அமெரிக்காவில் விமானம் கெலி மோதல்
அமெரிக்காவில் விமானம் கெலி மோதல்
அமெரிக்காவில் விமானம் கெலி மோதல் ,DC விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: பிளாக் ஹாக் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானத்துடன் மோதியது
புதன்கிழமை இரவு, அமெரிக்க ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதிய பின்னர், ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொட்டோமேக் ஆற்றில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
பிராந்திய ஜெட் விழுந்தது, பல நிறுவனங்களின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தூண்டியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் பாம்பார்டியர் சிஆர்ஜே700 பிராந்திய ஜெட் விமானம் இரவு 9 மணியளவில் விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதாக பூர்வாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரம்.
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள்
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள்
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் ,கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன.
திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பிடுவதையும் காட்டுகிறது.
சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்
சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்
சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ,இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தெரிவுக்கு சபாநாயகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கம் மீளமைக்கப்படவிருப்பதை வரவேற்ற அமெரிக்கத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அமெரிக்கா வழங்கிய உறுதியான ஒத்துழைப்புக்களுக்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நன்றி தெரிவித்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை நினைவுகூர்ந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்து வருவதாக அமெரிக்கத் தூதுவர் இங்கு தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதைப் பாராட்டிய அமெரிக்கத் தூதுவர், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார்.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தல், திறன் மேம்பாடு மற்றும் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள் ,கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலமான மாவை சேனாதிராஜா
காலமான மாவை சேனாதிராஜா
காலமான மாவை சேனாதிராஜா ,யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.
அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.
1977 இல் மாவை சேனாதிராஜா தமன உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.
மேலும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.
1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (29) காலமானார்.
குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு அன்று மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற பிரவேசம்…
மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.
ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.
2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.
இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.
அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெற உள்ளது.
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதன் தற்போது போலீசாரால் கைது .செய்யப்பட்டுள்ளார் .
இவர் அனுராதபுரம் பகுதியில் அவசரகால ஒலியை எழுப்பிய படி பயணித்தன காரணமாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
பெயர் மாற்றத்துடன் ஆள்மாறட்டம் செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
சாவகச்சேரியில் வைத்து கைது செய்ய பட்ட ,இவரது கைது ஒரு அரசியல் நாடகம் என்பதாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எதிர் வரும் சித்திரை மாதம் இடம்பெறவுள்ள தேர்தலை மையப்படுத்திய ஒரு அனுதாப அலையை தேடவே இந்த ஒரு கைது நாடகம் அமைந்துள்ளது .
,இதில் இவர் மீதே பிழைகள் உள்ளது ,அவ்வாறான நிலையில் வெளிநாட்டு மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் நடவடிகையின் ஒன்றாக இவை காணப்படுகிறது .
இன்று வன்னி மைந்தன் டிக் டாக் பக்கத்தில் இது தொடர்பாக பல விடயங்கள் பேச படும் .வாருங்கள் கேளும் இவர்கள் நாடகங்களை கேளுங்கள் மக்களே .
தமிழர்கள் ஏமாற்ற பாடுவது தவிர்க்க பட வேண்டும் வசூல் ராஜாவின் வசூல் தடுக்க பட வேண்டும் என்பதே மக்கள் ஆவலாக உள்ளது குறிப்பிட தக்கது .
சிறைக்குள் ஐயா மாமியார் வீடு கொத்துரொட்டி சாப்பாட்டு கூலாக இருந்துவிட்டு யாலியாக வருவார் .
அழுகை ஒன்று அழுவார் ,அனுராவை திட்டுவார் பாருங்க ,திரைக்கதை வசனம் நடிப்பு பயிற்சி எல்லாம் கறுப்பு ஆடுகள் தான் …சாமியே சரணம் ஐயப்பா சரணம் …
இனி தங்கம் குலுங்கி குலுங்கி அழுவார் ,,பாருங்கோ ..சீரியல் கிளைமாக்ஸ் நடக்கும் .சீரியஸாக மக்கள் இருப்பினும் .கால கொடுமை சரவணா .
ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு
ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு
ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு ,வெடிபொருட்களை உள்ளடக்கிய யூத எதிர்ப்பு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி புறநகர் பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய கேரவனை கண்டுபிடித்ததை அடுத்து, திட்டமிட்ட செமிட்டிக் தாக்குதலை முறியடித்ததாக ஆஸ்திரேலிய போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
சிட்னியின் மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 36 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள துரலில் ஜனவரி 19 அன்று கேரவன் கண்டுபிடிக்கப்பட்டது என்று துணை போலீஸ் கமிஷனர் டேவிட் ஹட்சன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்த கேரவனில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன, மேலும் அந்த வெடிபொருட்கள் ஏதேனும் ஒரு வகை ஆண்டிசெமிடிக் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சில குறிப்புகள் உள்ளன,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அச்சுறுத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மேலும் யூத சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கைதுகள் செய்யப்பட்டதாக ஹட்சன் கூறினார், ஆனால் எத்தனை பேர் அல்லது என்ன குற்றச்சாட்டுகள் என்பதை வெளியிடவில்லை.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேல்-காசா போரின் தொடக்கத்திலிருந்து ஜெப ஆலயங்கள், கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீதான தாக்குதல்களுடன், சமீபத்திய மாதங்களில் ஆஸ்திரேலியா பல யூத எதிர்ப்பு சம்பவங்களை சந்தித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யா
100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யா,ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யா கூறுகிறது
ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா புதன்கிழமை கூறியது, இது வீடுகளை சேதப்படுத்தியது மற்றும் குறைந்தது ஒருவரை காயப்படுத்தியது.
“நேற்று இரவு பணியில் இருந்த வான் பாதுகாப்பு அமைப்புகளால் மொத்தம் 104 உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன” என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
ட்ரோன்களின் பெரும்பகுதி குர்ஸ்க் மற்றும் பிரையன்ஸ்கின் மேற்குப் பகுதிகளில் வீழ்த்தப்பட்டது, சிறிய எண்ணிக்கையிலான ஸ்மோலென்ஸ்க், ட்வெர், பெல்கோரோட் மற்றும் பிற இடங்களில் இடைமறிக்கப்பட்டது.
பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளட்கோவ், அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த வேலைநிறுத்தத்தில் ஒரு குடிமகன் காயமடைந்ததாகக் கூறினார்.
“ஊடுருவாத மார்புக் காயத்துடன் ஒரு நபர் ஆம்புலன்ஸ் மூலம் பெல்கோரோட் நகர மருத்துவமனை எண். 2 க்கு அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று டெலிகிராமில் அவர் கூறினார், கட்டிடங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளன.
உக்ரைனின் இராணுவம் ரஷ்யா தனது சொந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகக் கூறியது, இதன் விளைவாக பல உக்ரேனிய பிராந்தியங்களில் வான்வழி எச்சரிக்கைகள் வந்துள்ளன.
மாஸ்கோவும் கியேவும் கிட்டத்தட்ட மூன்று வருட மோதல் முழுவதும் தினசரி ட்ரோன் தாக்குதல்களை பரிமாறிக்கொண்டன, முன்னணியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பொதுமக்களின் பகுதிகளை சேதப்படுத்தியது மற்றும் ஒருவருக்கொருவர் வான் பாதுகாப்பைக் குறைத்தது.
கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு
கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு
கூகிளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவு ,கூகுள் மேப்ஸ் அமெரிக்க பயனர்களுக்கு வளைகுடா மெக்ஸிகோ, தெனாலி என பெயர் மாற்றும் டிரம்ப் பதவியேற்பு நாளில் பெயரை மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு இணங்க இரண்டு முக்கிய புவியியல் அடையாளங்களின் பெயர்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
அலாஸ்காவின் தெனாலி மலையின் பெயரை Mt. McKinley என்றும், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்றும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான X இடுகையில் தெரிவித்துள்ளது.
“அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களில் புதுப்பிக்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பயன்படுத்துவதற்கான நீண்டகால நடைமுறை எங்களிடம் உள்ளது” என்று கூகிள் எக்ஸ் இடுகையில் தெரிவித்துள்ளது.
பெயர்களைத் தீர்மானிக்க அமெரிக்க புவியியல் ஆய்வின் புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு (ஜிஎன்ஐஎஸ்) தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது என்று கூகிள் இடுகைகளின் திரியில் கூறியது.
“அத்துடன் நீண்ட கால நடைமுறை: நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ பெயர்கள் மாறுபடும் போது, Maps பயனர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ உள்ளூர் பெயரைப் பார்க்கிறார்கள்.
உலகின் பிற நாடுகளில் உள்ள அனைவரும் இரண்டு பெயர்களையும் பார்க்கிறார்கள். அது இங்கேயும் பொருந்தும்,” கூகிள் மற்றொரு இடுகையில் சேர்த்தது.
Mt. McKinley என்ற பெயரை மீண்டும் நிலைநிறுத்தவும், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மறுபெயரிடவும் உத்தரவிட்ட ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் பதவியேற்பு நாளில் கையெழுத்திட்ட பிறகு இது வந்துள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம், மேலும் ஒரு சிறந்த ஜனாதிபதியான வில்லியம் மெக்கின்லியின் பெயரை மவுண்ட் மெக்கின்லிக்கு
மீட்டமைப்போம், அது எங்கு இருக்க வேண்டும், எங்கு இருக்க வேண்டும். சொந்தமானது. ஜனாதிபதி மெக்கின்லி வரிகள் மற்றும் திறமைகள் மூலம் நம்
நாட்டை மிகவும் பணக்காரர் ஆக்கினார்” என்று டிரம்ப் தனது தொடக்க உரையின் போது கூறினார்.
