
தாய்லாந்து கம்போடிய மோதல் ,தாய்லாந்து-கம்போடிய மோதல்களில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
கம்போடியா எல்லையில் நடந்த மோதல்களில்
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் நடந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
கம்போடியாவுடனான எல்லையில் நடந்த ஆயுத மோதல்களில் தாய்லாந்தில் ஒரு சிப்பாய் உட்பட குறைந்தது 15 பேர்
கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்தனர் என்று தாய் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுரின் மாகாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்
அந்த நிறுவனத்தின்படி, சுரின் மாகாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், சிசாகெட் மாகாணத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
டாஸ் செய்தி நிறுவனத்தின்படி, உபோன் ரட்சதானி மாகாணத்தில் ஒரு குடிமகனும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு அருகில் ஜூலை 24 ஆம் தேதி காலை மோதல்கள் வெடித்தன.
ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை
ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை
ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை ,ஈரான் ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை கடந்து சென்றன.
ஈரானிய ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு
12 நாள் இஸ்ரேல் விதித்த போரின் போது ஈரானிய ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் வழியாக சென்றதாக ஈரானிய
ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி கூறுகிறார்.
கோமில் நடந்த ஒரு விழாவில், பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி, போரின் முதல் இரவில் முக்கிய தளபதிகளை இழந்த போதிலும்,
ஈரானின் விண்வெளிப் படை மேற்கத்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தாக்கியது என்று கூறினார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை
“நடவடிக்கையின் முதல் இரவில் முதல் அடுக்கு கட்டளையின் தியாகம் இருந்தபோதிலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப்
படைகள் தலைவரின் ஞானத்துடனும் விரைவான மறுகட்டமைப்புடனும் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்வதில் வெற்றி பெற்றன,” என்று அவர் கூறினார்.
ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்,
மேம்பட்ட ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1,200 கிலோமீட்டர் பாதையில் நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், ஈரானிய ஏவுகணைகள் இந்த பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் வடக்கிலிருந்து தெற்கே உள்ள இலக்குகளைத் தாக்கின.
ஷெகார்ச்சியின் கூற்றுப்படி, அமெரிக்காவின் முழு ஆதரவுடன், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி,
சியோனிச ஆட்சி, மூத்த இராணுவத் தளபதிகளைக் கொன்று, நாட்டை துண்டு துண்டாகப் பிரிப்பதன் மூலம் ஒரு வாரத்திற்குள் ஈரானின் உள்கட்டமைப்பை குறிவைக்க திட்டமிட்டது.
புதிய கல்விச் சீர்த்திருத்தம்
புதிய கல்விச் சீர்த்திருத்தம்
புதிய கல்விச் சீர்த்திருத்தம் ,உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார
மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசியல் நோக்கிலான திட்டமன்றி ஒரு சமூக நோக்கம்
இது ஒரு அரசியல் நோக்கிலான திட்டமன்றி ஒரு சமூக நோக்கம் கொண்டது என்பதால் அதற்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கோரினார்.
எந்தவொரு பிள்ளையும் 13 வருட கட்டாயக் கல்வியை எந்த காரணத்திற்காகவும் நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டும் செல்லக் கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை:
கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பல விடயங்களை முன்வைக்க நம்புகிறேன். இந்த கல்வி முறையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை மற்றும் இந்த கல்வி முறை உருவாக்கிய பொருளாதாரம் குறித்தும்
நம்மில் யாரும் திருப்தி அடைய முடியாது. எனவே, எங்களுக்கு மிகவும் விரிவான கல்வி சீர்திருத்தம் அவசியம். கல்வி சீர்திருத்தம் குறித்த கலந்துரையாடல் எழுந்தபோது, வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா
போன்ற பிரச்சினைகளைப் பற்றி ஆராயத் தொடங்கினோம். உண்மையில், இது பாடத்திட்டத்தின் திருத்தம் செய்வது தொடர்பான சீர்திருத்தம் மட்டுமல்ல.
இது நமது முழு சமூகம், பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் புதிய மாற்றத்திற்கான ஒரு புதிய கல்வி சீர்திருத்தமாகும். பொருளாதார ரீதியாக, மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நமது நாடு உலகில் சுமார்
38 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி, நாம் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட நாடாகும். நமது மக்கள் தொகை அடர்த்தி சீனாவை விட அதிகமாக உள்ளது.
