யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்|இலங்கை செய்திகள்

மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்-இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன்
இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

No posts found.
13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிய நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்

சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எங்களை லண்டனுக்கு போக சொன்னால் அவரை நாங்கள் போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல
தமிழ் பெயரும் அல்ல அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

No posts found.
யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ- இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ| இலங்கை செய்திகள்

யாழில் 10 ரூபா சாப்பாட்டு கடை வீடியோ

இலங்கை செய்திகள்யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் 10 ரூபாவுக்கு சாப்பாடு உள்ளது .


இலங்கையில் எகிறிய விலைவாசிக்கு ,இப்படியும் ஒரு தமிழர், மக்களுக்கு இவ்வாறான சேவை செய்வது என்பது
பாராட்ட பட வேண்டிய ஒன்று .

இந்த கடைக்கு படையெடுக்கும் மக்களை இங்கே பாருங்கள்.
காணொளியை முழுமையாக பார்த்தால் வியந்து போவீர்கள் .

No posts found.
இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன்

இலங்கையில் 150.000 க்கு கோழி விற்கும் லண்டன் தமிழன் .


இலங்கைக்கு வெளிநாட்டு தமிழன் வந்தால் என்ன எல்லாம்
செய்வார்கள் என்பதற்கு இவர் உதாரணம் .


இப்போ காசு எங்க இருக்கு இலங்கையில்.ஆனால் இலங்கையில் உள்ளவன் என்ன செய்கிறார்கள் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்த்தபடி காத்துள்ளார் .


லண்டனில் ஒரு மணித்தியாலம் 9 பவுண்டுகள் சம்பளம் ..
கோடியில் இலங்கையில் வீடுகள் வாங்கினால் அவர்
எத்தனை மணித்தியாலம் லண்டனில் வேலை செய்திருப்பார்
என்கின்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள்.


2 அறை கொண்ட வீட்டில் வாழும் ஒரு குடும்பத்திற்கு
மாதம் தோறும் வீடு வாடகை
மட்டும் 1390 காஸ் மின்சாரம் நாள் ஒன்றுக்கு 10 பவுண்டுகள் .மொத்தம் 1690 .


இப்போ யோசிங்க வீடு காணிகள் இலங்கையில்
வாங்குபவர்கள் செய்யும் சூத்து மாத்து மேலும்
சொல்ல போனால் தவறான தொழில் அல்லது அவ்வாறான
ஒன்றை செய்கிறார்கள் என்பதே வெளிப்படை .

https://www.youtube.com/watch?v=1dXeSMdvoPw
No posts found.
வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி
Posted in உலக செய்திகள்

வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி

வீடுகளை விற்கும் புட்டீன் மனைவி

ரசியா ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் மனைவி தனது
வீடுகளை அவசர அவசரமாக விற்பனை
செய்கிறார் .

தமது சொத்துக்கள் முக்க படலாம் என்ற பீதியில் இந்த புட்டீன் மனைவி
பீதியில் உறைந்துள்ளார் .

புட்டீன் மனைவி ,
வீடுகளை விற்கும் புட்டீன் முன்னாள் மனைவி ,
புட்டீன் மனைவி சொத்துக்கள் முடக்கம் ,

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
Posted in உலக செய்திகள்

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி

மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி

லிபியா கடல் பரப்பின் ஊடாக பயணித்த
அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில்
அதில் பயணித்த 73 பேர் பலியாகியுள்ளனர் .

80 பேருடன் பயணித்த அகாணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீட்க பட்டுள்ளனர் .

காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக பயணித்த பொழுதே இந்த
அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.

அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, பொலிஸாரிடதே தனை மீளக் கையளித்தார் எம்.பி.

பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என பாராளுமன்ற
உறுப்பினர் வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்

இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு

தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ,
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவுப்புக்கான காரணம் வெளியிட படவில்லை.

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ​செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளி​நொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

No posts found.
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக குடுபத்தினர் தெரிவிக்கையில், கொழும்பு – வம்பலப்பிடடியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில் சகோதரின் சுகநலம் விசாரிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிமை மாலை 5 மணியளவில் திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்

இந்நிலையிலேயே கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவிலைச் சேர்ந்தவரும் கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தங்கராசா நாகசுந்தரம் (70 வயது) மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த அவரது சகோதரர் தங்கராசா கேதாரவரதசுந்தரம் (74 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்த நாகசுந்தரத்தின் மனைவி சாருமதி மற்றும் உயிரிழந்த கேதாரவரதசுந்தரத்தின் மகன் ஜசிகாந்த ஆகிய இருவரும் காயமடைந்த
நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No posts found.
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்

விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்

இலங்கை பெலியத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி
பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

மேலும் ஆன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

ஆட்டோ சாரதி வண்டியின்வேகத்தை கட்டு படுத்த முடியாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

No posts found.
இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்

இலங்கைக்கு யப்பான் 38 மில்லியன் கடன்

இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகள் ,
தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் 38 மில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த பணம் விரைவில் இலங்கைக்கு வழங்க படவுள்ளது .

கடன் மேல் கடனை பெற்று
மீளவும் நாட்டை கேள் நிலைக்கு இலங்கை அழைத்து
செல்வதை இவை மீளவும் எடுத்து காண்பிக்கின்றன.

No posts found.
பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்

பிரபாகரன் உயிரோடு இல்லை ஒளிந்து ஓட அவர் முட்டாள் இல்லை சீமான்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை எனவும் ,அவர் மக்களையும் கடைசி மகன் பாலசந்திரனையும் பலிகொடுத்து விட்டு தப்பிப்போகும் கோழை இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் .

தமிழக அரசியல் கூலிகள் சிலர் சிலரது நலனுக்கும் ,தமிழர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்த இந்த சதிவேலைகளை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார் .

No posts found.
இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய அரசியல் கூலிகள்

புலிகளை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் கூலி பைலைப்பு நடத்தி வருகிறது .

புலிகள் உள்ள பொழுது இந்தியாவின் ராவுக்கு வேவு பார்க்க
புலிகளுடன் நெருங்கி பழகி ,பின்னர் புலிகளுக்கு
வேட்டு வைத்த கூலிகள், தற்போது புலிகள் உளளார் என ,
வெட்க மான ரோசம் அற்று மீண்டும் புலிகள் பெயரை உச்சரிக்கின்றன .

போரினால் பாதிக்க பட்டு அடக்கி ஒடுக்க படுகின்ற தமிழர்களுக்கு ,
தீர்வு காண மறுக்கும் ,இந்தியாவும் ,தமிழக அரசியல் கூலிகளும் ,
தற்போது புலிகள் பெயரை உச்சரிப்பது கேவலமாக உள்ளதாக ,
புலம் பெயரை தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .

No posts found.
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு

பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ளனர் என்ற ஒலி நாட ஒன்று
வெளியாகியுள்ளது .
பிரபாகரன் பொட்டு அம்மான் உயிரோடு உள்ள செய்தியானது தமிழ் மக்கள் மத்தியில்
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click here video

வவுனியாவில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் மனித சடலம் மீட்பு

வவுனியாவில் காட்டு பகுதிக்குள் இருந்து மனித சடலத்தின் எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .
இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது .

காணாமல் போயிருந்த சிங்கள நபர்
ஒருவரே உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

இவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் தொடர்ந்து வட கிழக்கு பகுயில் ,
இவ்வாறான மர்ம கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.