திருகோணமலையில் கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கோர விபத்து

 திருகோணமலையில் கோர விபத்து

திருகோணமலையில் கோர விபத்து ,திருகோணமலை கபர்ண வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது 32 அதிகரித்துள்ளது,இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்று பலபல வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வீதி விதிமுறைகளை மதித்து வாகனங்களை செலுத்தி செல்ல மறந்தமையால் சாரதிகள் அயர்ந்து உடல் அசைவில் நித்திரை கொள்வதால் ,இந்த விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

 வாகன ஓட்டிகள் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது .

வீடியோ

ஆனால் அதனை கடைபிடிக்காமல் வாகனங்களை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்து ஏற்படுவதாகவும் பல அப்பாவி உயிர்கள் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறாத எனவும் அவற்றை தடுத்திருக்க முடியும் என்பது மக்கள் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்
Posted in இலங்கை செய்திகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள் ,2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள்

, சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியை இழந்து அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தாமல் இருத்தல், அரச வருவாயை அதிகரித்தல் போன்ற

நோக்கங்களுடன், நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும்

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் பின்வரும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

வீடியோ

அதன்படி,

  1. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் இதன் மூலம் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவிர மற்ற
  3. இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்திற்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யலாம்.

  1. இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மோட்டார் வாகனமும் கொள்வனவாளரின் பெயரில் (பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து வாங்கினால்) அல்லது

  2. இறக்குமதியாளரின் பெயரில், குறிப்பிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான இறக்குமதி பில்லில்/சுங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள், மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  3. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மற்ற அனைத்து தேவையான ஆவணங்களுடனும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மேலே உள்ள பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர மற்ற இறக்குமதியாளர்கள், தங்கள் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும்போது, ​​தங்கள் முதல் வாகனத்தை இறக்குமதி செய்த நாளிலிருந்து 12

மாத காலத்திற்குள் வேறு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். (சுங்கப் பதிவு திகதியிலிருந்து).

  1. ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை,
  2. காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45% க்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  3. மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படாது.

  1. ஒரு மோட்டார் வாகனத்தின் வயதை நிர்ணயிப்பதில், மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்ட திகதிக்கும் சரக்குக் கட்டணம்/விமானப் பாதை மசோதா திகதிக்கும் இடைப்பட்ட காலம் கணக்கிடப்படும்

  1. சலுகை வரிச் சலுகைகளின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது.

  1. ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை(களை) மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம்

அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம்

 அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய விமானம் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் விமானம் முற்றாக தீயில் எறிந்து அளித்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அமெரிக்காவில் உள்ள பிலாபியா பகுதியில் மருத்துவ சேவை பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதி மேலாக பறந்து கொண்டு இருந்த பொழுது விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது.

 இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த ஆறுபேரும் பலியாகி உள்ளதாகவும் ,இந்த விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் தீ ஏற்பட்டு அங்கு தீ சம்பவம் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக பயணிகள் விமானம் ஒன்று விழுந்து 60க்கும் மேற்பட்டவர் பலியாகிய சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் ,இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

 இது விமான விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சாதியா அல்லது சீனா போன்ற நாடுகளில் உளவு விளையாட்டா என்பது தொடர்பாக குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.

 அமெரிக்காவில் சமீப காலங்களாக தொடராக இவ்வாறான விமான விபத்துக்கள் உள்நாட்டுக்குள் இடம் பெற்று வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

மகளைக் கொன்ற தாய்
Posted in இலங்கை செய்திகள்

மகளைக் கொன்ற தாய்

மகளைக் கொன்ற தாய்

 மகளைக் கொன்ற தாய் உள்ளிட்ட சகோதரர்கள் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கம்புறுபிட்டிய போலீஸ் பிரிவில் உள்ள வீடுகளில் இருந்து  சடலம் ஒன்று ஒடுக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அந்த சடலம் தொடர்பாக அது யார் என்பது ஒரு பக்கமும் தாயார் அந்தக் கொலையை தடை செய்ததாக போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 அதிக பேராசை காரணமாக தனது மகள் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் சொத்துக்களை தரும்படி கேட்டு வந்ததாகவும்

