Tag: பெண் கைது
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது
பாணந்துறையில் கடத்தல் தொடர்பாக பெண் கைது ,பாணந்துறையில் ஹெராயின் கடத்தல் தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது
அரங்கம் என்ற போர்வையில்
பாணந்துறை வடக்கு காவல்துறையினரால் இறுதிச் சடங்கு அரங்கம் என்ற போர்வையில் ஹெராயின் கடத்தலை
நடத்தியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான கடை உரிமையாளர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் நேற்று (25) ஒரு ரகசிய தகவலின் பேரில்
நடத்தப்பட்ட சோதனையின் போது 21 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆண்
கைது செய்யப்பட்ட ஆண் 39 வயதுடையவர் என்றும், அவரது தாயார் 69 வயதுடையவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பணமோசடி சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இருவரும் இன்று (26) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது
SDIG-யின் சகோதரி என்று பொய்யாகக் கூறிக்கொண்ட பெண் கைது ,கம்பாமாவில் மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி என்று பொய்யாகக் கூறி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பெண் ஒருவரை கம்பஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நவம்பர் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளது.
கம்பஹா காவல் பிரிவின் கொட்டுகொட-உடுகம்பொல பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில்
ஈடுபடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
காரை ஓட்டி வந்த பெண், முதலில் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை புறக்கணித்து விரட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மினுவாங்கொட பொலிஸ் சந்திப்பில் கைது
பின்னர் வாக்குவாதம் நடந்த உடுகம்பொல சந்திப்பில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார், மீண்டும் காவல்துறை அறிவுறுத்தல்களை மீறிய பின்னர் மினுவாங்கொட பொலிஸ் சந்திப்பில் கைது செய்யப்பட்டார்.
உயர் பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் சகோதரி என்ற அவரது கூற்று முற்றிலும் பொய்யானது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மீது ஆபத்தான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், காவல்துறை உத்தரவுகளை மீறுதல் மற்றும் அரசு ஊழியர் ஒருவர்
அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்வதைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிர்வாண புகைப்படம்: பெண் கைது: பெண் கைது
நிர்வாண புகைப்படம்: பெண் கைது
தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாண புகைப்படம்: பெண் கைது
மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இந்த பெண் தனது நண்பர்கள் மத்தியில் வட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான பெண் தனது மைத்துனருடன் சில காலமாக நல்லுறவில் இருந்து வந்ததாகவும் தற்போது கோபமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சுby நிருபர் காவலன்
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானைby நிருபர் காவலன்
- குற்றவாளிக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்by நிருபர் காவலன்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்குby நிருபர் காவலன்
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என, பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விமானத்தில் புகைத்த பெண் கைது
விமானத்தில் புகைத்த பெண் கைது
இந்தியா இண்டிக்கோ விமானத்திற்குள் புகைத்த
பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
24 வயதுடைய இளம் பெண் ஒருவரே விமானத்திற்கு புகைத்துள்ளார் .
இவர் புகைப்பதை கண்ணுற்ற சக பயணிகள் முறையிட்டதை
தொடர்ந்து ,குறித்த விமானம்
தரை இறங்கிய பொழுது அந்த பெண் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த
பெண்ணே இவ்வாறு புகைத்தலில் ஈடுபட்டார்
என தெரிவிக்க படுகிறது .
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
பியகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை கெப்சல்கள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அதிரடி பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது
இது தவிர, போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




































