சஜித் பிரேமதாஸ புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சஜித் பிரேமதாஸ புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
ஒவ்வோர் இருண்ட யுகத்திலும் ஒரு வெள்ளிக் கோட்டைப் பார்ப்பது போல, இந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு வளமான யுகத்தை உருவாக்கவும் அணிதிரள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் மாபெரும் கலாசார விழாவாக அறியப்படும் இந்நாளில், அனைவரும் ஒரே சுப நேரத்தில் இருந்து ஒரே கடமையில் ஈடுபடும் இந்த சம்பிரதாயத்தின் காரணமாக சிங்கள, தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகக் காணப்படுகிறது.
இந்த நாளில் அனைத்து மக்களும் எதிர்வரும் ஆண்டில் செழிப்பு மற்றும் சௌபாக்கியத்தை எதிர்பார்த்து, தங்களால் இயன்றவரை இந்த சடங்குகளை செய்கின்றனர். ஆனால், கடந்த காலம் இலங்கை வாழ் மக்களுக்கு சிறந்த காலப் பகுதியாக அமையவில்லை என்று நான் நம்புகிறேன்.
வரிச்சுமை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றம், நாட்டில் உள்நாட்டு நெருக்கடி என பல பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டதுடன், தற்போது தேர்தல் ஆண்டாகவும் காணப்படுகிறது.
இந்த வருடம் மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கம் நாட்டில் உருவாகும் என்பதும், மீண்டும் எமது தாய்நாட்டுக்கு சுபீட்சம் வரும் என்பதும் எனது நம்பிக்கையாகும்.
மேலும், தற்போது காணப்படுகின்ற வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கொண்ட பெருமை மிக்க நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த கைதிகள் நேற்று விடுதலை பெற்று சிறைச்சாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர் என சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பின் கீழ் 21 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 12 கைதிகள் நேற்று காலை அங்கிருந்து வௌியேறினர்
சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்
சுற்றுலா சென்றவர்களின் வான் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்
பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வானே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ரயில் சேவைகள் சில இன்று இரத்து
ரயில் சேவைகள் சில இன்று இரத்து
இன்று சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட நேர அட்டவணையின் கீழ் 6 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
போர் VIDEO CLICK HERE THE LINK AND WATCH
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ,
சொன்னதாய் போன்று சொல்லி அடிக்கும் ஈரான் .
வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள் ,கோபதாடும் பாலஸ்தீன மக்கள்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
VIDEI HERE CLICK THE LINK AND WATCH
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம் .இஸ்ரேல் மீது அதிரடி தாக்குததலை நடத்தும் ஈரான் .
ட்ரான் ரக விமானங்கள் தாக்குதலை . நூற்றுக்கணக்கான விமானங்கள் தாக்குதல் ஓடும் இஸ்ரேல் மக்கள் என தகவல்
இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் , ஈரான் சைபர் குழு அதிரடி தாக்குதல் பதட்டத்தில் மக்கள் .
பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு,ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உலக , நாடுகள் பதட்டத்தில் உறைவு .
திருப்பி தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அமெரிக்கா தெரிவிப்பு
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.
பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.
இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.
தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் கப்பலை சிறை பிடித்த ஈரான் கடற்படை கொதிக்கும் இஸ்ரேல் .
இஸ்ரேல் நாட்டு கோடீஸ்வரர் ஒருவரது சரக்க கப்பலை ஈரான் இராணுவம் சிறை பிடித்து காணொளி வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள்
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள்
காசா போராளிகளிடம் சிக்கிய இஸ்ரேல் விமானம் அமெரிக்கா இராணுவத்திற்கு ஆப்படித்த அரபு நாடுகள் .
ஈரானை தாக்க அரபு நாடுகள் திடீர் தடை ,கட்டார் ,குவைத் ,துருக்கி என்பன தமது விமான தளத்தை அமெரிக்கா பயன்படுத்த தடை
இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேலை ஈரான் கடுமையாக அடித்து நொறுக்கும் என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது .
இஸ்ரேல் பல இலக்குகள் ஈரானால் குறிவைக்க படுவதாக தெரிவிப்பு
கொழும்பு மும்பை இடையே விமான சேவை
கொழும்பு மும்பை இடையே விமான சேவை
இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போது சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து கொழும்பிற்கு இண்டிகோ எயார்லைன்ஸ் மூலம் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இண்டிகோ எயார்லைன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக கருதப்படுகிறது
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்
சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்
வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என
தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான அவரது தற்போதைய நிலைப்பாடு அதை உறுதி செய்வதுபோன்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் (12.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை ஒரு பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்னெடுத்த வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற
வேட்பாளர்கள் எழுத்து மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுக்கு என்னென்ன விடயங்களை செயல்படுத்துவீர்கள் என்பதை சர்வதேச ராஜதந்திரிகள் முன்னிலையில் குறிப்பாக அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் ராஜேந்திரன் முன்னிலை எழுத்து மூலம் தருமாறு கூறிருக்கின்றார்.
முன்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பொது வேட்பாளர் தேவை இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு அரசாங்க செலவில் அவர்களது தயவில் வாழ்கின்றவர் அப்படித்தான் சொல்வார் என்று சம்பந்தரை கிண்டலும் கேலியும் செய்திருந்தார் இந்த விக்னேஸ்வரன்.
இவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்த விக்னேஸ்வரன் அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திர்க்கா அம்மையார் 2000 ஆம் ஆண்டு கொண்டுவந்த விடயங்கள் நல்ல விடயங்கள் என்றும் அதிலே பல சிறந்த விடயங்கள் இருக்கின்றன என்றும் சொல்லி இருக்கின்றார்.
இதிலிருந்து இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடைய குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் ஒரு முகவராக மாறியிருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுகின்’றது.
இதேவேளை சர்வதேசத்தின் பங்களிப்புடன் புலிகளும் அன்றைய அரச ஆட்சியாளர்களும் இடையே 2002 இல் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதேபோன்று இந்நாட்டில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறையாகாத வரலாறும் உள்ளன.
இதேவேளை ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வடக்கின் அரியணையில் ஏறிய விக்னேஸ்வரன் ஆளுமை இன்மையால் தனது ஆட்சியில் இருந்து அமைச்சர்கள் செய்த மோசடிகளால் அவரது தலைமையிலான ஆட்சியை கலைப்பதற்காக அவைத் தலைவராலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வரலாறும் இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது ஆளுநர் சரியில்லை என்று கூறி தமக்கேற்ற ஆளுநரையும் கொண்டுவந்திரந்தார்கள. ஆனால் ஊழலையும் சபைக்காக வந்த பெரு நிதியை மீிள அனுப்பியதையும் தவிர வேறொன்றையும் சாதித்திருக்கவில்லை.
பின்னர் கட்சியிலிருந்து வெளியேறி புது கூட்டுக்களை அமைத்து தனது சுயநலங்களை மேற்கொண்டுவருவதும் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறாக உறுதியான அரசியல் நிலைப்பாடில்லாத ஆளுமையற்ற விக்னேஸ்வரன் இப்போது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் கதையை கூறியிருப்பது மக்களுக்கு மேலும் அழிவுகளையே கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை
சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை
மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ள நிலையில், ஹர்ஷன குமார என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சித்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நாளை (13) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஹம்பேகமுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
ஹம்பேகமுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
ஹம்பேகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (12) இரவு ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறும் வடக்கு இஸ்ரேல் .
இஸ்ரேல் வடக்கு கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஹமாஸ் போர் படைகள் கடும் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்கின்ற பீதி காரணமாக ,ஈரான் விமான பயணங்களை இரத்து செய்த அவுஸ்ரேலிய விமான சேவை .
இஸ்ரேல் இரான் போர் பதட்டம் தொடர்கிறது .
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று இரவு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மத்திய. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க நாளை (13ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் குமுழமுனை, முறிகண்டி, கேரிதமடு மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது































