தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்
Spread the love

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள்

தமிழக கடற்கரையை அடைந்த இலங்கைமீனவர்கள் ,காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழகம்

தமிழக பொலிஸாரால் கைது

ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் என்ற இரு இளைஞர்கள்

பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அவர்களது படகு பழுதடைந்து நின்றது.

இதனையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பழுதடைந்த படகையும் இரு மீனவர்களையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

வேதாரண்யம் கடலோர காவல் குழு

வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீன்பிடிக்க வந்தவர்களா அல்லது கடத்தல் நோக்கத்துடன்

வந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.