Tag: வாள்வெட்டு தாக்குதல்
பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்
பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் நீர்வேலியில் சனிக்கிழமை (11) யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சுby நிருபர் காவலன்
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானைby நிருபர் காவலன்
- குற்றவாளிக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்by நிருபர் காவலன்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்குby நிருபர் காவலன்
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
யாழில் வாள்வெட்டு தாக்குதல் |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்வத்தில் படுகாமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில்
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம்
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.