இயற்கை வளங்களைப் பொறுத்தவரை, நமக்கு பெரிய வணிக வளங்கள் குறைவாக உள்ளன. எண்ணெய், எரிவாயு, தங்கச் சுரங்கம், போன்றவை எம்மிடம் இல்லை. எனவே, நம்மிடம் உள்ள மிகவும் மதிப்புமிக்க வளமாகவும்
இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கூர்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட வேண்டிய வளமாக இந்த மனித வளம் காணப்படுகிறது. எனவே, நமது பொருளாதார மூலோபாயங்களில், இந்த மனித வளத்தை மேம்படுத்துவதன்
மூலம் நமது நாட்டை எவ்வாறு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக, தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோர் வீட்டுப் பணிப்பெண்கள், பயிற்றப்படாத, பாதியளவு பயிற்றப்பட்ட, பயிற்றப்பட்டவர்கள் என தொழில்முறையில் வகைப்படுத்துகிறோம்.
தொழில் ரீதியாக, நமது வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 3% பேர் மட்டுமே தொழில்முறையான வேலைகளில் பிரவேசிக்கின்றனர்.
97% பேர் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத மற்றும் பாதியளவு பயிற்றப்பட்டவர்களாகும். அதிலும் உலகில் இரண்டு சந்தைகள் இருப்பதைக் காணலாம். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரு சந்தை உள்ளது.
உலகில் ஒரு தொழிலாளர் சந்தை உள்ளது. உலகின் மிகக் கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர் சந்தைகளில் ஒன்றை நாம் அடைந்துள்ளோம்.
எனவே, பொருளாதார ரீதியாக, உலகில் ஒரு முன்னேற்றகரமான தொழிலாளர் சந்தையை நாம் அடைய வேண்டும். அதற்காக சிறந்த, உலகில் அந்த சமயத்தில் வெளிப்படும் அறிவைப் பெற்ற, பகிர்ந்து கொள்ளும் கல்வி முறை
நமக்குத் தேவை. மறுபுறம், சமூக ரீதியாக நோக்கினால், நமது கல்வியறிவின்மையும் வறுமையும் ஒன்றாகச் செல்கின்றன.
நீங்கள் கல்வியறிவற்றவராக இருந்தால், நீங்கள் குறிப்பிட்டளவு ஏழையாக இருப்பீர்கள்.
எனவே, வறுமையை ஒழிப்பதற்கான திட்டமாக நோக்கினால் கல்வி அதை ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், முழுக் குடும்பமும் மீட்சி பெறும் என்று நம் கிராமங்களில் பொதுவாகக் கூறுவார்கள்.
எனவே, இந்த வறுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள கல்வி மிகவும் முக்கியமானது.
மறுபுறம், நம் நாட்டில் குற்றம். சிறையில் உள்ளவர்களில் சுமார் 80% பேர் சாதாரண தர மட்டத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்களில் சுமார் 70% பேர் எட்டாம் வகுப்பை விட குறைவாக கற்றவர்களாக உள்ளனர்.
அதன்படி, இந்த சமூகக் குற்றங்களுக்கும் போதைப்பொருள் மற்றும் கல்விக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.
எனவே, இந்த பொருளாதார தேகத்திலும் இந்த சமூகத்திலும் சிறந்த மாற்றத்தை நாம் எதிர்பார்ப்பதாக இருந்தால், கல்விதான் அந்த மாற்றத்தின் வேர், ஆரம்பம், அடித்தளம் கல்வியாகும்.
அதனால்தான் இந்தக் கல்வியின் விரிவான மாற்றத்தின் அவசியத்தை எங்கள் கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
முதலில், இந்தக் கல்வியில் உள்ள சிக்கல்களின் அளவை நாம் அடையாளம் காண வேண்டும்.
ஏனென்றால் பொதுவான சமூகத்தில் இல்லாத பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு தேடுவதில் பலனில்லை. நமது கல்வி தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும்.
அதன்படி, எமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டும் செல்வது முக்கிய சிக்கலாகும். 2019 ஆம் ஆண்டில் சுமார் 16,673 மாணவர்கள் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் 20,759 பேர் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளதோடு 2024 ஆம் ஆண்டில் 20,755 பேர் இவ்வாறு சென்றுள்ளனர்.
அதாவது, அவர்கள் இன்னும் கற்க வேண்டியிருக்கும் நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள்.
அதாவது, 13 வருட கட்டாயக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது.
