Tag: விபத்து
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் பதுளை நோக்கி பயணித்த லொறி ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
ஐம்பது அடி பள்ளதாக்கில் லொறி வீழ்ந்த நொறுங்கியது ,இதன் பொழுது பலத்த காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
இந்த லொறி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன்மை குறிப்பிட தக்கது .
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வெலிமடை – கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்by நிருபர் காவலன்
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ஒருவர் அடித்து கொலைby நிருபர் காவலன்
- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்by நிருபர் காவலன்
- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளைby நிருபர் காவலன்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
by நிருபர் காவலன் - கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - ஒருவர் அடித்து கொலை
by நிருபர் காவலன் - பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்
by நிருபர் காவலன் - மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை
by நிருபர் காவலன் - இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்
by நிருபர் காவலன் - சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
by நிருபர் காவலன் - கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
by நிருபர் காவலன் - வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
by நிருபர் காவலன் - நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்
காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கனடா நெடுஞ்சாலையில்பெரும் விபத்து 15 பேர் மரணம்
கனடா நெடுஞ்சாலையில்பெரும் விபத்து 15 பேர் மரணம்
கனடா மானிடோபாவில் உள்ள டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில்,
ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சம்பவ இடத்திற்கு அவசரக் குழுக்கள் மற்றும் பல விமான ஆம்புலன்ஸ்கள்
வருகை தந்தன .
இந்த ஆண்டில் இந்த பகுதியில் இடம்பெற்ற மிக பெரும் விபத்தாக இது பார்க்க படுகிறது .
இந்த விபத்தினால் பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது ,
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் ,சாலை கமராக்கள் சோதனைக்கு,
உள்ளாக்க பட்டு வருகின்றன .
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
இலங்கை வெள்ளவத்தை பகுதியில் ஆன் ஒருவர் சடலமாக மேடேக பட்டுள்ளார் .
கோட்டையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த ,ரயிலில் ,மோதுண்ட ஏ இவர் இருந்துள்ளதாக டெஹ்ரிவிக்க படுகிறது .சாலமீட்க மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இத்தாலி வாகன விபத்து: இலங்கையர் பலி
இத்தாலி வாகன விபத்து: இலங்கையர் பலி
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது இலங்கையை சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Featured
கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி
கோர விபத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பலி
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.
உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது
Featured
பாரிய விபத்து 26 வாகனங்கள் சேதம்
பாரிய விபத்து 26 வாகனங்கள் சேதம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06 விபத்துக்களால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு செல்லாமையினால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Featured
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது
பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Featured
கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்
கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Featured
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .
இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .
எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.
உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
மொனராகலை- பிபிலை வீதியின் தொடம்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிலை வெல்லஸ்ஸ தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்ற கனுல்வெல முஸ்லிம் மஹா
வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது
மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.
ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .
வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்
கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .
மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .
கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .
அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.
கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
அமெரிக்கா ஐந்தியான பகுதியில் காங்கிரஸ் பெண் மேல் சபை உறுப்பினரான Republican Jackie Walorski அவர்கள் கார் விபத்தில் பலியாகியுள்ளார் .
இவருடன் மேலும் நால்வர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
இவர்கள் மரணம் திட்டமிடப்பட்ட படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில் காங்கிரஸ் முக்கிய மேல் சபை உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்கு சந்தை காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .
ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.
சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .
இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
.பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .
































