அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி
Posted in சமையல் சமையல் cook

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

அரைத்த பாரை மீன் குழம்பு வைப்பது எப்படி

பாரை மீன் – உப்பு மற்றும் மஞ்சல் போட்டு கழுவி எடுக்கவும் .

தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் 5
சின்ன சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி 4 தேக்கரண்டி
உல்லி 5
மஞ்சல் 1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் 3 தேக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பில்லை
புளி தேவைக்கேற்ப
உப்பு
நல்லெண்ணெய்
தண்ணீர் தேவைக்கு ஏற்ப ..

ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும் .. சூடான சட்டியை அடுப்பிலிருந்து இறக்கவும் அதில் மல்லி , மிளகாய் , மிளகு , சீரகம் போட்டு 2 நிமிடம் சூடக்கவும்.


சூடான அனைத்தும் மற்றும் உல்லி மஞ்சல் அனைத்தையும் மிக்ஸி யாரில் போட்டு நல்ல பசுந்தா அறைத்து எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்னெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் கறிவேப்பிலை சேர்க்கவும் ..


வெங்காயம் பொன்னிரமாக வரும் வரை வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும் .


பின் அதில் புளி கரைசலை மற்றும் தேங்காய் பால் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின் அதனுள் வெட்டி வைத்த பாரை மீனை போட்டு மூடி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

video

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு
Posted in சமையல் சமையல் cook

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு

சுவையானா உருண்டை கறி| CHANA DAL CURRY| கடலைப்பருப்பு உருண்டை கறி|பருப்பு உருண்டை குழம்பு, கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை குழம்பு வைப்பது எப்படி .

இந்த காணொளியில் முழுமையான செய்முறை விளக்கம் சமையல் கலை நிபுனரினால் விளக்கப்படுகிறது.

அதைக் கீழ்வரும் காணொளியில் பார்வையிடுக.

1 கப் கடலைப்பருப்பு
1 பெரிய வெங்காயம்
2 தேக்கரண்டி கறி பவுடர்
2 தேக்கரண்டி தேங்காய்ப்பால் பவுடர்
சிறிய அளவு புளி
1/2 தேக்கரண்டி பெரியசீரகம்
1/4 தேக்கரண்டி கடுகு
3-4 காய்ந்த மிளகாய்
ஒரு சிறிய துண்டு இஞ்சி
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
பெருங்காயபவுடர்

செய்முறை
3-4 மணத்தியாளம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும்
ஊறிய பருப்பை மிக்சி யாரில் போட்டு மெதுவான பதத்தில் அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பருப்பு மாவை உருண்டையாக போட்டு பொறித்து எடுக்கவும்.


இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெரிஞ்சீரகம் , கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போடவும் , சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும் .

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதனுள் கறி தூள் சேர்த்து வதக்கவும். தூள் வெக்கை அடங்கியதும் அதில் புளி சேர்க்கவும் .

குழம்பு கொதித்ததும் அதனுள் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் அதனுள் பருப்பு உருண்டையை போட்டு 10-15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும் பிறகு சுவையான உருண்டை கறி தயார்.

இதுபோல நீங்களும் இன்று முதல் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் கடைச்சுவையில் அருமையான பருப்பு உருண்டை கறி