இலங்கைக்கான 5வது கடன் தவணை
இலங்கைக்கான 5வது கடன் தவணை
இலங்கைக்கான 5வது கடன் தவணை ,சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன் தொகை
இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன் தொகை சுமார் 1.75 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்கிறது.
இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கான IMF தூதரகத் தலைவர் இவான் பாபகியோகியோ இதனை அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
“நான்காவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இந்தத் தொகை, இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை
சீர்திருத்தங்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும். இது இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இலங்கையின் செயல்திறன் இந்த மதிப்பாய்வில் பொதுவாக வலுவாக உள்ளது.”
மேலும், இலங்கை அதிகாரிகள் இரு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்:
2025 வரையிலான செலவு-மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயம்.
தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறையை செயல்படுத்துதல்.
இந்த நடவடிக்கைகள் இலக்குகளை அடைவதற்கான அபாயங்களைக் குறைப்பதற்கு உதவியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இந்தக் கடன் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு ,இன்று (03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆர்மி உபுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகளின் அடையாளம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு
அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு
அடையாளம் தெரியாத சடலம் ஒன்றுமீட்பு லுனுவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் அவர் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்பட்ட மூவர்
நாடு கடத்தப்பட்ட மூவர்
நாடு கடத்தப்பட்ட மூவர் இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்
பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன்
பஸ்ஸில் இருந்து விழுந்த மாணவன் ,வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்
கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டி
கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோவையும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக
நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது இங்காகும் என்பதை கவனத்தில் கொள்க .
அமைச்சர் எஸ்எம் சந்திரசேன கைது
அமைச்சர் எஸ்எம் சந்திரசேன கைது
அமைச்சர் எஸ்எம் சந்திரசேன கைது ,முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள
விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை
வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
யானை தாக்கி ஒருவர் பலி
யானை தாக்கி ஒருவர் பலி
யானை தாக்கி ஒருவர் பலி ,தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றபோது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
IMFக்கு தவறான தகவல்களைவழங்கிய இலங்கைஅதிகாரிகள்
IMFக்கு தவறான தகவல்களைவழங்கிய இலங்கைஅதிகாரிகள்
IMFக்கு தவறான தகவல்களைவழங்கிய இலங்கைஅதிகாரிகள் ,சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை
தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை
அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய
நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும்
தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் மற்றும் IMF
இன் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வு
விரிவான கடன் வசதி திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வுகளின் போது செலுத்தப்படாத செலவுகள் தொடர்பாக
அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் நடைபெற்றது.
IMF இற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை வேண்டுமென்றே நடைபெறவில்லை. இதற்கு காரணம், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களால் செலுத்தப்படாத தொகைகள் குறித்து உரிய நேரத்தில்
அறிக்கையிடப்படாத பலவீனங்கள் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‘செலுத்தப்படாத தொகைகள்’ என்பதன் வரையறை தொடர்பாக அதிகாரிகளின் தவறான புரிதல் ஆகும்.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள், அதாவது, செலுத்தப்படாத தொகைகளை தற்போதைய நிதி கட்டமைப்பிற்குள் திருப்பிச் செலுத்துதல், மற்றும் எதிர்காலத்தில் செலுத்தப்படாத தொகைகள்
குவிவதையோ அல்லது தவறான தகவல்கள் அறிக்கையிடப்படுவதையோ தவிர்க்க, புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க பொது நிதி
முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை நிர்வாகக் குழுவால் நேர்மறையாக பரிசீலிக்கப்பட்டன.
