சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்

சிக்கிய பெருமளவு போதைப்பொருள்

மியன்மாரில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று மாலை தமிழகத்தில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து

தமிழ்நாடு – சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னையின் ஊடாகக் கடல் கரைக் கிராமத்தின் ஊடாக இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதே கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடியோ

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மியான்மாரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக திருப்பி பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக வௌிவிவகார அமைச்சகம் மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை மியான்மார் அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 6181 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் அதே தாக்குதலில் 1200 ,இஸ்ரேலியரக்ள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் வரலாற்றில் சந்தித்திராத மிக பெரும் இழப்பை தற்போது சந்தித்துள்ளது.

இந்த பேரிழப்பை ஏற்று கொள்ள முடியாத அவமானத்தில் ,அரசு மற்றும் இராணுவம் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட .தக்கது

வீடியோ

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

டொனால்ட் டிரம்ப் மகள் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அவர்களது மகள் இவாங்க தனது கணவருடன் இஸ்ரேலுக்கு திடீர் பயணம்

இஸ்ரேல் தெற்கு பகுதிக்கு , ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்திய பகுதிக்கு சென்று அதனை பார்வையிட்டுள்ளனர் .


போராளிகளினால் கைது செய்து இழுத்து செல்ல பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்க டிரம்ப் உதவிட வேண்டும் என்ற கோரிக்கை அவர் ஊடாக இஸ்ரேல் விடுத்துள்ளது

வீடியோ

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்


சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட்

சொல்லி அடித்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் முக்கிய தளபதி அவுட் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ரொக்கட்


இழப்பை ஏற்று அறிவித்த எதிரி இராணுவம் .

வீடியோ

மனநோய் அல்ல
Posted in இலங்கை செய்திகள்

மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்

மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்

மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு

தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வீடியோ

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
Posted in இலங்கை செய்திகள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ

தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்களாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.

உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை

தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல் |
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல் |

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி முற்றாக அகற்றல்

ஹமாஸிடம் அடிவாங்கி சுருண்ட முக்கிய படையணி அந்த களமுனையில் இருந்து முற்றாக அகற்றல் ,இஸ்ரேல் முதலாவது படைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு

வீடியோ

மழைக்காலத் துன்பங்கள்
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

மழைக்காலத் துன்பங்கள்

மழைக்காலத் துன்பங்கள்

தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது

கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது

சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது

அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது

வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது

நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது

கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !

-பிறேமா(எழில்)-

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

23 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் பிணையில் செவ்வாய்க்கிழமை (19) விடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர் தின அனுஷ்டிப்பு நால்வருக்கு பிணை

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்

அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதி வரை மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டையடுத்து KFC இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் தரிந்து, தாங்கள் உட்கொள்ளும் KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.

பழுதடைந்த KFC கோழி இறைச்சிகள் குறித்து முறைப்பாடு

“இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்,” என்று PHI அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என PHI அதிகாரிகள் தெரிவித்தன

வீடியோ

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்
Posted in இலங்கை செய்திகள்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

தாத்தா ஆனா சுமந்திரன் ஓய்வு அறிவித்தார்

இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்,

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார்.

வீடியோ

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்


இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள்|தாக்க நுழைந்த விமானங்கள்

இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஏவுகணைகள் ஹிஸ்புல்லா ஹமாஸ் கடும் தாக்குதல் .


கவுதி தாக்குறாங்க காப்பாத்துங்க இந்தியாவிடம் நெதன்யாகு கெஞ்சல் .

நெதன்யாகுவை ஓடவிட்ட ஹவுதி .


மிக பெரும் தாக்குத்தல் நடத்த நுழைந்த விமானங்கள் .திணறும் இஸ்ரேல் ,

வீடியோ

ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்


ஈரான் களமிறங்கிய புதிய விமானம்|அலறும் எதிரி இஸ்ரேல்

ஈரான் களமிறங்கிய புதிய விமானம் .ஆயிர கணக்கில் உற்பத்தி ,
அலறும் எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்கா ,

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி


இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்த ஹமாஸ்|2 தளபதிகள் பலி

இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கிய ஹமாஸ்.
2 முக்கிய கட்டளை இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி ,

மேற்குக் கரை குடியேற்றத்தைச் சேர்ந்தமாஸ்டர் சார்ஜென்ட். (res.) டேனியல் யாக்கோவ் பென் ஹரோஷ், 31, 551 வது படைப்பிரிவின் 6551 வது பட்டாலியனை சேர்ந்த
நேற்று வடக்கு காசாவில் சண்டையில் பலியாகியுள்ளார் .

இவருடன் கப்டன் Cpt. (ரெஸ்.) ரோட்டெம் யோசெப் லெவி, 24, காம்பாட் இன்ஜினியரிங் கார்ப்ஸின் யஹலோம் பிரிவின்
துணைத் தளபதி, ஆகியோரே வடக்கு காசாவில் வைத்து ஹமாஸ் படைகளினால் போட்டு தள்ள பட்டனர் .

வீடியோ

இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்


இஸ்ரேல் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர்

இஸ்ரேல் முகாம் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்,
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையில் வெடித்த கடும் போர்

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .

இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .

இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .

யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

வீடியோ

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவின் Qinghai  பகுதியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 மக்கள் பலியாகியுள்ளனர் .250 மக்கள் காயமடைந்தும் 100 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த நிலநடுக்கமானது 6.2 புள்ளி அளவில் பதிவாகியுள்ளது .சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் என்பன இடிந்து அழிந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

வீடியோ

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்

ஹவுதிகள் இராணுவம் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை சிறைபிடித்து தாக்கி வருகின்றன ,இதனை அடுத்து தற்போது அமெரிக்கா தலமையில் கடலில் மோதல் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

எட்டுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து கடல் பாதுகாப்பு என்கின்ற போர்வையில் ஹவுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருகின்றன .

ஒட்டுமொத்த நாட்டு கடல்படைகளும் அங்கு குவிக்க பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

கொடியேற்றம் வேட்டை திருவிழாவில் முடிவடையும் என நம்பலாம் .

வீடியோ