நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

No posts found.
வீட்டின் பின்புறத்தில் பதுங்கிய சிறுத்தை
Posted in இலங்கை செய்திகள்

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.

சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது

சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No posts found.
நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.

அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, பொலிஸாரிடதே தனை மீளக் கையளித்தார் எம்.பி.

பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என பாராளுமன்ற
உறுப்பினர் வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு

தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ,
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவுப்புக்கான காரணம் வெளியிட படவில்லை.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ​செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளி​நொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

No posts found.
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக குடுபத்தினர் தெரிவிக்கையில், கொழும்பு – வம்பலப்பிடடியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில் சகோதரின் சுகநலம் விசாரிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிமை மாலை 5 மணியளவில் திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

இந்நிலையிலேயே கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவிலைச் சேர்ந்தவரும் கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தங்கராசா நாகசுந்தரம் (70 வயது) மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த அவரது சகோதரர் தங்கராசா கேதாரவரதசுந்தரம் (74 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்த நாகசுந்தரத்தின் மனைவி சாருமதி மற்றும் உயிரிழந்த கேதாரவரதசுந்தரத்தின் மகன் ஜசிகாந்த ஆகிய இருவரும் காயமடைந்த
நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No posts found.
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்

விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்

இலங்கை பெலியத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி
பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

மேலும் ஆன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

ஆட்டோ சாரதி வண்டியின்வேகத்தை கட்டு படுத்த முடியாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

No posts found.
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்

இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்

இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் ,
தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த பணம் விரைவில் இலங்கைக்கு வழங்க படவுள்ளது .

கடன் மேல் கடனை பெற்று
மீளவும் நாட்டை கேள் நிலைக்கு இலங்கை அழைத்து
செல்வதை இவை மீளவும் எடுத்து காண்பிக்கின்றன.

No posts found.
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்

பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை எனவும் ,அவர் மக்களையும் கடைசி மகன் பாலசந்திரனையும் பலிகொடுத்து விட்டு தப்பிப்போகும் கோழை இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் .

தமிழக அரசியல் கூலிகள் சிலர் சிலரது நலனுக்கும் ,தமிழர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த இந்த சதிவேலைகளை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார் .

No posts found.
இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் கூலி பைலைப்பு நடத்தி வருகிறது .

புலிகள் உள்ள பொழுது இந்தியாவின் ராவுக்கு வேவு பார்க்க
புலிகளுடன் நெருங்கி பழகி ,பின்னர் புலிகளுக்கு
வேட்டு வைத்த கூலிகள், தற்போது புலிகள் உளளார் என ,
வெட்க மான ரோசம் அற்று மீண்டும் புலிகள் பெயரை உச்சரிக்கின்றன .

போரினால் பாதிக்க பட்டு அடக்கி ஒடுக்க படுகின்ற தமிழர்களுக்கு ,
தீர்வு காண மறுக்கும் ,இந்தியாவும் ,தமிழக அரசியல் கூலிகளும் ,
தற்போது புலிகள் பெயரை உச்சரிப்பது கேவலமாக உள்ளதாக ,
புலம் பெயரை தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .

No posts found.
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ளனர் என்ற ஒலி நாட ஒன்று
வெளியாகியுள்ளது .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ள செய்தியானது தமிழ் மக்கள் மத்தியில்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click here video

வவுனியாவில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் காட்டு பகுதிக்குள் இருந்து மனித சடலத்தின் எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .
இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது .

காணாமல் போயிருந்த சிங்கள நபர்
ஒருவரே உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

இவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் தொடர்ந்து வட கிழக்கு பகுயில் ,
இவ்வாறான மர்ம கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

பியகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை கெப்சல்கள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

இது தவிர, போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரே நாளில் மூவர் படுகொலை

ஒரே நாளில் மூவர் படுகொலை

நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் மூவர் படுகொலை

இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

நபரொருவர் அடித்துக் கொலை

நபரொருவர் அடித்துக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வன்முறைச் சம்பவம் கிராமத்தின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது .

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ரயில் பயணங்கள் திடீர் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

ரயில் பயணங்கள் திடீர் ரத்து

இன்று (13) இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதன்படி, மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரை பிரதான ரயில் வீதியில் இயங்கும் அலுவலக ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பிரதான வீதியில் இயக்கப்படும் பல அலுவலக ரயில்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை, கரையோர ரயில் வீதியிலும் பல அலுவலகப் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், காலியில் இருந்து மருதானை
நோக்கிச் செல்லும் சமுத்திராதேவி ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கேட்ட மகனை கம்பியால் தாக்கிய தந்தை

உணவு கோரிய 16 வயது மகனை தந்தை ஒருவர் கம்பியால் தாக்கிவிட்டு
தப்பி சென்றுள்ளார் .

தந்தையின் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான தந்தை கைது செய்யப் பட்டுள்ளார் .

சம்பவ தினத்தின் பொழுது பெற்றவர்கள் அதிக மது போதையில் ,
இருந்த நிலையில் ,
இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

No posts found.