இதன்படி, ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல்களுக்கு காரணமான அளவு செயல்திறன் அளவுகோல்களை பின்பற்றாதமைக்கு விலக்கு அளிக்க நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது, மேலும் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின்
கீழ் கடமைகளை மீறியமை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டது,” என ஒகமுராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி ரஷ்ய கடற்படைக்கு எதிராக
ரஷ்ய கடற்படைக்கு எதிராக
ஜெர்மனி ரஷ்ய கடற்படைக்கு எதிராக ,ரஷ்ய கடற்படைக்கு எதிராக ஜெர்மனி கூடுதல் நடவடிக்கைகளைத் தொடங்குகிறது
ரஷ்யாவின் “நிழல் கடற்படை
பால்டிக் மற்றும் வட கடலில் இயங்கும் ரஷ்யாவின் “நிழல் கடற்படை” என்று அழைக்கப்படுவதை மேலும் எதிர்ப்பதற்கு கூடுதல் நடவடிக்கைகளை
எடுப்பதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அதன் எண்ணெய் வருவாயைக் குறைக்கும் நோக்கில் மேற்கத்திய தடைகள் டேங்கர்களின்
பரந்த “நிழல் கடற்படை” உருவாவதற்கு வழிவகுத்தன, இது மாஸ்கோவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து செல்ல உதவுகிறது.
செவ்வாய்க்கிழமை முதல், எண்ணெய் மாசுபாடு சேதத்திற்கு எதிரான காப்பீட்டுத் தொகை குறித்து கடந்து செல்லும் டேங்கர்களிடம் ஜெர்மன் அதிகாரிகள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர், வெளியுறவு அமைச்சகம்
கப்பல்களின் காப்பீட்டுத் தொகை
கூறியது, “நிழல் கடற்படை” கப்பல்களின் காப்பீட்டுத் தொகை பெரும்பாலும் தெரியவில்லை, ஏனெனில் அவை புகழ்பெற்ற காப்பீட்டாளர்கள் மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களைத் தவிர்க்கின்றன.
“எங்கள் இலக்கு மிகவும் தெளிவாக உள்ளது: நாங்கள் ரஷ்ய நிழல் கடற்படையின் மீது அழுத்தத்தை அதிகரித்து பால்டிக் கடலைப் பாதுகாக்கிறோம்,” என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல் அறிக்கையில் தெரிவித்தார்.
11பேர் காயம் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
11பேர் காயம் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
11பேர் காயம் பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ,பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
குண்டு வெடிப்பில் பலியான நான்கு பேரில் ஒரு மூத்த அரசு அதிகாரியும் உள்ளார், மேலும் இந்த சம்பவத்தின் போது பல அரசு வாகனங்களும் சேதமடைந்தன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பொருளாதார தடை ஈரானுக்கு
பொருளாதார தடை ஈரானுக்கு
பொருளாதார தடை ஈரானுக்கு ,ஈரான் உட்பட 9 நாடுகள் உலக நாடுகள் மீதான மேற்கத்திய தடைகளை கண்டிக்கின்றன
ஒருதலைப்பட்ச தடைகள்
ஈரானும் மற்ற ஒன்பது நாடுகளும் பல்வேறு நாடுகள் மீது மேற்கு நாடுகள் விதித்த ஒருதலைப்பட்ச தடைகள் மற்றும் கட்டாய நடவடிக்கைகளை கண்டித்துள்ளன, அவை ஐ.நா. சாசனத்தை மீறுவதாக விவரிக்கின்றன.
செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) 53வது அமர்வில் ஒரு கூட்டு அறிக்கையில், தடைகள் நாடுகளின்
இறையாண்மையை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின, ஏனெனில் தடைகள் நாடுகள், குறிப்பாக வளர்ச்சியடையாத நாடுகள்,
அவற்றின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான திறனைக் குறைக்கின்றன.
புதைபடிவ எரிசக்தி சந்தையிலும், உணவு, ரசாயனம் மற்றும் கனரக தொழில்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களின் விநியோகச் சங்கிலியிலும்
கட்டாய நடவடிக்கைகளின் எதிர்மறையான தாக்கத்தையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.
ஒன்பது நாடுகளும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கை
ஒன்பது நாடுகளும் ஒருதலைப்பட்ச கட்டாய நடவடிக்கைகளை கடுமையாக நிராகரித்து, இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, சட்டவிரோதமானவை, ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின்
கொள்கைகளுக்கு முரணானவை என்றும், நாடுகளின் உள் விவகாரங்களில் தெளிவான தலையீட்டை உருவாக்குகின்றன என்றும் கூறின.
இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளின் அடித்தளமாக இருக்கும் பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்புக்
கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அவர்கள் மேலும் கூறினர்.
