1760 பாலஸ்தீனியர்கள் பலி
Posted in உலக செய்திகள்

1760 பாலஸ்தீனியர்கள் பலி

1760 பாலஸ்தீனியர்கள் பலி

1760 பாலஸ்தீனியர்கள் பலி காசாவில் உதவி கோரி இஸ்ரேல் குறைந்தது 1,760 பேரைக் கொன்றது

மே மாத இறுதியில் இருந்து காசாவில் உதவி கோரி குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மே மாத இறுதியில் இருந்து காசாவில் உதவி கோரி

மே மாத இறுதியில் இருந்து காசாவில் உதவி கோரி குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித

உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது, இது ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட கடைசி புள்ளிவிவரங்களிலிருந்து பல நூறு அதிகரிப்பு ஆகும்.

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில்

வெள்ளிக்கிழமை காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தன.

சனிக்கிழமை, ரஃபா அருகே ஒரு உதவி விநியோக மையம் அருகே இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை, குறைந்தது 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் GHF நடத்தும் உணவு விநியோக தளத்திற்கு அருகில் இருந்தனர்.

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு

நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக செனல் நியூஸ் ஏசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து சிங்கப்பூரில்

ஏற்பாடு செய்த ‘இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா’ முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கைப் பத்திரங்கள் மற்றும்

பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர்

பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எச். திசாபண்டார உள்ளிட்டோர் பங்கேற்று முக்கிய உரைகளை நிகழ்த்தினர்.

இதற்கிடையில், அமெரிக்காவின் பரஸ்பர கட்டணங்கள் காரணமாக இலங்கையின் ஆடைத் துறையில் சுமார் 16,000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கொள்கை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்

பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்

பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம் மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும்,

சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை

விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மொனராகலை வைத்தியசாலை

காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை
Posted in உலக செய்திகள்

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும்

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது
மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைதுமதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது

இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நேரப்படி இன்று (16) அதிகாலை அலாஸ்காவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடி இருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடப்படவில்லை.

இந்த முக்கியமான சந்திப்புக்குப் பிறகு ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி

எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது

மதுஅருந்தி வாகனம்செலுத்திய 100பேர் கைது பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேரடியாக தொடர்புடைய

குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, பகிரங்க பிடியாணை பிறப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது

அத்துடன் மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் கைது ,பொலிஸ் நிலையத்தில் முரண்பாட்டில் ஈடுபட்டவர் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி

தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலில் காயமடைந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்து

நேற்று (15) பிற்பகல் பாதுக்க மாவத்தகம பகுதியில் முச்சக்கர வண்டியும் கார் ஒன்றும், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து, பாதுக்க பொலிஸார் காரின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், விபத்துக்குள்ளான காரையும் கைப்பற்றினர்.

எவ்வாறாயினும் காரின் சாரதி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதுக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சீதாவாக்கை முன்னாள்

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அங்கிருந்த பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

பொலிஸாரை தாக்கிய நிலையில்

பின்னர் பொலிஸாரை தாக்கிய நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை சிறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

எனினும் உடல் நலக் குறைவினால் தமக்கு சிறையில் தங்கியிருக்க முடியாது என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அறியப்படுத்தியதை தொடர்ந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

தபால் ஊழியர்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் ஊழியர்கள் போராட்டம்

தபால் ஊழியர்கள் போராட்டம்

தபால் ஊழியர்கள் போராட்டம் ,தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க

முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பு

நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில்

ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள

இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள்

அதன்படி, நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர்.

பின்னர் நாளை நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியான

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

20சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம் ,கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் 226 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

அவஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தொழில் வாய்ப்புகளுக்காக அவர்கள் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை

புள்ளிவிவரங்களின்படி, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையானது இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியியலாளர்களில் 20 சதவீதமாகும்.

அவர்களில் 85 சதவீதமானோர் மின்சார பொறியியலாளர்களாவர்.