பெடரல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள்
பெடரல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள்
டிரம்ப் நிர்வாகம் ட்விட்டரில் எலோன் மஸ்க்கின் குறிப்பை பிரதிபலிக்கும் நடவடிக்கையில் ராஜினாமா செய்வதற்கான கூட்டாட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குகிறது.
சில ஃபெடரல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், அவர்கள் ராஜினாமா செய்தால் வாங்குவதற்கு வாய்ப்பளிக்கின்றன
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் தலைமைத்துவ பாணியின் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் காட்டும் வகையில், 2022 ஆம் ஆண்டில் ட்விட்டர் ஊழியர்களுக்கு மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில் கணிசமான
வேலை மாற்றங்கள் அல்லது துண்டிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இறுதி எச்சரிக்கை குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்ட குறிப்பேடு கண்டறியப்பட்டது. நிறுவனம் பொறுப்பேற்ற சிறிது நேரத்தில்.
அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகத்திலிருந்து (OPM) ஒன்று செவ்வாய் இரவு அனுப்பப்பட்டது, மற்றொன்று நவம்பர் 2022 இல் மஸ்க்கிலிருந்து Twitter ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது – ஒரே விஷயத்தை பகிர்ந்து கொள்கிறது: “A Fork in the Road,” மின்னஞ்சல்கள், ABC ஆல் பெறப்பட்டது. செய்தி, நிகழ்ச்சி.
செவ்வாய்க்கிழமை மாலை அரசாங்க ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோ, “ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா”க்கான அவர்களின் சலுகையை அவர்களுக்குத் தெரிவித்தது, இது உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் ஏற்றுக்கொள்பவர்களுக்கு செப்டம்பர் 30 வரை ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
“ஆயுதப் படைகளின் இராணுவப் பணியாளர்கள், அமெரிக்க தபால் சேவை ஊழியர்கள், குடியேற்ற அமலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பதவிகளில்
உள்ளவர்கள் மற்றும் உங்கள் பணியமர்த்தும் நிறுவனத்தால் குறிப்பாக விலக்கப்பட்ட வேறு எந்தப் பதவிகளிலும் உள்ளவர்கள் தவிர, எந்தவொரு அரசாங்க ஊழியரும் பிப்ரவரி 6 வரை தகுதி பெறலாம். ,” மெமோ கூறியது.
ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா
ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா
ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா, மட்டக்களப்பில் உள்ள வருகை காட்டுக்குள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு பிரான்சில் வசிக்கும் ரஞ்சன் அவர்கள் மலசல கூடம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார் .
அதன் காணொளி காட்சிகள் கீழே .
உதவிய பிரான்ஸ் ரஞ்சன் அண்ணா அத்தொடர்பில் அந்த குடும்பம் என்ன சொல்லிறார்கள் என்பதை மக்களே பாருங்கள்.
மத்திய வங்கி விசேட அறிவிப்பு
மத்திய வங்கி விசேட அறிவிப்பு
மத்திய வங்கி விசேட அறிவிப்பு,இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று (28) இரவு ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று(28) அதிகாலை இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி இயங்கியதால் இருவர் காயமடைந்தனர்
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.
கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக
கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது,
கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்
கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்
கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம் ,தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய
மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,
“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”
“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”
“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”
அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க
தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.
யாழில் ஐவர் கைது
யாழில் ஐவர் கைது
யாழில் ஐவர் கைது ,40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு
பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு
பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு ,2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில்
ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நேர்மறையாக மாறக்கூடும் எனவும் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
காசாவை சுத்தம் செய்ய டிரம்ப் மீண்டும் வலியுறுத்துகிறார்
காசாவை சுத்தம் செய்ய டிரம்ப் மீண்டும் வலியுறுத்துகிறார்
காசாவை சுத்தம் செய்ய டிரம்ப் மீண்டும் வலியுறுத்துகிறார் ,காசாவை ‘சுத்தம்’ செய்ய வேண்டும், பாலஸ்தீனியர்களை எகிப்து, ஜோர்டானுக்கு செல்ல கட்டாயப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்துகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற “பாதுகாப்பான” இடங்களுக்கு நகர்த்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் “மிக விரைவில்” சந்திப்பதாக கூறினார்.
15 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலின் போர் பாலஸ்தீனத்தை “இடிக்கும் தளமாக” குறைத்த பின்னர் காசாவை “சுத்தம்” செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி சனிக்கிழமை வெளியிட்டார்.