மேலும், 2006 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகள் 2011 ஆம் ஆண்டில் பாடசாலை சென்றனர். 2011 ஆம் ஆண்டில், 358,596 பிள்ளைகள் பாடசாலை சென்றனர்.
அந்தப் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டில் சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டனர்.
ஆனால், மூன்று இலட்சத்து பதினொறாயிரம் மாணவர்கள் மட்டுமே சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர்.
அதன்படி, சுமார் 47,000 பேர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்க, 13 வருட கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்தங்கள் தேவை.
நமது பிள்ளைகள் பாடசாலை செல்வதைப் பாதியில் நிறுத்தக்கூடாது. எந்தப் பிள்ளையும் அந்த நிலை ஏற்படக் கூடாது.
அவர்களின் பொருளாதார பின்னணி, பெற்றோரின் மோதல்கள், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் போன்றவை பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக
அமைந்துள்ளன. நாங்கள் கல்வித் திட்டத்தை உருவாக்கும் அதே வேளையில், மாணவர் ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்றால், ஒரு அரச அதிகாரி அந்தப் பிள்ளையை நேரில் சென்று விசாரிக்க
வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வி கற்கும் வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, நம் நாட்டில் உயர்கல்வி பெரும்பாலும் கலந்துரையாடலுக்குரியதாக உள்ளது. ஆனால் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பாடசாலைக் கல்வி முறையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு
மாணவர் கூட சேர்க்கப்படாத 98 பாடசாலைகள் உள்ளன. 10 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 115 பாடசாலைகளும் உள்ளன. 20 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 406 பாடசாலைகள் உள்ளன. 30 க்கும் குறைவான
மாணவர்களைக் கொண்ட 752 பாடசாலைகள் உள்ளன. 40 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1141 பாடசாலைகள் உள்ளன. 50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1506 பாடசாலைகள் உள்ளன.
இது மொத்த பாடசாலைக் கட்டமைப்பில் சுமார் 15% ஆகும்.
அதுமட்டுமல்லாமல், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3144 பாடசாலைகள் உள்ளன. அரச பாடசாலைகளில் ஏறத்தாழ 1/3 பங்கு 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன.
இந்த நிலைமை நல்லதா? இந்தப் பாடசாலைகளில் இலக்கிய விழா, விளையாட்டுப் போட்டி, சுற்றுலா அல்லது சம வயது பிள்ளைகளுடன் பழகுவது போன்ற எதுவும் நடப்பதில்லை.
எனவே, இந்தப் பாடசாலைக் கட்டமைப்பு குறித்து மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். நாம் நிச்சயமாக இது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும்.
சில பாடசாலைகள் மூடப்பட வேண்டும். சில பாடசாலைகள் இணைக்கப்பட வேண்டும். சில பகுதிகளில் புதிய பாடசாலைகள் தொடங்கப்பட வேண்டும். பாடசாலைகள் நிலைநிறுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு பிள்ளை ஒரு புதிய சமூகத்தையும், புதிய அனுபவங்களையும், புதிய வாய்ப்புகளையும் பெற வேண்டும்.
ஒரு சமூக சூழ்நிலையில் உள்ள பிள்ளைகள் கிராமத்திலிருந்து பாடசாலைக்கு, பாடசாலையிலிருந்து கிராமத்திற்கு என காணமல் போய்விடுகின்றனர் எந்தப் பிள்ளைக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது.
தங்கள் பிள்ளையை கிராமப் பாடசாலைக்கு அனுப்பாத சில பெற்றோர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப் பாடசாலைக்கு அனுப்ப போராடுகிறார்கள்.
ஆனால், அவர்கள் கிராமப் பாடசாலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன? ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று அந்த பாடசாலை குறித்து ஆராய்வது தொடர்பில் கல்வி அமைச்சுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியுள்ளோம்.
போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஏனென்றால், கட்டிடங்கள் மற்றும் மனித வளங்கள் இருந்தாலும், பாடசாலையில் 10 மாணவர்கள் இருந்தால், அந்தக் பிள்ளைகள் நகரப் பாடசாலைக்குச் செல்வதற்கு பஸ் வசதியை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
பாடசாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள சிக்கலை மேலும் ஆராய்ந்தால், இங்கு எவ்வளவு மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன? நமது நாட்டில் சராசரி ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:18 ஆகும். அந்த விகிதம் மிகவும் உகந்த
விகிதமாகும். ஆனால் இன்றும் கூட,சில மாவட்டங்களுக்குச் சென்று பார்த்தால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விகிதம் 1:5 ஆகும். ஹம்பாந்தோட்டையில், ஒரு
பாடசாலையில் 30 மாணவர்கள் உள்ளனர். 9 ஆசிரியர்கள் உள்ளனர். மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. திருகோணமலை குச்சவெளி பகுதியில் ஒரு பாடசாலை உள்ளது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள்
உள்ளனர். பண்டாரவளை ஹல்துமுல்ல கல்விப் பிரிவில் மூன்று பிள்ளைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட ஒரு பாடசாலை உள்ளது.
