இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்


இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் கொதிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் ,
கொதிக்கும் இஸ்ரேல் , கப்பல் போக்குவரத்து

வீடியோ

அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 தளபதிகள் ஓடும் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 தளபதிகள் ஓடும் இராணுவம்


அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 தளபதிகள் ஓடும் இராணுவம்

அடித்த ஹமாஸ் வீழ்ந்த 5 முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள்,
ஓட்டம் பிடிக்கும் இராணுவம் ,திணறும் அதிகாரம் ,

வீடியோ

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
Posted in உலக செய்திகள்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.

குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு
Posted in இலங்கை செய்திகள்

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருட இறுதிக்குள் டொலரொன்றின் பெறுமதி 365 ரூபாவாக இருந்தது. தற்போது டொலரொன்றின் பெறுமதியை 320 ரூபாவிற்கு கொண்டுவர முடிந்துள்ளது என மனுஷ நாணயக்கார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய டொலரின் பெறுமதியை 11 வீதத்தால் குறைக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் நபரொருவரை கொலை செய்த சந்தேகநபரை பொலிசாரால் கைது செய்ய முடிந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை எலகந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபரொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

போதைப்பொருளுடன் சிக்கிய கொலையாளி

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வத்தளை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (23) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

தொலைபேசி தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் சந்தேக நபர் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சோதித்த போது, ​​அவரிடம் இருந்து 04 கிராம்
150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடலாம்

இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடலாம்

இன்றும் நத்தார் பண்டிகையான நாளையும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிக்கு தேவையான உணவை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர முடியும் என்பதுடன் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்


ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம் ,
சிக்கலில் ஆளும் அரசு

குஞ்சப்பு பேச்சில
குலுங்கி சிரிக்கிற
மக்கள் கருத்தில
மனம் குளிருது

வீடியோ

ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா


ஹவுதிக்கு பயத்தில் தப்பி ஓடும் நாடுகள் அதிர்ச்சியில் அமெரிக்கா

ஹவுதி தாக்குதல் பயத்தில்,அமெரிக்கா கப்பல் படையை கைவிட்டு
தப்பி ஓடும் நேச நாடுகள்

சற்றும் எதிர்பாராத ஆட்டம் .

உலக சண்டியர் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்துள்ள காட்சிகள் .அதிர்ச்சியில் அமெரிக்கா

வீடியோ

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தின் கமாண்டோ முக்கிய படையணி தளபதியை ஹமாஸ் சினைப்பர் அணியினர் போட்டு தள்ளினர் .

கட்டடம் ஒன்றின் மேல் புறத்தில் தரித்து நின்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை குறிவைத்து அடித்து வீழ்த்தியுள்ளனர் .

துல்லியமான குறி சூட்டு தாக்குதலில் திக்கு முக்காடி போயுள்ளது இஸ்ரேல் படைகள் .

உடைந்த கட்டிடங்களுக்குள் உயிரை துச்சமென மதித்து உள்ளே நுழையும் ஹமாஸ் போராளிகள் ,அங்கிருந்தவாறு எதிரிகளை எண்ணி எண்ணி போட்டு தள்ளினர் .

தமது சொந்த தயாரிப்பில் சினைப்பரை தயாரித்து அத ஊடக தாக்குதலை நடத்தியுள்ளது இந்த அமைப்பினர் .

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே

சினிமா காட்சியில் வருகின்ற தாக்குதலை இங்கே நியத்தில் பார்க்க முடிகிறது .

சூடு வாங்கிய சிப்பாய் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .

780 இஸ்ரேல் படைகள் சில வாரத்தில் காயமடைந்து வீழ்ந்துள்ள சம்பவம் ஹமாஸ் தாக்குதலின் அதி உச்சத்தையும் ,அகோரத்தையும் காண்பிக்கிறது .

விடுதலைக்காக போராடும் போராளிகள் முன்பாக கூலிக்கு போராடும் படைகள் வீழ்ந்து மடிகின்றன .

அடக்குமுறை அராயகம் தற்போது முடிவு கட்ட படுகிறது .பல லட்சம் மக்கள் கண்ணீர் சாபம் ,இஸ்ரேலை அலறவிட்ட வண்ணம் உள்ளது .

முள்ளி வாய்க்கால் தமிழர் அவலம் ஒரு உதாரணம் ,அதே கொலைகாரர்களான ராஜபக்ஸ ஆட்சியை சிங்கள மக்களே துரத்திய சம்பவம் இடம்பெற்றது .

அதே போன்று நெதன்யாகுவும் ஓட்டம் பிடிக்க போகின்றார் .

இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
இஸ்ரேல் தளபதியை போட்டு தள்ளிய ஹமாஸ் சினைப்பர் அணியினர் படம் உள்ளே
எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் தாக்குதலை வேக படுத்தியுள்ள ஹமாஸ் போராளிகள் .

காசா மக்கள் மீது தொடராக குண்டுமழை பொழிந்து அந்த மக்களை தாக்கி வரும் இவ்வேளையில் ,அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த தாக்குதலில் அடுக்குமாடி கட்டடங்கள் .,கார்கள் வீடுகள் ,என்பன பற்றி எரிகின்றன .