அதனால் சம்பவம் நடந்த பொழுது தனது கழுத்தை மகள் நெரித்ததாகவும் , அதனால் ஆத்திரம் கொண்டு அவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்த பொழுது,

அங்கு தாயார் தற்கொலை செய்வதற்காக அதிக மாத்திரைகள் உட்கொண்டு நாற்காலியில் கிடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ

 மயக்க நிலையில் இருந்த தாயார் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இரத்தக்கறை படிந்த கடிதமாக காணப்பட்டதால் ,போலீசார் உடனடியாக தீவிர விசாரணை ஆரம்பித்த பொழுது மேற்படி விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வாகனம் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனம் விபத்து

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி வாகனம் விபத்து வந்து சிக்கி சம்பவத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தலைவா பகுதியில் இன்று அதிகாலை ஒரு பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிப்பர் இரண்டாம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சாரதி நித்திரை தூக்கம் காரணமாக இந்த வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 கடந்த தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி வாகன பாதுகாப்பு பிரிவினரே திருப்பி தற்பொழுது தமது இருப்பிட நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனம் விபத்து சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவாக விளங்கிய போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களே இதற்கு காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட வருகின்ற நிலையில் அபரண பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் அமெரிக்காவின் இலங்கை தூதர் இலங்கை உடைய பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த சில நாட்களில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது எங்கே காவடிக்கத்தக்கது.

 இந்த சம்பவம் ஆனது தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களையும் வியப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள் ,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை, அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.

தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ, சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தையிட்டி விகாரை,

யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு, அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார்.

இருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்,

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.

எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

அதேவேளை யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.

எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு, மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

30 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உள்ளன,

அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.

அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அச்சுவேலி – தொண்டமானாறு வீதி புனரமைக்க நடவடிக்கை,

அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோ மீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.

எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இராணுவத்தின் பங்களிப்புடன் வீதி தடைகள்,

வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன் போது, பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.

அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார் ,யாழ். மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும், அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, போக்குவரத்து பிரச்சினைகள், ஆளணி குறைபாடு, காணி விடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர்.

அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் கலந்து கொண்ட வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதில் 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம்

கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தீவுப் பகுதிகளில் போக்குவரத்து சீராக இல்லை எனவும் கிராமப் புறங்களில் சிறுவீதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இங்கு தெரிவித்தார்.

கிராமப் புறங்களில் கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் தீவுகளுக்கான போக்குவரத்து குறைபாடுகள் குறித்தும் படகு சேவைகள் ஆரம்பிப்பது பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து செயற்படும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வட. மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை அதிகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய புதிய சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க

நடவடிக்கை எடுப்பதாகவும், அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

கடற்றொழில் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண இராஜதந்திர ரீதியில் அதிகபட்சமாக தலையீடு செய்வதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

மீன்பிடித்துறைமுகம், மீனவர்களுக்கான வீட்டுத்திட்டம், தீவுகளுக்கான படகுச் சேவைகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நீர்ப் பிரச்சினை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டிருந்ததோடு நீர் விநியோக திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி முன்னேடுப்பது குறித்து வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார்.

நாட்டிலேயே மிகக் குறைந்த அளவு குழாய் நீரை பயன்படுத்தும் மாகாணமாக வடமாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்பதுடன்,

இம்முறை வரவு செலவு திட்டத்தில் புதிய நீர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜனாதிபதி, வடக்கின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் உட்பட முழு அரச சேவையையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகார தரப்பும் அரச பொறிமுறையும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார்.

சீரீ ஸ்கேனிங் இயந்திரம் ,அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற குறைபாடுகள் தொடர்பில் அவர் உரையாற்றியதோடு அவை அவசர தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் புற்றுநோயாளர் மகரகமையில் இருந்து இங்கு அனுப்புவதில் ஏற்படும் சில சிக்கல்கள் குறித்தும் சிறிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக வைத்தியர் இராமநாதன் அச்சுனா எம்.பி கருத்து முன்வைத்தார்.