திருகோணமலையில் உள்ள மற்றொரு பாடசாலையில் நான்கு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பிள்ளைகளுக்கு எந்த பிரதிபலனும் இல்லை. ஆசிரியர்களுக்கும் எந்த பிரதிபலனும் இல்லை.
எமது இந்த கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த அளவிலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.
இந்தக் கல்வி சீர்திருத்தத்தின் மூலம், இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அது இங்கே ஒரு முக்கியமான காரணியாகும்.
வசதிகளுடன் கூடிய பாடசாலை, தேவையான மனித வளங்களைக் கொண்ட பாடசாலை, அவர்கள் வாழும் சூழலைத் தாண்டி சமூக செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பாடசாலை பிள்ளைகளுக்கு அவசியம். அப்படிப்பட்ட பாடசாலை
தேவையில்லையா? நமது கல்வி குறிப்பிடத்தக்க அளவிற்கு எமது பிள்ளைகளை இயந்திரமயமாக்கியுள்ளது. இன்று, கிராமங்களில் கரப்பந்தாட்ட மைதானம் கூட இல்லை.
அறுவடை முடிந்ததும், வயல்களில் எல்லே விளையாடுவார்கள். கிராமத்தின் குளங்களில் நீந்துகிறார்கள். வெசாக் பண்டிகையின் போது, கிராமத்தின் பிள்ளைகள் ஒன்றுகூடி, சித்திரங்கள் வரைந்து தோரணங்கள் போடுவார்கள்.
இன்றைய பிள்ளைகளிடையே இதுபோன்ற செயல்பாடுகள் காணப்படுவதில்லை.
இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா
இயந்திரங்களைப் போல, ஈரம் இல்லாத, இரக்கம் இல்லாத, சமூகத்தின் மீதான பொறுப்பற்ற ஒரு தலைமுறை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பிள்ளைகள் எமது காலத்தைப் போன்று இல்லை என்று சில நேரங்களில் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்கிறேன்.
அது உண்மைதான். எமது காலத்தைப் போன்று, அதை விடச் சிறந்த பிள்ளைகள் இருக்க வேண்டும். டியூஷன் அதிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
வகுப்புகள் முடிந்த பிறகுதான் அவர்கள் பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பாடசாலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வகுப்பிற்குச் செல்கிறார்கள்.
அந்தக் பிள்ளைக்கு ஒரு பிள்ளைப் பருவம் தேவை இல்லையா? ஒரு கவிதையையோ பாடலையோ இரசிக்காத, ஒரு நாவலைப் படிக்காத, இலக்கியத்தால் வளர்க்கப்படாத, எந்த சமூக செயல்பாடும் இல்லாத
இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா
இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா? இது போன்ற ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது.
இந்தப் பிள்ளையின் மீது சுமத்தப்பட்டுள்ள கல்விச் சுமையைக் குறைக்க வேண்டும், அது நமது பொறுப்பு. பிள்ளை எழுப்பும்போது தூக்கம்,
வாகனத்திலும் தூக்கம்,பாடசாலையிலும் தூக்கம். அந்தப் பிள்ளைகள் பாவம் இல்லையா? ரோபோக்கள் போல வளர்க்கப்படும் பிள்ளைகளின் தலைமுறையை நாம் மாற்ற வேண்டாமா?
பிள்ளைக்கு சுறுசுறுப்பான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், முழுமையான கல்வி, பாடவிதானம், கற்பித்தல், அதற்கு உள்ள எடை மற்றும் அளவை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை நாம் கொண்டு வருவோம்.
பாடசாலையில் சேரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ மாற ஆசைப்படுகிறார்கள். கல்வி என்பது ஒற்றை நேர்கோட்டுப் பாதை அல்ல.