இஸ்ரேலின் முதுகெலும்பாக விளங்கும் அயாண்டோம் ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் ,இந்த ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து தாக்குதலை நடத்தியுள்ளது .


இதனால் இஸ்ரேலிய மக்கள் உயிர் பாதுகாப்பு தேடி ,ஏவுகணைகள் அச்சுறுத்தல் இல்லா பகுதிகளை நோக்கி ஓடிய வண்ணம் உள்ளனர் .

காசா மட்டும் தற்போது அழியவில்லை ,இஸ்ரேலும் தான் அந்த பேரழிவை சந்தித்து கொண்டுள்ளது .


தமது இராணுவ ,மக்கள் இழப்பை இஸ்ரேல் மூடி மறைத்து வரும் நிலையிலும், அவ்வோப்போது சில காட்சிகள் வெளியாகி ,களநிலவரத்தை புட்டு புட்டு வைத்து விடுகின்றன .

வீடியோ

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே
எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே

எரியும் இஸ்ரேல் வெடிக்கும் ஏவுகணைகள் படங்கள் உள்ளே
ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்


ஹவுதி விமானம் தாக்குதல்|எரியும் இஸ்ரேல் கப்பல் சிக்கிய இந்தியர்கள்

இந்திய கடலில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் ஒயில் கப்பல் மீது
ஹவுதி விமானங்கள் திடீர் தாக்குதல்

ஹவுதி விமான தாக்குதலில் எரியும் கப்பல் ,
மாலுமிகளாக பணியாற்றிய சிக்கிய இந்தியர்கள்.

அவர்களை மீட்க விரையும் இந்திய போர் கப்பல் .
சொன்னது போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள் தாக்குதலினால் நிலை குலைந்துள்ள உலகம்

வீடியோ

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா சிறிதரன் காட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்

தமிழர்களை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஏமாற்றி வருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

திறந்த மனதோடு சிங்கள ஆட்சியாளார்கள் பேச தயாராக இல்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் புரையோடி போயுள்ள தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வினை கண்டு ,ஐக்கிய பட்ட இலங்கையை கட்டி எழுப்ப வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட யாரும் தயாராக இல்லை .

லஞ்சம் ஊழல் மோசடி ஏமாற்றில் ஊறிபோயுள்ள இலங்கை இதில் இருந்து விடுபட முடியாது உள்ளது என்பது அவரது கருத்தாக உள்ளது .

வீடியோ

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

இந்தியயாவினால் மேற்கொள்ள பட்ட 13 வாது சட்ட சீர் திருத்தும் மேற்கொள்ள பட்டு அதில் மேலதிக சில அதிகாரங்கள் இணைக்க பட்டு ,மாகாணங்களுக்கு தீர்வு வழங்க படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஆண்டு தேர்தல் இடம் பெற்று அதன் பின்னர் அமைக்க படும் எமது ஆட்சியில் இந்த தீர்வு முன் வைக்க படும் என, ரணில் தெரிவித்துள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

தேர்தலில் வெல்ல இவ்வாறான ஒரு கபட நாடாகத்தை ரணில் ஆட ஆரம்பிட்டுள்ளதன் வெளிப்பாடாக இதனை பார்க்க முடிகிறது .

ரணில் விக்கிரமசிங்க நரி என்பது இதன் மூலம் மீளவும் அம்பலமாகியுள்ளது

வீடியோ

இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே

இஸ்ரேல் முகாம் அழிப்பு வெடித்து சிதறும் காட்சி video உள்ளே

லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் ,
தொலை தொடர்பு கோபுரங்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவம்
கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ஆள் ,ஆயுத இழப்பு தொடர்பாக உடபானடியாக தெரியவாவில்லை

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

வீடியோ

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்


இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் அழிப்பு ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் தொலை தொடர்பு கோபுரங்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவம்
தாக்குதல் ,வெளியான காணொளி

துல்லியமாக தாக்கி அழிக்கும் வீர செயல் .

வீடியோ

கோபுர அழிப்பு காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்


இஸ்ரேல் இராணுவத்தை கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் பலநூறு பேர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தை கடுமையாக தாக்கி ,
கொத்தாக வீழ்த்திய ஹமாஸ் ,பலநூறு பேர் காயம் இஸ்ரேல் அறிவிப்பு ,

வரலாறு காணாத பேரிழப்பு ,

வீடியோ

இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி


இஸ்ரேல் கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் அடித்த ஹவுதி

இஸ்ரேல் சரக்கு கப்பல்களை காட்டி கொடுத்த ஈரான் உளவு ,
கப்பல் சொல்லி துரத்தி அடித்த ஹவுதி ,கண்டு பிடித்த அமெரிக்கா ,கொதிக்கும் இஸ்ரேல் ,

வீடியோ

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற

தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக

கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட

கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி

மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய பிரஜையான 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்கள், “ரம்போ” வகையைச் சேர்ந்த கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது

இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதாக இருந்தால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டரீதியான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த வெளிநாட்டு பிரஜை எவ்விதமான அனுமதியையும் பெறாமல் கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) பிற்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த பயணப் பொதியை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜை விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பயணியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். குறித்த கைத்துப்பாக்கியை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.