Tag: படுகொலை
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞர்கள் இருவர் படுகொலை
இளைஞர்கள் இருவர் படுகொலை
இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .
மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.
இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,
இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள்
பெண் கடத்தி படுகொலை அதிர்ச்சியில் உறவுகள் ,சிலாபம் காவல்துறைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அவர் ஒருவர் குறித்த பெண்ணை தூக்கிச் செல்கின்ற காட்சி காணப்பட்டதாகவும் அதனை அடுத்து மேற்படி பிகண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல் போனவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க மீட்க கப்பட்டுள்ளதுடன் அவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் 34 வயதுடைய நபர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த பெண்ணை கடத்திச் சென்றார் எதற்காக இவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பழிவாங்கல் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டதா அல்லது கூலிக்கு மாற்றப்பட்ட செயலா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது தற்பொழுது விசாரணங்களை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இவ்வாறான கொலைகள் நாள்தோறும் இடப்பட்டு வருவதும் அதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை ,கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கெட்டியாகல காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக அவரை சந்திக்க ஒரு குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதுடைய நபர் ஒருவர் 27 வயது நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாய் தகர காரணமாக 43 வயதுடைய நபர் 27 வயதுடைய நபர்கள் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக
இருவருக்கும் இடையில் இடம்பெற்று வந்த வாய் தகராறு பகைமை காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக பல்வேறுபட்ட கத்திக்கூத்து தாக்குதல் அடக்குமுறை தாக்குதல் என்பன இடம் வெற்றி பெறுகின்றன இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்களை ஒருவித பயத்தில் உறைய வைக்கும் நடவடிக்கை ஒன்றாக காணப்படுகின்றது
நபர் உறவினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்குரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கோதை மனப்பான்மையுடன் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பழிவாங்கல் சம்பவங்களை இவ்வாறு படுகொலையில் முடிவடைவதாகவும் இது மக்களை அச்சுறுத்தும் ஒரு சமூக சீர்கேடு நடவடிக்கை என மக்கள் சமூக மன்றங்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை,இலங்கை காவல்துறையினர் வீதி போக்குவரத்தில் திடீரென ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கி இயங்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுக்குடு நோக்கி பயணித்த காரை கொட்டுகட போலீஸ் உதவி சாவடி பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய பொழுது காரில் இருந்த நபர்கள் போலீஸ் உத்தியோதரை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டுள்ள பொழுது ,அவ்வேளை அந்த சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கினை காரில் வந்தவர்கள்பறிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுப்புப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு அடிப்படையில் ஏதாவது சொல்லி அவரிடம் லஞ்சம் பெற முற்பட்டிருக்கலாமோ, இதை பொய்யான சோதனையை செய்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போலீசார் வீதிகள் கஞ்சா போதைகளை வைத்துவிட்டு அதில் வந்தவர்களை கடத்திச் செல்வதான சம்பவங்கள் அண்மையில் வீடியோ ஆழமாக வெளியிடப்பட்டிருந்தது.
அதை போன்று இந்த கார் தப்பியதாகவும் தவறாக மிரட்டி சுட்டுவிட்டு தவறாக இயங்கியதாக போலீசார் இப்படி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை காக்க வேண்டிய இலங்கை சிவில் நிர்வாகங்களில் பல தவறுகள் இடம் பெறுவதையும் அதனுடைய சட்ட நுணுக்க ஓட்டைகள் ஊடாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் இவ்வாறு தெரிவிக்கின்ற பொழுதும் பாதிக்கப்பட்ட தலைப்பில் இதற்கு தீர்வான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மக்கள் தற்பொழுது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

பலஸ்தீனத் தலைவர் படுகொலை
பலஸ்தீனத் தலைவர் படுகொலை
பலஸ்தீனத் தலைவர் படுகொலை ,பலஸ்தீனத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் அமெரிக்கா மற்றும் மோசட் என்பன ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை தற்பொழுது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரது கூட்டு நடவடிக்கையின் ஒற்றுமையின் காரணமாகவே தற்பொழுது பலஸ் தினத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானிய அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினுடைய உளவுத்துறையும் மொசாட் உளவுத்துறை இணைந்து ஒன்றுபட்டு இவரை படுகொலை செய்துள்ளதாகவும் அதற்கான பதிலடி நடவடிக்கை விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எதிர்வரும் மணித்தியாலத்தில் எதிர்பார்க்கும் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேலியில் ஈரான் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது பதட்ட நிலவி வருகிறது.
72 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் ஈரான் எப்படி அங்கிருந்து எவ்வாறு தாக்கப்போவது என்ற பதட்டம் பரபரப்பு நிலவுகின்றது.
ஈரான் தாக்குதலை நடத்தினால் அதனை சமாளிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் தயாராக இருக்குமாறு அமெரிக்கா வேண்டுதல் எடுத்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது .
எந்த நாட்டில் வைத்தும் எவரையும் எங்களால் எப்பொழுதும் எப்படியும் படுகொலை செய்ய முடியும் என்பதையும் அதனால் அவ்வாறு படுகொலை செய்தால் எங்களை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற திமிரிலும் ஆணவத்திலும் அமெரிக்கா .
மற்றும் ஆடி வருகின்றன ஈரான் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இவர்களது ஆட்டங்கள் அடக்குவதற்கு இளமை தொடங்கும் என்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது ,கொழும்பு பகுதியில் வைத்து ஆட்டம் ஒன்றில் பதித்த சாரதி ஒருவரை வெட்டிக்கொண்டு தப்பிச்சென்ற கொலையாளிகள், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.
33 வயது உடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு படுகோரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் .
அதனை அடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ,அவரை கொலை புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்த பொழுது இவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்கின்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ,
அதனை அடுத்து இந்த கொலையாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இவர்கள் படுகொலை செய்தனர் என்பது தொடர்பான விடயம் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்தும் தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் விசாரணையும் முடிவிலேயே இந்த படுகொலைக்கான காரணம் தெரியவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது நமது உறவை இழந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கொலையாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல்
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல்
என்னை படுகொலை செய்யப் போறாங்க சாணக்கியன் அலறல் , ராஜாங்க அமைச்சர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் தனக்கு ராஜாங்க அமைச்சர் ஒருவர் படுகொலை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற அந்த ராஜாங்க அமைச்சர் வேறு யாருமில்லை .அது பிள்ளையான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானால் தனக்கு நேரடி உயிரை அச்சுறுத்தல் உள்ளதாக சாணக்கியன் இப்படி தெரிவிக்கின்றார்.
தன்னை படுகொலை செய்யப் போவதை வெளிநாட்டு உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
அவ்வாறு கண்டுபிடித்து அந்த வெளிநாட்டு புலனாய்வுத்துறை எதுவென அவர் தெரிவிக்கவில்லை.
தன்னை படுகொலை செய்ய முற்படுகின்ற ராஜாங்க அமைச்சர் முன்னர் ஒரு எம்பி படுகொலை செய்தவர் அப்படி என்றால் அது வேறு யாரும் இல்லை .
பிள்ளையான் தான் ,பிள்ளையானே யோசப் பரராஜசிங்கம் அவர்களை படுகொலை செய்திருந்தார் .
தேவாலயத்தில் வாழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவரை சுட்டு படுகொலை செய்தார் .
வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஜோசப்பாரை சிங்கம் அவர்கள்பிள்ளையானால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார் .
அவ்வாறு அவரை படுகொலை செய்ததை போன்று தன்னைப் படுகொலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இப்படி தெரிவித்திருக்கிறார் சாணக்கியன்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை
ஹமாஸ் இரு தளபதிகள் படுகொலை ,என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வமாக ரைவித்துள்ளது .
பலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியின் கன்யூசிட் பகுதியில் பாடசாலை கட்டிடம் ஒன்றின் அருகில் இவர்கள் மறைந்து வாழ்ந்த பொழுது ,
அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டதாகவும் ,அதிலேயே அவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் என்ற வல்லாதிக்க இனவெறி கொண்ட இராணுவத்திற்கு எதிராக பலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கமான ,ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான தாக்குதல் சம்பவம் ஊடக இஸ்ரேல் படைகள் பலமான இழப்பினை சந்தித்து வருகின்றனர் .
அவ்வாறு பெரும் இழப்பை சாந்தி வருகின்ற பொழுது ,அவ்விதமான பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஹமாஸ் போராளிகள் முக்கிய தளபதிகளை படுகொலை செய்திடம் , நகர்வில் இஸ்ரேல் படைகள் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
அதன் தொடர்ச்சியாகவே இந்த இரு வீர தளபதிகள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்கின்ற விடயம் அம்பலமாகியுள்ளது .
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

பெண் வெட்டி படுகொலை
பெண் வெட்டி படுகொலை
உறங்கிய பெண் வெட்டி படுகொலை .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மறு சகோதரி மர்மநபர் ஒருவரினால் பெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
ஹொரண மீவனபலான சிரில்டன் தோட்டத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் முடித்து வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது .
அவ்வாறானவரை தற்பொழுது தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த வேளையில் மர்ம நபர் ஒருவரினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முகமூடி அணிந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இரு சகோதரிகளும் இரு அறையில் எவ்வாறு துவங்குகிறார்கள் என்பது கொலைகாரருக்கு எப்படி தெரியும் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குடும்பத்தினால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா ,அல்லது எதிரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்பது தொடர்பான கோணத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
இந்த படுகொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடாக உள்ளதினை ,இலங்கை நாடளாவியரீதியில் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான மர்ம படுகொலைகள் கடத்தல்கள் கொள்ளை என்பன எடுத்து காட்டுகின்றன.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

இலங்கை வந்த பெண் படுகொலை
இலங்கை வந்த பெண் படுகொலை
இலங்கை வந்த பெண் படுகொலை வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பெண் ஒருவர் வெட்டி படுகொலை
கொழும்பில் பெண் ஒருவர் வெட்டி கொலை
பெண் ஒருவர் வெட்டி படுகொலை ,சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதவான்
நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான படுகொலை நடவடிக்கை காரணமாக ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த கொலைகளை நடத்துவது யார் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்வியே இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை
மந்திரவாதியால் பெண் படுகொலை ,பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த மந்திரவாதி யின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த காலத்தில் நிறைய பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, அதற்கு பரிகாரமாக, தொடர்ந்து சாந்திகர்மா பூஜைகள் செய்த போதும், தலை நிமிர முடியாத அளவுக்கு தன் குடும்பத்திற்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அந்த சூனியத்தை அகற்றி பாதுகாப்பைப் பெறுவதற்காக கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள மந்திரவாதியிடம் அண்மைக்காலமாக அவர் சென்றுள்ளார்.
லட்ச ரூபாய் செலவு
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து அந்த சூனியத்தை போக்க முயன்றுள்ளதுடன், மந்திரவாதியால் அந்த பெண்ணுக்கு தங்கத்திலான தாயத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது தாய் காணாமல் போனதாக அவரது மகன் எஹலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த எஹலியகொடை பொலிஸார் சந்திரிகாவின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளனர்.
அங்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கவனித்த பொலிஸார், ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை, அவரது தொலைபேசிக்கு அந்த எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.
மேலும், அதே எண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்
குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் கிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார்
கண்டறிந்து, மேலதிக தகவல்களைத் தேடிய போது, குறித்த நபர் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்தில் தங்க தாயத்தினை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது குறித்த தாயத்து காணாமல் போன பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை கிரியெல்லவிற்கு அழைத்து வந்து கொன்றதாகவும், தான் மந்திரவாதியின் சீடன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூனியத்தை அகற்றுவதாக குறித்த பெண்ணுக்கு வழங்கிய தாயத்து பலனளிக்கவில்லை என பல தடவைகள் குறித்த மந்திரவாதியை தொலைபேசியில் அழைத்து திட்டியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் “தாயத்தை பலப்படுத்தி மீண்டும் தாயத்தை போடுவதாக மந்திரவாதி கூறியுள்ளதால் கிரியெல்லவுக்கு வருமாறு கூறியுள்ளார்.
பெண்ணால் நிறைய பிரச்சனைகள்
பின்னர் ஏப்ரல் 24ஆம் திகதி காலை அந்த பெண் எஹெலியகொடையில் இருந்து கிரியெல்லக்கு வந்துள்ள நிலையில், மந்திரவாதி தனது சீடனிடம், “இந்தப் பெண்ணால் நிறைய பிரச்சனைகள் உள்ளது, ஏதாவது செய் என்று கூறியுள்ளார்.
அதன்படி, குறித்த நபர், குறித்த பெண்ணிடம் குறுக்குவழி இருப்பதாக கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்து படுகொலை
கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாயத்தை எடுத்துக் கொண்டு, உடலை காட்டில் நிறைய கிளைகளுக்கு அடியில் மறைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், பொலிசார் குறித்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டுள்ள போதும் விலங்குகளால் சடலம் சேதப்படுத்தப்பட்டதால் உடல் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்ட பின்னர் பொலிஸார் மந்திரவாதியையும் கைது செய்துள்ளனர்.
காசாவில் மக்கள் படுகொலை
காசாவில் மக்கள் படுகொலை
பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்
கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .
சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .
வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .
நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .
வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்
வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .
குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது
மிரட்டும் மர்ம படுகொலைகள்
இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .
துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .
மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .
ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .
இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .
படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை
கள்ளக்காதலால் விபரீதம் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்தக் கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து மன்னா கத்தியால் அவரின் கழுத்தில் தாக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சந்தேநபர் தெரிவித்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய மன்னா கத்தி பிரிவென வீதியில் உள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.
ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது.
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
இந்த நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின.
பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.
மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
வெலிகம – உயன்கந்த பிரதேசத்தில் இன்று (16) காலை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 38 வயதான மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
உயிரிழந்தவர் மற்றும் சந்தேகநபர் இரண்டு சுற்றுலா விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
இன்று இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.
அப்போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது.
வெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாஒட்டாவா படுகொலை இறுதிக் கிரியைகள் நாளை
கனடாஒட்டாவா படுகொலை இறுதிக் கிரியைகள் நாளை
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹீவனில் உள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பௌத்த விவகார காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இறுதிக் கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளார்











