அத்துடன் 8 சதவீதமானோர் இயந்திர பொறியியலாளர்கள் என்றும் 7 சதவீதமானோர் சிவில் பொறியியலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

மின்சார பாவணையாளர் சங்கத்தின் செயலாளர்

இதேவளை மின்சார பாவணையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக கூறுகையில், உள்ளக பொறியியலாளர்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 60

புதிய பொறியியலாளர்களை நியமிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.

இந்த புதிய ஆட்சேர்ப்பானது, ஆட்சேர்ப்பு நடைமுறையை மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன்

கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார்.

அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை அறிவிப்பு: இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, குளங்கள் மற்றும் ஆறுகளில் நீராடும்போது பொதுமக்கள், குறிப்பாக

சிறுவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
Posted in பாடல்கள்

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்


இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |கம்பியூட்டர் ஜீ பாடல்கள் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா

இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் என்ற பாடலை வன்னி மைந்தன் மகன் கம்புயூட்டர் ஜீ அவர்கள் எழுதியுள்ளார் ,பிரிதானியாவில் பிறந்து இளைய தலைமுறை பிள்ளையான இவர் தமிழில் தமிழர் தேசத்தை நினைத்து இந்த பாடலை எழுதியுள்ளார் .

இவரது பாடல் சிறக்க மதுர குரலோன் பாவேந்தன் இளங்கோவன் உயிர் கொடுத்து பாடி இருக்கார் |அற்புதமான இசையை இளங்கோ செல்லப்பா அவர்கள் இசைத்துள்ளார் .

இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

|கம்பியூட்டர் ஜீ புதிய பாடல்கள் இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
COMPUTER G new SONGS |vanni mainthan son new song |New Songs relase Vanni mainthan son computer g songsவன்னிமைந்தன் மகன் எழுதிய 50 தாவது பாடல் வெளியீடு சாதனை

click here video

மாலியின் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு
Posted in உலக செய்திகள்

மாலியின் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு

மாலியின் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு

மாலியின் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் பிரெஞ்சு முகவராக சந்தேகிக்கப்படும் ஜெனரல்களை கைது செய்கிறது.


‘குடியரசின் நிறுவனங்களை சீர்குலைக்கும்’ சதி முறியடிக்கப்பட்ட பின்னர் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாலி அமைச்சர் கூறுகிறார்.

நாட்டை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மாலி இராணுவ ஜெனரல்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் பிரெஞ்சு ரகசிய முகவர்

உட்பட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குழுவை மாலி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மாலியின் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக பல நாட்கள் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, மாலியின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் தாவூத் அலி முகமதுதீன் வியாழக்கிழமை மாலை கைதுகளை அறிவித்தார்.

“நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

“குடியரசின் நிறுவனங்களை சீர்குலைக்கும் நோக்கில் குற்றவியல் குற்றங்களுக்காக மாலியின் ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒரு

சிறிய குழு கைது செய்யப்பட்டதை இடைக்கால அரசாங்கம் தேசிய மக்களுக்குத் தெரிவிக்கிறது,” என்று முகமதுதீன் தேசிய செய்திகளில் கூறினார்.

“சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் சதி முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார், ஆகஸ்ட் 1 ஆம் தேதி சதி தொடங்கியது என்றும் கூறினார்.

“இந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள்” “வெளிநாட்டு நாடுகளின் உதவியைப்” பெற்றுள்ளனர் என்று மாலியின் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, மேலும் யான் கிறிஸ்டியன் பெர்னார்ட் வெசிலியர் என

அடையாளம் காணப்பட்ட ஒரு பிரெஞ்சு நாட்டவர் “பிரெஞ்சு உளவுத்துறையின் சார்பாக” பணியாற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இஸ்ரேலிய சர்வதேச சட்ட மீறல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய சர்வதேச சட்ட மீறல்

இஸ்ரேலிய சர்வதேச சட்ட மீறல்

இஸ்ரேலிய சர்வதேச சட்ட மீறல் ,இஸ்ரேலிய குடியேற்றத் திட்டத்தை சர்வதேச சட்ட மீறல் என்று துருக்கி கண்டிக்கிறது.


