Tag: தூக்கு
ஈரானில் தூக்கு 4மொசாட் உளவாளிகளுக்கு
ஈரானில் தூக்கு 4மொசாட் உளவாளிகளுக்கு
ஈரானில் தூக்கு 4மொசாட் உளவாளிகளுக்கு ,இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக ஈரானிய நீதிமன்றம் 4 பேருக்கு மரண தண்டனை விதித்தது.4 Mossad spies hanged in Iran
இஸ்ரேலிய மொசாட் உளவு Israeli Mossad spy
இஸ்ரேலிய மொசாட் உளவு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், டெல் அவிவ் ஆட்சியுடன் இரகசிய மற்றும்
முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காகவும் நான்கு பேருக்கு வடமேற்கு ஈரானில் உள்ள ஒரு புரட்சிகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஈரானின் மேற்கு அசர்பைஜான் மாகாணத்தின் தலைமை நீதிபதி நாசர் அட்டாபதி வியாழக்கிழமை ஒரு அறிக்கையில்,
நாடு முழுவதும் உள்ள முக்கியமான மையங்களைப் படம் எடுத்து படம்பிடித்ததற்காகவும்,
சியோனிச ஆட்சியின் உளவுத்துறை அதிகாரி Intelligence officer of the Zionist regime
சியோனிச ஆட்சியின் உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதற்காகவும் பிரதிவாதிகள் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.
மொசாட் முகவர்களுடன் அவசர மாநாட்டு அழைப்புகளுக்காக சிம் கார்டுகளைப் பெறுதல் மற்றும் சிறப்பு தொலைபேசிகளை வாங்குதல், அத்துடன் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில், உர்மியா, ஷாரூத் மற்றும்
இஸ்பஹான் நகரங்களைத் தவிர, வெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நால்வர் குழு ஈரான் முழுவதும் இராணுவ தளங்கள், கோட்டைகள் மற்றும் முக்கியமான நிறுவல்களை அடையாளம் காண்பதில் ஈடுபட்டது, மேலும்
இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து அவர்களின் உளவு நடவடிக்கைகளுக்கு ஈடாக கிரிப்டோகரன்சிகள் வடிவில் பணம் பெற்றது.
மொசாட் செயல்பாட்டாளர்களுடனான தொடர்பு மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் உளவு சேவையுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும்
நீதித்துறை அதிகாரிகள் வழங்கிய ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், பிரதிவாதிகளுக்கு உர்மியாவின் புரட்சிகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
“அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரான சியோனிச ஆட்சியின் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான சட்டம்” இன் பிரிவு 6 இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.
இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு
கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்
அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’
என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.
நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என
ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்
இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு
அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்
தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு
கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன
உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு
ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை
,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை
அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச
விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்
46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி
தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது
பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்
தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு
தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது
தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட
அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண
தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?
இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது
இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?
- வன்னி மைந்தன் –
சிறையில் கைதி தூக்கு மாட்டி சாவு
சிறையில் கைதி தூக்கு மாட்டி சாவு
மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நேற்று (23) பிற்பகல் குறித்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையினுள் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைக்கு
முயற்சித்த நிலையில் அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இதற்கு முன்னரும் சிறைச்சாலையினுள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
பகிணிகஹவெல, மெதகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு – நடப்பது என்ன ..?
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ளள பாடசாலை ஒன்றின்
மாணவர் ஒருவர் காரைநகரில் தாயின் தயார் வீட்டில் தூக்கில்
தொங்கிய நிலையில் சடலமாக
மீட்க பட்டுள்ளார் இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தாரா அல்லது
கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது
இதுவரை யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று வாரத்திற்குள்ளாக 24 பேர்
இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்
யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை யாழ் கண்டி வீதியின் ஓரத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை
செய்ய பட்ட பின்னர் ,மரத்தில் தூக்கில் தொங்கவிட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
யாழ்பாணத்தி மையப்படுத்தி தொடரும் பல படு கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற 22 வது படு கொலை இதுவாகும் ,
கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடரும் இந்த கொலைகளின்
பின்புலத்தில் கஞ்சா கூலி கொலை குழு உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து
எனினும் பொலிஸார் ஆதரவுடனும் ,அரசியல் செல்வாக்குடனும் இவர்கள் செயல் படுவதால் ,கைது தட்டி கழிக்க படுகின்றன
தூக்கல் தொங்கி தற்கொலைஸ் ஐதர என சட்ட மருத்துவ அதிகாரி மரண
சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே இந்த கொலைகள் மறைக்க பட்டு தற் கொலைகளாக மாற்றம் பெற்று வருகிறது
வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார்
மீட்டுள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்Nதுகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில்
அமைந்துள்ள வீடொன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா
என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் மகளுடன் இணைந்து
உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். அதிகாலை 5.00 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில்
தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல்
வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto
வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.
முதியவர் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில்
டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில்
சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம
சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கும் அறிவித்தல் வழங்கப்பகட்டுள்ளது.
நிருபர் – வெடியரசன்











