Posted in மருத்துவம்

இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

.இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

‘ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்’ தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான உடல் எடை, அதாவது 18 முதல் 25க்கு உட்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் கொண்ட 18 வயதுக்கு அதிகமான 2,600 பெண்களின் உடல் நலன் இந்த ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டது.

1990களின் மத்திய பகுதியில், ‘வுமன் ஹெல்த் இனிஷியேடிவ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் முடிவில், இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்பு கொண்ட பெண்களைவிட, தொப்பை கொண்ட பெண்கள் அதிகளவில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் வயிற்று பகுதியை சுற்றி சேகரமாகும் கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற

சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்.

கால் பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும், அதே சமயத்தில்

இது உடலில் வேறு எங்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்து

கால் பகுதியில் உள்ள கொழுப்பைவிட, வயிற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதற்கு பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.

“வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை இடமாற்றம் செய்வதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுமுறை இருக்கிறதா என்பதில் இன்னும் தெளிவில்லை. இதற்கான

பதிலை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கும் வரை, பெண்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்

    பெண்கள்
    Posted in இலங்கை செய்திகள்

    நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

    நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்

    ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.

    நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

    மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.

    ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.

    இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

    உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.

    மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.

    காணாமல் போனவர்கள்

    எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14
    132 மடம் கொன்வன்ட் வீதி யாழ்ப்பாணம்

    வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய – வத்தளை

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை

    லண்டனில் தீவிர வாத தாக்குதல் – தப்பிய மருத்துவமனை

    பிரிட்டன் லிவர்பூல் பெண்கள் மருத்துவமனை முன்பாகபாரிய
    கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,

    இதில் இருவர் காயமடைந்த நிலையில் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது

    டாக்சி சாரதி ஒருவர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்

    மேற்படி தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

    இந்த சமபவத்தை அடுத்து தற்போது ஆளும் பிரதமர் அவசர கூட்டத்தை கூட்டி
    நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்

    பிரிட்டனில் என்றுமில்லாதவாறு பெரும் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டு உள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

    மேற்படி சம்பவம் தொட்ரபில் பிரதமர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

      காணாமல் போன மூன்று பெண்கள் வீடு திரும்பினார்

      இலங்கையில் காணாமல் போன 15 வயதுடைய மூன்று இளம் பெண்கள் காணாமல் போயிருந்தனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களை மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
      இவர்கள் அனுராத புரத்திற்கு சென்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in மருத்துவம்

        பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

        பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

        பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.


        பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.

        இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

        பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

        சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.

        மனநிலை முக்கியம்

        ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை

        கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது

        உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

        உடல் மேல் கவனம்

        நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன

        உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும்.

        உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.

        பொழுதுபோக்கு

        டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது

        ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை…

        ஆரோக்கியமான உணவு

        நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

        வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

        நல்ல நட்பு

        எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது.

        நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி

        இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.

          Posted in மருத்துவம்

          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

          ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.


          ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என

          சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

          தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

          தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.

          சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

          பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

          எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.

          தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர்

          முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

          தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில்

          , ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

          கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

          தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும்.

          காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

          சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும்.

          தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்

            Posted in மருத்துவம்

            கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

            கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

            கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

            கருவுற்ற 10 – 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம்

            ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

            அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது,

            பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

            கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

            தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக்

            கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

            கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து

            நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

            ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த

            உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.

            பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக

            நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

            காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது

            மலசல கூடத்தில் கமரா வைத்து பெண்களை படம் பிடித்த இயக்குனர் கைது

            பிரிட்டனில் பிரபல இயக்குனர் ஒருவர் அவரது ஆடம்பர இல்லத்தில் அங்கு வந்து சென்ற பெண்கள் பயன் படுத்திய மலசல கூடத்தில்

            இரகசிய கமராவை பொருத்தி அந்த பெண்களின் அந்தரங்க

            பாகங்களை காணொளி பதிவு செய்து இரசித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

            இவ்விதம் இருபத்தி நான்கு பெண்களை இவர் காணொளியாக பிடித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

            நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன் ,பாதிக்க பட்ட

            பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாயிரம் பவுண்டுகள் வழக்கப் பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட பட்டுள்ளது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

            17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

            திடீர் தாக்குதல்

            பிரிட்டன் Johnstone, Renfrewshire பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவனை 25 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் அவனை சாராய

            போத்தலினால் அடித்து மண்டையில் உடைத்து ,உடைந்த துகள்கள் மூலம் கால் ,மற்றும் உடம்பில் பெயரை எழுதியுள்ளனர்

            இந்த வதையால் உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன

            மீட்பு

            இவ்வாறான நிலையில் மீட்க பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,

            தொடர்ந்து அவனது வாழ்நாளில் மீள் இயங்க முடியாத பெரும் நெருக்கடி நிலைக்கு மேற்படி சம்பவம் இட்டு சென்றுள்ளது

            நீதிமன்ற விசாரணை

            இதனை அடுத்து குறித்த நபர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது ,தாக்குதலை நடத்தியவர்கள் ,போதைவஸ்து

            ,மற்றும் மன நலன் பாதிக்க பட நிலையில் இருந்தமையால் தண்டனை காலம் குறைக்க பட்டுள்ளது

            Posted in மருத்துவம்

            செக்ஸ் தொல்லையால் அவதி படும் குண்டு மனிதர்கள்

            விரும்பியது போல செக்ஸ் செய்திட முடிய அவதி படும் குண்டான ஆண் பெண்கள ,செக்ஸ் தொல்லை என்ன பண்ணலாம்

            நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

            அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து

            இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண

            காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

            இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2.

            சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.

            உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9

            சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள்

            அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.

            விளையாட விடுங்கோ படி

            குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக்

            குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

            மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல்

            எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.

            கணவாய் பிரட்டல் video

            உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு

            பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.

            அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால்

            அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு

            அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.

            இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட

            தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.

            மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல்

            உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை

            பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை

            பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

            உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல்

            உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான

            உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.

            உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க…

            உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை

            உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா?

            தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.

            உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.

            வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

            உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.

            தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

            பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

            மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட

            பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

            குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

            அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.

            தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.

            உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.

            புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.

            Posted in முக்கிய செய்திகள்

            11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

            11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?

            இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

            ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்

            வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து

            போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்

            அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது

            எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

            இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை

            ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக

            சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்

            இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு

              இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

              அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ

              வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

              11 தமிழ் இளம்
              11 தமிழ் இளம்
              Posted in Uncategorized

              கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

              கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

              இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் இளசுகள் ஆடம்பரத்தில் மூழ்கி இதுவே வாழ்வின் சொர்க்கம் என்ற நிலையில் உறைந்து விடுகின்றனர்

              இதனால் ஆண் ,பெண் நெருக்கம் அதிகரிக் கிறது ,பெண் கற்பமாகிறாள் ,இன்று பெண்ணோடு நெருங்கியவர் அவளை விட்டு

              தப்பி ஓடி விடுகின்றார் ,விளைவு ,.அவள் சிசுவை பெற்று வீதிகளில் எறிந்து விட்டு தப்பி ஓடுகின்றாள் ,இல்லை எனின் தற்கொலை

              செய்கின்றாள் ,அதற்கு மேலாக சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுகிறது

              பெற்றவர்கள் தலை குனியும் நிலையை இந்த பெண் பிள்ளைகள் ஏற்படுத்தி விடுகின்றனர் ,ஒரு வேளை சுகம் காண ,அதனை

              செய்திட முன்பு அதன் தடுப்பு முறைகளை கையாள மறந்து ,இவ்விதம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதால் ,

                தனது அழகிய வாழ்வை சிதைத்து சாகும் வரை வலியோடு பயணிக்கும் வாழ்வியல் சுழன்ற வண்ணம் உள்ளது

                கஞ்சா,பீடி,மது,என கேளிக்கைகளில் நாட்டம் கொண்டுள்ள இளசுகள் ,புரியும் இந்த சிந்திக்க மறந்த சீர்கேட்டு தனத்தில் தம்மை

                ஈடுபடுத்தி கொள்வதுடன் ,ஒரு சமூகத்தையும் குற்ற சமூகமாக மாற்றி வருகிறது

                போதைவஸ்து ,மது பாவனையை தடுத்திட அரச முயலுமா…?அப்படி அவை தடுக்க முடியாத படத்தில் சமூகம் குற்றம் அற்ற சமூகமாக மாறும் ,,?

                அவ்வாறு இல்லை எனின் கீழ் வரும் விடயங்களை நடைமுறை படுத்த வேண்டும் .விழிப்புணர்வு நிச்சயமாக பெண்களுக்கு தேவை படுகிறது

                இதனை தடுப்பது யார் கடமை ….?சிந்திக்குமா அரசு …? தற்கால நிலையில் இலங்கையில் பாலியல் கல்வி ஊட்டம் அவசிய மாகிறது

                வெளி நாடுகளை போல சிறுவயது முதலே இந்த பாலியல் கல்வியை ஊட்டுதல் மூலமே குற்றம் அற்ற சமூகமாகவும் ,இந்த சீரழிவுகளில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் நகர்வையும் மேற்கொள்ள முடியும் .

                இந்த கல்வி முறையை அமூல் படுத்திட மகிந்த முனைந்தார் ,ஆனால் அது கைவிட பட்டது ,மீள இதனை ஆளும் அரசு நடைமுறைக்கு

                உள்ளாக்கி குற்றம் அற்ற சமூகத்தை உருவாக்குமா..?சமூக சீரழிவை தடுக்குமா ..?மேற்படி சட்ட மாற்றத்தின் மூலம் குற்றங்களை கட்டு படுத்த முடியுமா ..? சிந்திக்க வேண்டியது நீங்களே ….!

                கள்ள காதலால்
                கள்ள காதலால்
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                  இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                  காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்

                  சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்

                  பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்

                  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:

                      பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக

                      மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,

                      கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),

                      நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு

                      ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
                      தரமான

                      சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்

                      கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

                      இலங்கையில் கர்ப்பிணி
                      இலங்கையில் கர்ப்பிணி
                          Posted in உலக செய்திகள்

                          இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                          இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                          இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

                          பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


                          இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

                              இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                              இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                              மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                                  பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

                                  இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி

                                    அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .

                                    இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு

                                    திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்

                                    இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்


                                    பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக

                                    வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி

                                    பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்

                                      மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு

                                      சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

                                      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                                      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                                          Posted in மருத்துவம்

                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
                                          வலிப்பு நோயுள்ள பெண்


                                          வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு

                                            கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை

                                            வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

                                            இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக

                                            கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத

                                            வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள்

                                            கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

                                            தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம்

                                            செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை

                                            நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை

                                            நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின்

                                              ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு

                                              நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

                                              வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும்

                                              எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால்

                                              வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.

                                                Posted in மருத்துவம்

                                                உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?

                                                உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?

                                                உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்

                                                அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

                                                கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன்

                                                மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

                                                உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை

                                                கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

                                                இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை

                                                வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

                                                உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்

                                                அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

                                                உடல் பருமன் கர்ப்பமடைவதை
                                                உடல் பருமன் கர்ப்பமடைவதை
                                                Posted in இலங்கை செய்திகள்

                                                விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது

                                                விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது

                                                கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மர்ம விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப் பட்டது .

                                                இந்த சுற்றிவளைத்த இரகசிய விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
                                                உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                                                கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்