ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது
Spread the love

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது

ஆட்டோச்சாரதி படுகொலை குற்றவாளிகள் கைது ,கொழும்பு பகுதியில் வைத்து ஆட்டம் ஒன்றில் பதித்த சாரதி ஒருவரை வெட்டிக்கொண்டு தப்பிச்சென்ற கொலையாளிகள், தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளனர்.

33 வயது உடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு படுகோரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் .

அதனை அடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ,அவரை கொலை புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்த பொழுது இவரை கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச் செல்கின்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ,

அதனை அடுத்து இந்த கொலையாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இவர்கள் படுகொலை செய்தனர் என்பது தொடர்பான விடயம் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்தும் தற்பொழுது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் விசாரணையும் முடிவிலேயே இந்த படுகொலைக்கான காரணம் தெரியவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது நமது உறவை இழந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கொலையாளிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.