சமூக மரியாதை மற்றும் தொழில்முறை மதிப்பு
கல்வி என்பது ஒரு பரந்த பாதை. ஆனால் என்ன நடந்துள்ளது? சமூக மதிப்புகள், சமூக மரியாதை மற்றும் தொழில்முறை மதிப்புகள் என இரண்டு அல்லது மூன்று துறைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளை ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டுமானால், அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் குடும்பத்தை கௌரவிக்க, அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ மாற வேண்டும் என்று நினைப்பது தவறு. மருத்துவர் அல்லது பொறியாளாலரிடம் ஒரு சமூகம் தங்கியில்லை.
பல்வேறுபட்ட தொழிற்துறைகளின் கூட்டாகவே ஒரு சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு சகல துறையிலும் தொழில்வாண்மை தேவை. ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்வாண்மை வழங்கப்பட வேண்டும்.
பாதைகள் பரந்து விரிந்துள்ளன, இந்தப் பல பாதைகள் வழியாக நாம் பிளை்ளையை தொழில்வாண்மை நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
நமது கல்வி சீர்திருத்தங்கள் அந்த இலக்கைக் கொண்டுள்ளன. ஒரு பிள்ளை பின்பற்ற ஒரு பாதை தேவை.
இன்று எது பாதையாக மாறியுள்ளது? ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இல்லாமல் ஒரு பிள்ளை ஒரு பாதையைப்
புரிந்து கொள்ள முடியாது. இன்று, பாதைகள் என்பது அதிக சமூக மதிப்புள்ள விடயங்களைக் கற்றுக்கொள்வதாக மாறிவிட்டன.
மருத்துவ பீடத்திற்கு செல்ல முடியாத பிள்ளை விவசாய பீடத்திற்கு வருகிறது. மருத்துவராக முடியாததால் தான் அவர் ஒரு விவசாய விஞ்ஞானியாக மாறுகிறார். இன்று, சாதாரண தரத்திற்கும் உயர் தரத்திற்கும் இடையே ஒரு
பாரிய இடைவெளி உள்ளது. கல்வி சீர்திருத்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பிக்கிறது, 2027 ஆம் ஆண்டில் 07 ஆம் வகுப்பில், 2028 ஆம் ஆண்டில் 08 ஆம் வகுப்பு மற்றும் 2029 ஆம் ஆண்டில் 09 ஆம் வகுப்பில்
தொடங்கும். 9 ஆம் வகுப்புக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இந்த சீர்திருத்தங்கள் 2026 இல் தொடங்கினால், 2029 இல் தான் தெரிவுப் பாதை பற்றிய கலந்துரையாடல் ஆரம்பிக்கும். மனித நாகரிகத்தைப் படிக்கும் ஒரு
வரலாற்றாசிரியராக மாறுவதற்கும் வழி இருக்கிறது. மதங்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்குகிறது. அவ்வாறு
அல்லவா தேவைப்படுகின்றது? ஒவ்வொரு பிள்ளையும் புவியியல், சமூகவியல், மதங்கள் மற்றும் வரலாறு பற்றி அடிப்படை அடித்தளங்களைப் பெறுகிறது.
இருப்பினும், அதையும் தாண்டிய ஒரு விசேட அறிவை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு வழி இருக்கிறது.
கிராமங்களில், மக்கள் தங்கள் பிள்ளைகள் உயர் தரம் வரை படித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அந்தப் பெற்றோர்கள் உயர் தரம் என்பது தங்கள் பிள்ளையின் கல்வியின் இறுதி நிலை என்று நினைக்கிறார்கள்.
உயர் தரம் என்பது கல்வியின் இறுதி நிலை அல்ல. அதற்கு அப்பால், ஒரு தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதுள்ள தொழில் பயிற்சி கல்வி நிறுவனங்கள் நவீன உலகுக்கு ஏற்றதாக இல்லை.
சில தொழிற்கல்வி மையங்கள் தச்சுப் பட்டறைகள் போன்றவை. இரும்பு பட்டறைகள் போன்றவை. அப்படிப்பட்ட இடத்துக்கு பிள்ளைகள் வருவதில்லை.
அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் பிள்ளைகள் எத்தனை பேர் இறுதி வரை படித்துள்ளனர் என கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது மிகவும் சிறிய எண்ணிக்கையாக இருக்கும்.
பலர் தொழிற்பயிற்சி கல்விக்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து விட்டு விடுகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் பிள்ளைக்கும், தொழிற்பயிற்சி மையத்தில் சேரும் பிள்ளைக்கும் ஒப்பீட்டு ரீதியில் வேறுபாடு உள்ளது.