அந்தக் கருத்துகளைப் பற்றி கேட்டதற்கு, திங்கள்கிழமை மாலை ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார், “அவர்கள் இடையூறு மற்றும் புரட்சி மற்றும் வன்முறை இல்லாமல் வாழக்கூடிய ஒரு பகுதியில் அவர்களை வாழ விரும்புகிறேன்.”
“உங்களுக்குத் தெரியும், நீங்கள் காசா பகுதியைப் பார்க்கும்போது, அது பல ஆண்டுகளாக நரகமாக இருந்தது… அதனுடன் எப்போதும் வன்முறை தொடர்புடையது,” என்று அவர் கூறினார்.
இரு நாடுகளின் தீர்வுக்கு என்ன அர்த்தம் என்று அழுத்தியபோது, அவர் நெதன்யாகுவை “அதிக தொலைவில் இல்லாத எதிர்காலத்தில்” சந்திப்பதாகக் கூறினார்.
“அவர் என்னை சந்திக்க இங்கு வருகிறார்,” என்று அவர் கூறினார்
ல் .
டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது
டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது
டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது ம் , டிரம்ப் 100 சதவிகிதம் உறுதியாக இல்லை, அவர் மூன்றாவது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான யோசனையை சுட்டிக்காட்டினார், "100 சதவீதம் உறுதியாக தெரியவில்லை" என்று கூறி, அரசியலமைப்பின் கீழ் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான தற்போதைய இரண்டு கால வரம்புக்கு அப்பால் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகளை டிரம்ப் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார் - ஆனால் அவர் அடிக்கடி லேசான மனதுடன் பேசும் போது, கருத்துக்கள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளன.
"அடுத்த பந்தயத்திற்காக நான் நிறைய பணம் சேகரித்துள்ளேன், அதை என்னால் எனக்காக பயன்படுத்த முடியாது என்று கருதுகிறேன், ஆனால் எனக்கு 100 சதவீதம் உறுதியாக தெரியவில்லை, ஏனென்றால் எனக்குத் தெரியாது... நான் அனுமதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஓடவும்,” என்று மியாமியில் காங்கிரஸின் குடியரசுக் கட்சியினரின் பார்வையாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
சிரிக்க, ட்ரம்ப் குடியரசுக் கட்சித் தலைவர் மைக் ஜான்சனை நோக்கித் திரும்பி மேலும் கூறினார்: “எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, நான் மீண்டும் போட்டியிட அனுமதிக்கப்படுகிறேனா? மைக்? நான் உன்னை அந்த வாதத்தில் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
டிரம்ப் ஒரு வாரத்திற்கு முன்பு வெள்ளை மாளிகையில் தனது இரண்டாவது எழுத்துப்பிழைக்காக பதவியேற்றார், அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த இரண்டாவது ஜனாதிபதி ஆனார்.
ரஷ்ய விமானத் தாக்குதல்கள் பலர் காயம்
ரஷ்ய விமானத் தாக்குதல்கள் பலர் காயம்
ரஷ்ய விமானத் தாக்குதல்கள் பலர் காயம், கார்கிவ் தீப்பொறி: உக்ரைன் அதிகாரிகள்
ஒரே இரவில் ரஷ்ய விமானத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர், ஒரு தனியார் வணிகத்திற்கு தீ வைத்தனர் மற்றும் கார்கிவ் நகரில் பல வீடுகளை சேதப்படுத்தினர், இது போரின் தொடக்கத்திலிருந்து இடைப்பட்ட ரஷ்ய தீக்கு உட்பட்டது என்று உக்ரேனிய அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர்.
அழிக்கப்பட்ட ரஷ்ய ட்ரோனின் குப்பைகள் விழுந்ததில் 62 வயதான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் 66 வயது முதியவர் காயமடைந்தார், கார்கிவ் நகரத்தை உள்ளடக்கிய மற்றும் சுற்றியுள்ள கார்கிவ் மாவட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்தன என்று பிராந்திய ஆளுநர் கூறினார்.
ரஷ்ய ட்ரோன் தாக்குதலின் விளைவாக கார்கிவில் தீப்பிடித்த தனியார் வணிகத்திற்கு நள்ளிரவுக்குப் பிறகு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன என்று மேயர் இஹோர் டெரெகோவ் தனது டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் தெரிவித்தார்.
உக்ரைனின் அரச அவசர சேவையானது, தீயானது உற்பத்தி நிலையங்களைச் சூழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது. ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டனர் என்று அவசர சேவை தெரிவித்துள்ளது.
எந்த வசதி எரிகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஒரு தொழில்துறை கட்டிடம் போன்ற தோற்றத்தில் இருந்து பாரிய தீப்பிழம்புகள் வருவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
















