வைத்தியர் இடமாற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எஸ்.ஶ்ரீதரன் எம்.பி மற்றும் வைத்தியர் சரவணபவநந்தன் சண்முகநாதன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதோடு 180 கிலோ மீட்டரை விட அதிக வீதிகளை திருத்த வேண்டியுள்ளதாகவும் தீவுகளில் உள்ள வீதிகளே அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண எம்.பிகள் சிலரும் கருத்து வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள கிராமிய வீதிகளை புனரமைக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதனை முழுமையாக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ் நகர மண்டப எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது குறித்தும் ஆராயப்பட்டது. இதற்கான இந்த வருடம் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டடத்தை பயன்படுத்தக் கூடிய வகையில் அதனை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரச நியமனம் வழங்குகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதேசவாசி ஒருவர் கோரினார்.

தொழில்வாய்ப்பு வழங்குகையில் மாற்றுத்திரனாளிகளுக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த யாழ். மாவட்ட சுகாதார, போக்குவரத்து, நீரியல் வளத்துறை, போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி சாதகமான தீர்வுகளை கூறினார்.

அமெரிக்க இராணுவ விமான மோதலில் 67 பேர் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ விமான மோதலில் 67 பேர் பலி

அமெரிக்க இராணுவ விமான மோதலில் 67 பேர் பலி

அமெரிக்க இராணுவ விமான மோதலில் 67 பேர் பலி ,அமெரிக்க போக்குவரத்துத் தலைவர் FAA-வை ‘சரிசெய்ய’ ஆரம்பத் திட்டத்தை வெளியிடுவார்

வாஷிங்டனில் புதன்கிழமை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் விமானத்திற்கும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டருக்கும் இடையே ஏற்பட்ட பேரழிவுகரமான மோதலில் 67 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

கூட்டாட்சி விமான நிர்வாகத்தை சீர்திருத்துவதற்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி வியாழக்கிழமை தாமதமாக தெரிவித்தார்.

“@FAANews-ஐ சரிசெய்வதற்கான ஆரம்பத் திட்டத்தை உருவாக்கும் பணியில் நான் இருக்கிறேன். அதை மிக விரைவில் வெளியிடுவேன் என்று நம்புகிறேன்,” என்று டஃபி X-இல் கூறினார். FAA-வில் பன்முகத்தன்மை முயற்சிகளை

கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை விமானப் பாதுகாப்பு குறித்த உடனடி மதிப்பீட்டை இயக்கினார்.

Posted in உலக செய்திகள்

லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா தளங்களை இஸ்ரேல் குறிவைக்கிறது

லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா தளங்களை இஸ்ரேல் குறிவைக்கிறது

லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா தளங்களை இஸ்ரேல் குறிவைக்கிறது ,லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா தளங்களை இஸ்ரேல் குறிவைக்கிறது, போர் நிறுத்த மீறல் குழுவை குற்றம் சாட்டுகிறது.

இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை இரவு பெக்கா பள்ளத்தாக்கிலும் சிரிய-லெபனான் எல்லையிலும் பல ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது.

நிலத்தடி ஆயுத மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வசதி மற்றும் லெபனானுக்குள் ஆயுதக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொரு வசதி ஆகியவை இலக்குகளில் அடங்கும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது

வியாழக்கிழமை, ஹெஸ்பொல்லாவால் ஏவப்பட்ட கண்காணிப்பு ட்ரோனை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது, இது இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக” கூறியது.

ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் நவம்பர் மாத இறுதியில் போர் நிறுத்தத்தை எட்டின, இது 2023 இல் காசா போருடன் தொடங்கிய ஒரு கொடிய மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தது. இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப்

பெறுவதற்கான 60 நாள் கால அவகாசத்தை உள்ளடக்கிய ஒப்பந்தம் பிப்ரவரி 18 வரை நடைமுறையில் இருக்கும் என்றும், ஜனவரி 26 ஆம் தேதி அசல் காலக்கெடுவை நீட்டிப்பதாகவும் அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

போர் நிறுத்த நீட்டிப்புக்குப் பிறகு லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேல் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

தெற்கு லெபனான் நகரமான மஜ்தால் செல்மில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்த ட்ரோன் தாக்குதலே மிகச் சமீபத்திய தாக்குதலாகும்.