தொழிற் பயிற்சி நிலையம் பல்கலைக் கழகப் பட்டம் பெற முடியாதவர்களுக்கான இடம் அல்ல. தொழில் பயிற்சி என்பது தெரிவுக் கல்வி அல்ல. அடிப்படைக் கல்வி என்பது எங்கள் கொள்கை ஆகும்.
2033க்குள் அறிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய 40 நவீன தொழில் பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
ஒரு மாவட்டத்திற்கு இரண்டு அமைக்கப்படும். 13 வருட கல்விக்குப் பிறகு, பிள்ளைக்கு திறந்த தொழிற்கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
13 வருட கல்வியில் இருந்து எந்த ஒரு பிள்ளையும் வெளியேறவோ அல்லது கல்வியில் தொலைந்து போகவோ நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
சராசரியாக, ஒரு பிள்ளை 13 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறது. ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறார்.
என்னுடன் உயர்தரம் படித்தவர்கள் இன்னும் பாடசாலைக்குச் செல்கிறார்கள். எனவே, இந்த நவீன கல்வியை வழங்குவதற்குத் தேவையான அறிவும் அனுபவமும் நம்மிடம் உள்ளதா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய
வேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள அறிவு போதுமானதாக இல்லை. அவர்களின் அறிவு புதுப்பிக்கப்படவில்லை. பிறகு எப்படி ஒரு நவீன பிள்ளையை உருவாக்க முடியும்? அதற்கு, நமக்கு ஒரு வலுவான ஆசிரியர்கள்
தலைமுறை தேவை. இந்தக் கல்வியில் பிள்ளைகளுக்கு சுதந்திரமும் இல்லை. ஆசிரியர்களுக்கு சுதந்திரமும் இல்லை.
எனவே, கல்வியில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தரமான மாற்றம் தேவை. எனவே, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டமும் தொடங்கப்படும். அப்போது நாம் மேலதிகமான
ஆசிரியர்களை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர் மனித வளங்களை நாங்கள் முகாமைத்துவம் செய்வோம். பாடங்களை அரசியல்வாதிகள் தேர்வு செய்யக்கூடாது. அது கல்வி சீர்திருத்தத்திற்குத்
தேவையான நிபுணர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செய்யப்படும் ஒன்று. பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் சீர்திருத்தத்தை கல்வி
நிபுணர்களிடம் நாம் ஒப்படைத்துள்ளோம். அரசியல் அதிகாரம் காலக்கெடுவையே நிர்ணயிக்க வேண்டும். வெற்றிகரமான கட்டமைப்பு மாற்றத்தை அடைய அரசியல் அதிகாரம் உள்ளது.
கல்வியில் என்ன மாதிரியான கட்டமைப்பு மாற்றம் தேவை என்பதை நாங்கள் விவாதிப்போம். அது குறித்த உள்ளடக்கம், பாடங்களுக்கான காலம் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்ளலாம். நாம் ஒவ்வொரு துறையிலும்
நிபுணர்கள் அல்ல. எனவே, நாம் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து இந்தப் பயணத்தில் ஈடுபட வேண்டும். இலங்கையின் பொருளாதார அமைப்பின் வலுவான இருப்புக்கு இந்தக் கல்வி சீர்திருத்த செயல்முறை
மிகவும் முக்கியமானது. எனவே, இந்தப் பணியை மேற்கொள்வதில் அனைத்து அரசியல் குழுக்களும் கைகோர்க்க வேண்டும். கிராமத்தில் இந்தக் கல்வி
முறையைத் தொடங்கும்போது, அதற்கு எதிரான குழுவில் இணையாது, நல்ல விடயங்களுடன் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்.
சில பாடசாலைகள் பாரிய கட்டிடங்களையும் பாரிய நடன அரங்குகளையும் கட்டியுள்ளன. ஆனால் அது கல்விக்கு பயனளிக்கவில்லை. ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த கல்வியை வழங்க, இந்த கல்வி முறை சீர்திருத்தப்பட
வேண்டும். தேசிய பாடசாலை கட்டமைப்பை விட மாகாண பாடசாலை கட்டமைப்பில் அரசியல் அதிகமாக நுழைந்துள்ளது. மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகள் அரசியல் நலன்களுக்கு பலியாகிவிட்டனர். மாகாண பாடசாலைகளை விட தேசிய பாடசாலைகளுக்கு
அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்ற கருத்து பெற்றோர்களிடையே உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். எனவே, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒரு நல்ல கருத்தாடல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் தற்போதுள்ள மனிதவளப் பிரச்சினை, தேவையான திறன் கொண்ட குழுக்கள் இல்லாமையாகும். தொழில்முறை அதிகாரிகள் இல்லை. எனவே, இந்த அரச அமைப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறந்த
மனிதவளமும் தொழிற்படையும் தேவை. எனவே, இந்த கல்வி சீர்திருத்தம் உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு அரசியல் நோக்கம் அல்ல. இது ஒரு சமூக நோக்கம். அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும்.
விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது
விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது
விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது ,கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன்
கனடா பிரஜை
52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார்.
சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது
சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா
மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அனுரா ,மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடு நாடாக ஓடி
அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு நாடாக ஓடி கடனை பெற்று ,நாட்டின் கடனை அடைப்பதில் ஆளும் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது .
நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவு
இந்த நாடுகள் சுற்றி பார்க்கும் பயண செலவுகளை குறைத்தாலே நாட்டின் கடனில் பாதியை தீர்த்து விடலாம் .
இதுவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .
நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் யாவரும் லஞ்ச ஊழலல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் நாடு தொடர்ந்து பின்னோக்கி செல்வது குறிப்பிட தக்கது .
கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு
கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு
கனடாவில் இருந்து யாழ்வந்தவர் சடலமாகமீட்பு ,கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல்
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்
IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்
IMFநிதி குறித்தஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில் ,இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச
நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில்
நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை நேர்மறையாக இருந்தாலும், உலகளாவிய சந்தை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நாட்டின்
பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலி கோசெக் வலியுறுத்தினார்.
ஐந்தாவது மதிப்பாய்வின் போது இந்தக் காரணிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய சந்தை, பொருளாதார மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கம் உட்பட நாட்டின் பொருளாதாரம் குறித்த முழுமையான
இந்த மதிப்பாய்வின் போது
மதிப்பீடு இந்த மதிப்பாய்வின் போது மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2025 ஜூலை 1 ஆம் திகதி, IMF இன் நிர்வாகக் குழு நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியது.
இதன்மூலம், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
இதற்கிடையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பணவீக்கம் குறைவு, மேம்படுத்தப்பட்ட வருவாய் வசூல்
மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளதாக ஜூலி கோசெக் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் நாடு நெருக்கடிக்குப் பிந்தைய 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு IMF கவனம் செலுத்துகிறது. 2022 இல் 8.2% ஆக
இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீதம், 2024 இல் 13.5% ஆக உயர்ந்துள்ளது. இது வலுவான நிதி செயல்திறனைப் பிரதிபலிப்பதுடன்,
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் IMF திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் வலுவாக உள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை
துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை ,தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து
விசேட அதிரடிப் படை
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை 4:30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம் , தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்துவிட்டதாக ,சிங்கள கூலிகளினால் முன்னெடுக்கப்படும்,
சுவிசில் மாபெரும் போராட்டம்
இந்த விஷம பரப்புரைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுவிசில் மாபெரும் போராட்டம் என்று ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை காண்பிக்குமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளார்கள் .
அதன் அடிப்படையில் அந்த மண்டபம் முன்பாக மக்கள் அணிதிரண்டு தமது போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் .
சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில்
இதனால் சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .
கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மக்களை அங்கே அணிதிரளுமாறு வேண்டுதல் விடுத்துள்ளனர் .
மக்களே ஒன்றாக அணிதிரண்டு வருக ,கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு களத்தில் குதிக்க .புரட்சி வெடிக்க .
சிங்கள கூலிகளை ஓட விரட்டுவோம். தமிழர் பலத்தை நிறுத்தி மக்கள் எழுச்சியை காட்டுவோம் .
பகை விலக படை எடு தமிழா .

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது
காதலனால் கழுத்தறுத்து கொலை
காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்
வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை
கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு ,புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில்
ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.
37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச்
சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில்
கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து
நுகேகொடை மேம்பாலத்தில் விபத்து ,ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
முச்சக்கர வண்டி ஒன்று
முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் களுபோவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மீகமவத்தை, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை ,நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில்
பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்து கொலை
அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு
வாகனஇறக்குமதி மத்தியவங்கி ஆளுநரின் அறிவிப்பு ,வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய
வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்த முடிவு
செய்துள்ளதா என்பது குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு கூறினார்.
