இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்
இஸ்ரேல் தாக்கினால் புதிய ஆயுதங்களினால் அடிப்போம் ஈரான்
இஸ்ரேல் ஈரானை தாக்கினால் இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்களினால் இஸ்ரேலை திருப்பி அடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது .
யூத இராணுவம் தாக்குதலை நாடத்தினால மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்கின்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளது .அதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெறாது தடுக்கும் நடவடிக்ககையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன .
பறந்து கொண்டிருந்த உலங்கு வானூர்தி திடீரென வீழ்ந்து நொறுங்கியது , இந்த உலங்கு வானூர்தியை வீழ்த்தியது யார் என்கின்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
உக்ரைனுக்கு நெதர்லாந்து பில்லியன் டொலர் ஆயுதங்கள் வாங்கிட உதவி ,உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் இந்த நித்திய நெதர்லாந்து அரசு அள்ளி வழங்குகிறது .
இஸ்ரேல் ,ஈரான்,உலங்கு வானூர்தி ,வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி,இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும்,
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் நள்ளிரவில் நடந்த கடும் யுத்தம் .
இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா ஒன்றிணைந்த கூட்டு ஏவுகணை ,டிரோன் விமான தாக்குதலினால் இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்கள் அலறின .
யூத இராணுவ விமான தளங்கள் ,படைத்துறை முகாம்கள் என்பனவற்றை ஏவுகணைகள் கடுமையாக தாக்கின
என்கின்ற பர பரப்பு உளவு செய்திகள் வெளியாகி புயலை கிளம்பியுள்ளன .
அதேவேளை சிரியாவில் ,ஈரானிய, தூதரகம் மீதான தாக்குதலை கண்டிக்க மறுத்த , பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா கடுமையாக சாடியது .
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதிகள்
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல்|இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பிரிட்டன் கோரிக்கை
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல்|இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பிரிட்டன் கோரிக்கை
ஈரான் அணு உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு விமான படைகள் தாயராகி வருகின்றன .
ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்க நிலையில் இறுதி நிலையை எட்டியுள்ளது .
அதானல் அதற்கு முன்னதாக இந்த அணு உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் முயல்கிறது .
ஈரானிய அணு கூடத்தையோ அல்லது ஈரானிய நாட்டுக்கு உள்ளே தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கமரோன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் அவச கோரிக்கை விடுத்துள்ளார் .
இரான் உள்ளே தாக்குதலை யூத இராணுவம் நடத்தினால் அதுவே மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என கவலை வெளியிட பட்டுள்ளது .
தயாராகும் இஸ்ரேல்,
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் ஈரான்.
இஸ்ரேல் எவ்வேளையும் வலிந்து தாக்கலாம் என எதிர் பார்க்கும் ஈரான் போருக்கு தயாரான நிலையில் இராணுவத்தை உசார் நிலையில் வைத்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,ரஸ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சத்தையும் சேதங்களை ஏற்படுத்துவதாக உக்ரைன் தெரிவிப்பு ,இந்த ஏவுகணைகள் ஆபத்தானவை உக்ரைன் குற்ற சாட்டு .
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம்
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிறுமி காயம்
மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்கள்
யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் பட்டா வாகனம் என்பன இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
குறித்த வன்முறைச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.
இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்
ஈரானை தாக்குவோம் என இஸ்ரேல் இராணுவம் உறுமல் சவால் விட்டுள்ளது .
ஈரான் மீதான தாக்குதல் நேரத்திற்கு காத்திருப்பதாகவும் ,அதனால் தாக்குதலை இப்பொழுது தள்ளி போட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் அறிவித்துள்ளன .
எதிரி இராணுவ முகாம்களை எதிரிக்கு தெரியாத இராணுவ போர் முறை ஊடக ,ஈரானிய போர் படைகள் ஒன்றித்து தாக்குதலை நடத்தி இருந்தன .
அவ்வாறன பெரும் இழப்பின் பின்புலத்தில் பிரதமர் நெதன்யாகு ஆட்சி அதிகாரம் இவ்விதம் தெரிவித்து போர் பதட்டத்தை தனித்துள்ளது .
Ethiri Tamil News, Ethiri News Live,
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video
ஈரான் அடியில் 100 ஆமி காயம்|இஸ்ரேல் முக்கிய விமான தளம் சேதம்|இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட video
ஈரான் இராணுவம் நடத்திய அடியில் ஆமி காயம் ,இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய விமான தளம் கடும் சேதம் அடைந்த நிலையில் காண படுகிறது .
விமான தளத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ள காட்சிகளை இஸ்ரேல் இராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது .
ஈரான் சொன்னதை போன்று சொல்லி அடித்து சியோனிச படைகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த விமான தளத்தில் இனிமேல் விமானங்கள் நிறுத்த பாதுகாப்பற்ற நிலையை ஈரானிய ஏவுகணைகள் ஏற்படுத்தியுள்ளன.
பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
பலாங்கொடையில் இளைஞர் வெட்டிக்கொலை
பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு மரணித்தார்.
மதுபான விருந்து ஒன்றின் போது இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.
ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு
அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் பண்டார கூறுகிறார்.
இதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதி ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் வைபவம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றதாகவும் இலங்கைத் தூதுவர் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது 500 க்கும் மேற்பட்ட ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் இதுவரை ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்ததாக அவர் கூறினார்.
அந்த அனைத்து வான்வழி தாக்குதல்களையும் அயர்ன் டோம் அமைப்பு மூலம் அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அடி போதுமா இஸ்ரேல் மொஸாட் தலைமையகம் விமான தளம் அழிப்பு ஈரான்
இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான் இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் ஒரு பில்லியன் இழப்பாம் .
ஈரான் மெது தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிப்போம் என ஈரானிய இராணுவம் உறுமல்
https://www.youtube.com/watch?v=IoceVc-c2as
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 விமான தளம் சேதம் 10 விமானம் அழிப்பு ஓடுபாதைகள் சேதம் எரியும் துறைமுகம்
இஸ்ரேல் 3 இராணுவ விமான தளம் சேதம் ,10 விமானம் அழிப்பு.
ஓடுபாதைகள் சேதம் , எரியும் கைபா துறைமுகம் ,துறைமுகம் உள்ளே பலத்த குண்டு சத்தங்கள் .
இரான் வரலாறு காணாத மிக பெரும் தாக்குதல்
ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.
இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப்
புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.
புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.
புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்