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய சீனா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய சீனா

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய சீனா

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய சீனா ,அமெரிக்க விமான விபத்தில் பலியானவர்களில் இரண்டு குடிமக்கள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது

வாஷிங்டனில் 64 பேருடன் சென்ற அமெரிக்க வணிக விமானம் மற்றும் ஒரு இராணுவ ஹெலிகாப்டர் இடையே ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு சீன நாட்டவர்களும் உயிரிழந்ததாக பெய்ஜிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக விபத்தில் இரண்டு சீன குடிமக்கள் கொல்லப்பட்டனர்” என்று “முதற்கட்ட சரிபார்ப்பு” சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சீனா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் துயரமடைந்த குடும்பங்களுக்கு உண்மையான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து உடனடியாகத் தெரிவிக்கவும், விபத்துக்கான காரணத்தை விரைவாக தெளிவுபடுத்தவும், பின்தொடர்தல் விஷயங்களை முறையாகக் கையாளவும் அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

67 பேர் இறந்த விபத்தில் இறந்த தங்கள் நாட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை பெய்ஜிங் பகிர்ந்து கொள்ளவில்லை.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்தவர்களில் பல அமெரிக்க ஸ்கேட்டர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருந்ததாக அமெரிக்க ஃபிகர் ஸ்கேட்டிங் தெரிவித்துள்ளது.

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
Posted in சமையல் சமையல் cook

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

பாரை மீன் – உப்பு மற்றும் மஞ்சல் போட்டு கழுவி எடுக்கவும் .

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் 5
சின்ன சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி 4 தேக்கரண்டி
உல்லி 5
மஞ்சல் 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் 3 தேக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பில்லை
புளி தேவைக்கேற்ப
உப்பு
நல்லெண்ணெய்
தண்ணீர் தேவைக்கு ஏற்ப ..

ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும் .. சூடான சட்டியை அடுப்பிலிருந்து இறக்கவும் அதில் மல்லி , மிளகாய் , மிளகு , சீரகம் போட்டு 2 நிமிடம் சூடக்கவும்.


சூடான அனைத்தும் மற்றும் உல்லி மஞ்சல் அனைத்தையும் மிக்ஸி யாரில் போட்டு நல்ல பசுந்தா அறைத்து எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்னெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் கறிவேப்பிலை சேர்க்கவும் ..


வெங்காயம் பொன்னிரமாக வரும் வரை வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும் .


பின் அதில் புளி கரைசலை மற்றும் தேங்காய் பால் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின் அதனுள் வெட்டி வைத்த பாரை மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

video

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI
Posted in சமையல் சமையல் cook

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAI

மொறு மொறு பருப்பு வடை | கடலைப்பருப்பு வடை | CHANA DAL VADAI |CRUNCHY PARUPPU VADAIதேவையான பொருட்கள் ,

கடலைப்பருப்பை 3-4 மணத்தியாளம் ஊற வைக்கவும்

கடலைப்பருப்பு 2 கப்
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 4
ஒரு துண்டு இஞ்சி
பச்சை மிளகாய் 4
பெரிய சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்லை

முதலில் அரைவாசி கடலைப்பருப்பை மிக்ஸ்சி யாரில் போட்டு அரை பதத்தில் அரைத்து எடுக்கவும் .. மீதி அரைவாசியை முழுதாக போடவும். மீதி உள்ள பருப்பில் காயந்த மிளகாய் மற்றும் பெரிய சீரகம் போட்டு அரைத்து எடுக்கவும் . பின் தேவையான உப்பு மற்றும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசையவும் .

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில அரைத்த வடை மாவை தேவையான அளவுகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்னிரமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

video

மர்மமான முறையில் பெண் கொலை
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை ,கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை.

இருப்பினும், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை யோட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்
Posted in இலங்கை செய்திகள்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம்

2025 Mrs World போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம் ,அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளார்.

மேலும், தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டார்.

இதன் காரணமாக, திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ADB பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு ,ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/

செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா

ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி. ஏ.டி.தமயந்தி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி ,காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள 3065 இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் உள்ள 3065 இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல்

அமெரிக்காவில் உள்ள 3065 இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல்

அமெரிக்காவில் உள்ள 3065 இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல் ,அமெரிக்காவில் உள்ள 3065 இலங்கையர்கள் குறித்து வௌியான தகவல் ,புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள

சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தெரிவித்துள்ளது.

இதன் மூலம், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,445,549 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பட்டியல் ஒன்றை அவர்கள் தயாரித்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

செங்கடலில் கப்பல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

செங்கடலில் கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் கப்பலில் ஏற்பட்ட தீக்கு ஹவுதி தாக்குதல்களுடன் தொடர்பு இல்லை என கடல்சார் மையம் தெரிவித்துள்ளது.


செவ்வாயன்று ஹாங்காங் கொடியிடப்பட்ட ஏஎஸ்எல் பௌஹினியா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் ஹூதி தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா கூட்டு கடல்சார் தகவல் மையம் புதன்கிழமை தெரிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று ஜேஎம்ஐசி தெரிவித்துள்ளது

கப்பலில் இருந்த அபாயகரமான சரக்குகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

எரியக்கூடிய சரக்குகள் காரணமாக சமீப வருடங்களாக கன்டெய்னர் கப்பல்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இரண்டு கடல்சார் ஆதாரங்களின்படி, கொள்கலன் கப்பலின் பணியாளர்கள் செவ்வாயன்று செங்கடலில் அதைக் கைவிட்டனர்.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையாக நவம்பர் 2023 முதல் ஏமன் அருகே சர்வதேச கப்பல் போக்குவரத்து மீது ஹூதிகள் தாக்குதல்களை தொடங்கினர்.

காசா போர்நிறுத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுப்படுத்துவதாக இந்த மாத தொடக்கத்தில் ஹூதிகள் தெரிவித்தனர்.

பனிச்சரிவு பிரெஞ்சு ஆல்ப்ஸில் நான்கு நார்வே சறுக்கு வீரர்களைக் கொன்றது
Posted in உலக செய்திகள்

பனிச்சரிவு பிரெஞ்சு ஆல்ப்ஸில் நான்கு நார்வே சறுக்கு வீரர்களைக் கொன்றது

பனிச்சரிவு பிரெஞ்சு ஆல்ப்ஸில் நான்கு நார்வே சறுக்கு வீரர்களைக் கொன்றது

பனிச்சரிவு பிரெஞ்சு ஆல்ப்ஸில் நான்கு நார்வே சறுக்கு வீரர்களைக் கொன்றது ,புதன்கிழமை பிரெஞ்சு ஆல்ப்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு நார்வே பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகினர்.

அதே நாளில் வடக்கே Haute-Savoie பகுதியில் சாமோனிக்ஸ் அருகே ஒரு தனி பனிச்சரிவு சுவிஸ் பனிச்சறுக்கு வீரர் கொல்லப்பட்டார் என்று அருகிலுள்ள Bonneville இல் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் எல்லையில் உள்ள வால்-செனிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஏழு சறுக்கு வீரர்களின் குழுவில் நோர்வே பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர்.

மூன்று பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர், மற்றொரு, ஒரு பெண், கார்டியோஸ்பிரேட்டரி கைது மற்றும் கடுமையான தாழ்வெப்பநிலை ஆகியவற்றுடன் கிரெனோபில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார் என்று சவோய் அரசியாட்சித் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள மூவரும் காயமின்றி இருந்தனர்.

அவர்கள் ஆஃப்-பிஸ்டே ஸ்கை சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்ததால் பனிச்சரிவு பீக்கான்கள் பொருத்தப்பட்டிருந்தன, Val-Cenis இன் மேயர் ஜாக் அர்னோக்ஸ் AFP இடம் கூறினார்.