கேள்வி – கடந்த சில நாட்களாக அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
“அவற்றைக் மட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை.
சந்தை தொடர்ந்து திறந்திருக்கும்
திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.
எனக்குத் தெரிந்தவரை, நான் அப்படி நினைக்கவில்லை. அத்தகைய மாற்றம் செய்யப்படாது என அமைச்சர் கருத்து வௌியிட்டிருந்தார்.
இது rescission நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இது marco promotional மத்திய வங்கியின் பணவியல் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் கடன் வாங்குபவரின் திறன் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.
இந்த நேரத்தில் சில வகையான சரிசெய்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ,2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட
விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.
இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின்
அவசரகாலச் சட்ட பிரகடனம்
அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர்
இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து
பாடசாலை பேருந்து விபத்து ,பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சுமார் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் மோதி நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது, 13 பாடசாலை மாணவர்கள் பெலியத்த, பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல்
ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல்
ரஷ்ய பாரிய வான்வழித் தாக்குதல் ,கியேவில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்திற்கு அருகில் ஏவுகணைத் தாக்குதல்
பாரிய வான்வழித் தாக்குதல்
தலைநகரம் கியேவ் உட்பட உக்ரைனின் பல மாகாணங்கள் ரஷ்ய இராணுவத்தால் பாரிய வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
அறிக்கையின்படி, கியேவின் மத்திய மாவட்டங்களான ஷெவ்சென்கிவ்ஸ்கி, சோலோமியன்ஸ்கி, ஹோலோசிவ்ஸ்கி, டார்னிட்ஸ்கி மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கியேவில், அஜர்பைஜான் தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களை ஏவுகணைத் தாக்குதல் தாக்கியது.
சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், உயிரிழப்புகள் மற்றும் தாக்குதல்களின் சரியான அளவு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.
இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள்
இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள்
இஸ்ரேலுக்கு எதிராக திரளும் நாடுகள் ,காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் இஸ்ரேல் ஆட்சியை
இஸ்ரேல் காசா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
விமர்சித்துள்ளார், இஸ்ரேல் காசா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன என்று கூறியுள்ளார்.
காசாவில் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதற்கான அதன் உறுதிமொழிகளை இஸ்ரேல் நிறைவேற்றவில்லை என்றால் அனைத்து
விருப்பங்களும் மேசையில் உள்ளன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் செவ்வாயன்று கூறினார்.
உதவி கோரும் பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேல்
“காசாவில் உதவி கோரும் பொதுமக்களைக் கொல்வது நியாயப்படுத்த முடியாதது” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் X இல் ஒரு பதிவில் எழுதினார், மேலும்
“உதவி ஓட்டம் குறித்த நமது புரிதலை நினைவுபடுத்தவும், IDF (இஸ்ரேலிய இராணுவம்) விநியோக புள்ளிகளில் மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்
என்பதை தெளிவுபடுத்தவும்” இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாருடன் பேசியதாகவும் கூறினார்.
காசா சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று காசா பகுதியில் திங்கள்கிழமை முதல் 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக
நான்கு குழந்தைகள் உட்பட பதினெட்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது
காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை
காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை
காசாவில் 77 பாலஸ்தீனியர் படுகொலை ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் 77 பாலஸ்தீனியர்களைக் கொன்றன
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆட்சி 77 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகக் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை
அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 59,106 பாலஸ்தீனியர்கள்
கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 77 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 376 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சக அறிக்கை
தெரிவித்துள்ளது, இதனால் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 142,511 ஆக உயர்ந்துள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மீட்புப் பணியாளர்களால் அவர்களை அடைய முடியாததால் பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.
கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 52 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது, இதனால் உதவி கோரும்
கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை
போது கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,026 ஆக உயர்ந்துள்ளது, மே 27 முதல் 6,563 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மார்ச் 18 அன்று காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியது, அதன் பின்னர் 8,268 பேர் கொல்லப்பட்டனர் மற்றும்
30,470 பேர் காயமடைந்தனர், இது ஜனவரியில் நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முறித்தது.
கடந்த நவம்பரில், காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது.












