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது குடியேற்றங்களை பெருமளவில் விரிவுபடுத்தும் இஸ்ரேலின் திட்டத்தைக் கண்டிக்கும் சமீபத்திய நாடாக

துருக்கி மாறியுள்ளது, இது பாலஸ்தீனிய பிராந்திய உரிமைகோரல்களைக் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

வியாழக்கிழமை ஒரு அறிக்கையில், ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதுதான் நீடித்த அமைதியை அடைவதற்கான ஒரே வழி என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

“இந்த நடவடிக்கை … சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறது;

இரு அரசு தீர்வுக்கான அடிப்படையான பாலஸ்தீன அரசின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறிவைக்கிறது, மேலும் அமைதியை நம்புகிறது,” என்று அது கூறியது.

பதிப்புரிமை காரணமாக திரைப்பட விழாரத்து
Posted in உலக செய்திகள்

பதிப்புரிமை காரணமாக திரைப்பட விழாரத்து

பதிப்புரிமை காரணமாக திரைப்பட விழாரத்து

பதிப்புரிமை காரணமாக திரைப்பட விழாரத்து ,பதிப்புரிமை கவலைகள் காரணமாக திரைப்பட விழா ரத்து செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 7 ஆம் தேதி திரையிடப்படும் ஆவணம்.


டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF), ஹமாஸ் தலைமையிலான அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்த

ஆவணப்படத்தை முதலில் திரையிடப்போவதாக அறிவித்துள்ளது, ஆனால் பதிப்புரிமை கவலைகள் காரணமாக திரையிடலை ரத்து செய்தது.

தி ரோட் பிட்வீன் அஸ்: தி அல்டிமேட் ரெஸ்க்யூவின் பின்னணியில் உள்ள கனேடிய திரைப்படத் தயாரிப்பாளரான பாரி அவ்ரிச், பாலஸ்தீனக் குழுவால்

பதிவுசெய்யப்பட்ட படத்தில் இடம்பெற்றுள்ள கிளிப்களைப் பயன்படுத்த ஹமாஸிடமிருந்து அனுமதி பெறாததால், TIFF ஆரம்பத்தில் திரையிடலை ரத்து செய்தது.

TIFF இப்போது தனது முடிவை மாற்றியுள்ளது, விழாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேமரூன் பெய்லி மற்றும் அவ்ரிச் ஒரு அறிக்கையில் “பொதுமக்கள் வெளிப்படுத்திய வலி மற்றும் விரக்தியைக் கேட்டதாக” தெரிவித்தனர்.

“முக்கியமான பாதுகாப்பு, சட்ட மற்றும் நிரலாக்க கவலைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு தீர்வைக் காண நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள் ,காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழகம்

தமிழக பொலிஸாரால் கைது

ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் என்ற இரு இளைஞர்கள்

பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அவர்களது படகு பழுதடைந்து நின்றது.

இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பழுதடைந்த படகையும் இரு மீனவர்களையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

வேதாரண்யம் கடலோர காவல் குழு

வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்களா அல்லது கடத்தல் நோக்கத்துடன்

வந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்காடு பகுதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மாங்காடு பகுதியில் விபத்து

மாங்காடு பகுதியில் விபத்து

மாங்காடு பகுதியில் விபத்து ,மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில்

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் படுகாயமடைந்த

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை

நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ,தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள்

அமைச்சகமும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.

டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கை

மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள்

சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து ,எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

பண்டாரவளை வைத்தியசாலை

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள்

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

ரயில் நிலைய கண்காணிப்பு விஜயம்

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் .

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,

பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி உள்ளிட்ட மாவட்ட அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, திருத்தப் பணிகள்,

நவீனமயமாக்கல் மற்றும் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் நானுஓயாவிலிருந்து பதுளை

செல்லும் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புனரமைப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், ரயில் நிலைய பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில்

போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள்

தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.