கையொப்பமிட்டவர்கள் உலக நாடுகள் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத தடைகளைத் தவிர்க்கவும், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக்
கொள்கைகளுக்கு முரணான இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டிக்கவும் அழைப்பு விடுத்தனர்.
கொரிய விசா வௌியான தகவல்
கொரிய விசா வௌியான தகவல்
கொரிய விசா வௌியான தகவல் ,கொரிய குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தை
அதற்கமைய, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கொரிய குடியரசின் ஆர்வங்காட்டுகின்ற உள்ளுராட்சி நிறுவனங்களுடன் இராஜதந்திர வழிமுறை மூலம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.
கொரிய குடியரசின் யொங்க்வோல் உள்ளுராட்சி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இருதரப்பினருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலை
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையர்களுக்கு பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழ் குறுகிய காலம் (05 மாதம் தொடக்கம் 08 மாதங்கள் வரை) யொங்க்வோல் பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடிக்
கிராமங்களில் தொழில் புரிந்து வருமானம் ஈட்டிக் கொள்வதற்கும் மற்றும் எமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி, தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகுதிவாய்ந்த தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்து
விரைவில் தென் கொரியாவுக்கு அனுப்பும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக வேறு எந்த வெளி தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுக்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு கோசல விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் விபத்துக்கள்
அதிகரித்து வரும் விபத்துக்கள்
அதிகரித்து வரும் விபத்துக்கள் ,விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
திடீர் விபத்து
திடீர் விபத்துகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேசிய போதே பேராசிரியர் ருவந்தி பெரேரா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தெற்காசிய நாடாக இலங்கையில் மிக உயர்ந்த மட்டத்தில்
தெற்காசிய நாடாக இலங்கையில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம். இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள்.
அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள். விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன.
விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும்.
விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர் ருவந்தி பெரேரா சுட்டிக்காட்டினார்.
கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு
கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு
கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு ,மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை
மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சடலத்தை அவதானித்த தொழிலாளர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவர் சுமார் 73 வயது கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார்
சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலை
தெரிவித்ததோடு, சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது ,அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்போபுர பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (02) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய யூனிட் 19, அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மாமியாரை வெட்டியா கணவன்
மனைவி மாமியாரை வெட்டியா கணவன்
மனைவி மாமியாரை வெட்டியா கணவன் வவுனியா சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சமயபுரம் பகுதியில்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வருகைதந்த உயிரிழந்த நபர் வீட்டில்
இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
காயமடைந்த இரு பெண்
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம்
பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை வந்த எலோன் மஸ்க்
இலங்கை வந்த எலோன் மஸ்க்
இலங்கை வந்த எலோன் மஸ்க் ,உலகப் புகழ்பெற்ற SpaceX நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், இன்று (2) ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குவதாக அறிவித்தார்.
வேகமான இணைய வசதி
வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு பின்னர் சுமார் 130இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணைய சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு, பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அணுகலை வழங்கும்.
இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன
தற்போது, இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் 12,000 ஆகவும், எதிர்காலத்தில் 30,000 இற்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த இணைய அமைப்பு மிகவும் எளிதாக நிறுவக்கூடிய ரவுட்டராக வருகிறது.
பதிவிறக்க வேகம் 50mbps – 250mbps வரை இருக்கும் என்று SpaceX குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது
இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும், படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (01) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய
மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.
இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர் பிரச்சினை
மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம்.
கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.
இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்
இளைஞன் கடத்தி தாக்குதல்
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (01) தெரிவித்தனர்.
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல் ,யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய்
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேரூந்து
https://www.youtube.com/@vannimainthanநிலையம் முன்பாக நின்ற 18 வயதான இளைஞன் ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளஞனை புதிய பேரூந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயதான இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
, மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் ,City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான
திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக
ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங்
மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த
ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.

















































