Posted in சினிமா

பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.

நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம்

நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை

குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்.

    Posted in சினிமா

    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்


    பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.

    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க

    ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு

    கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

    இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க

    ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை

    ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்

    Posted in சினிமா

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

    மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
    கங்கனா ரணாவத்


    நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு

    எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா

    வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு

    துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

    கங்கனா ரனாவத்

    இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

    நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

      Posted in சினிமா

      பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

      பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

      உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல

      நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

      பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
      கமல்
      தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்

      தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

      இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்

      அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்

      நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

      இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி

      ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.

      ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு

        Posted in சினிமா

        நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

        நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

        பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவரிடம் நடிகை ஒருவர் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

        நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை

        நடிப்பிலும், நடனத்திலும் ‘ராசா’வான மூன்றெழுத்து நடிகர், அவர். சமீபகாலமாக அவர் நடித்த

        படங்கள் அனைத்தும் அதிரிபுதிரியாக ஓடி அமோக வெற்றி பெற்று வருகின்றன. அவருடைய

        நட்சத்திர அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.

        நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஒரு நடிகை கைவசம் தற்போது படமே இல்லையாம்.

        அதனால் அந்த நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ‘‘ஒரு பாட்டு என்றாலும் பரவாயில்லை…

        உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும்…’’ என்றாராம். வட இந்திய பெயரை கொண்ட அந்த

        நடிகைக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், நடிகர்

          Posted in சினிமா

          அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

          அந்த நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

          அதிக சம்பளம் வாங்கி வரும் பெரிய நடிகை ஒருவர், தனக்கு ஜோடியாக சின்ன நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

          சின்ன நடிகருடன் ஜோடி சேர மறுக்கும் நடிகை

          மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களா

          ம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம்.

          இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம்.

          இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என

          படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே

          ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணமாம்.

            Posted in சினிமா

            வாய்ப்புகளை இழக்கும் நடிகை

            வாய்ப்புகளை இழக்கும் நடிகை

            தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்புகளை இழந்து வருகிறாராம்.

            பட வாய்ப்புகளை இழக்கும் நடிகை

            கோலிவுட்டில் தல, தளபதி போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகை என்ற

            அந்தஸ்தை பெற்ற ஸ்வீட் கடை பெயர் கொண்ட நடிகை, திருமணத்துக்கு பின்னரும் படங்களில்

            பிசியாக நடித்து வந்தாராம். அந்த நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.

            இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாம். அந்த நடிகைக்கு பட

            வாய்ப்புகள் ஒவ்வொன்றாக நழுவி வருகிறது. தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும்

            படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்க

            படக்குழு முயற்சித்து வருகிறார்களாம்.

              Posted in சினிமா

              அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

              அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

              தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.

              அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

              தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.

              தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்

              Posted in சினிமா

              பிஸியான நடிகை – கலக்கிறாங்க

              பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.சாக்‌ஷி அகர்வால்தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம்

              வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
              சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சாக்‌ஷியுடன், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

              சாக்ஷி அகர்வால்

              சாக்ஷி அகர்வால் – சுந்தர் சி
              இப்படம் குறித்து சாக்‌ஷி அகர்வால் கூறும்போது, ‘அரண்மனை 3 படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இயக்குனர் சுந்தர்.சி திறமையானவர். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது.

              ஒரு படத்தை இயக்கி நடிப்பது மிகவும் கடினமான விஷயம். அதை சுந்தர்.சி மிகவும் திறமையாக கையாண்டார். மேலும் படத்தில் நிறைய நடிகர்கள். அவர்களை ஒருங்கிணைத்து நன்றாக வேலை

              வாங்கினார். இவருடைய படங்களில் நடிகைகளை அழகாக காண்பிப்பார். அதுபோல் என்னை மிகவும் அழகாக காண்பித்து இருக்கிறார். சரியாக திட்டமிட்டு படத்தை அழகாக

              முடித்திருக்கிறார். தற்போது தியேட்டரில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்’ என்றார்.

              Posted in சினிமா

              திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை

              திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை

              தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார்.

              திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா
              கணவருடன் வித்யுலேகா


              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா – சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

              வித்யுலேகா

              குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள

              பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

              இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

                Posted in சினிமா

                நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை

                நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை

                தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்த நடிகை பல நடிகர்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

                நடிகர்களை தன்வசப்படுத்தும் நடிகை
                கிசுகிசு


                தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறதாம். இதற்காக பல நடிகைகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்

                . தற்போது புதியதாக அறிமுகமாகியிருக்கும் இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.

                தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகர்களை தன் வசம்படுத்தி இருக்கிறாராம். மேலும் சமூக வலைத்தளத்தில் இருப்பவர்கள், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள்

                அனைவரையும் நேரடியாக தொடர்பு கொண்டு கைக்குள் போட்டு வைத்திருக்கிறாராம். இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறாராம்.

                  Posted in சினிமா

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை

                  தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து வருகிறாராம்.

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை
                  கிசுகிசு


                  தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிதமிழில்கை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து

                  விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

                  ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தாராம். இதை

                  நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இருப்பினும் நடிகை போட்டோ ஷூட் எடுப்பதை கைவிடவில்லையாம்.

                    Posted in Uncategorized

                    கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்

                    கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா கதறல்

                    பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

                    சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.

                    இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த

                    நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

                    இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த

                    நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

                    ராதா

                    இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ்

                    குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

                    இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.

                    நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

                    நடிகை ராதா கதறல்
                    நடிகை ராதா கதறல்
                      Posted in சினிமா

                      பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                      பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

                      தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                      பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை
                      கிசுகிசு


                      தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்த நடிகையின் படம் ப்ளாப் ஆனதால், தெலுங்கு பக்கம் சென்ற நடிகை

                      அங்கு முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தாராம். தற்போது அந்த நடிகை தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறாராம்.

                      இந்நிலையில், அடுத்த படத்திற்காக தமிழில் மற்றொரு முன்னணி வாரிசு நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

                      எப்படியாவது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம்.

                        Posted in Uncategorized

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை

                        பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க வந்த போது அவரை கண்டித்து அனுப்பி இருக்கிறார்.

                        செல்பி எடுக்க வந்த ரசிகரை விரட்டிய நடிகை
                        ராக்கி சாவந்த்


                        பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஏற்கனவே மல்யுத்த

                        வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்தார். இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தாவை கண்டித்தார். சமீபத்தில் லண்டன் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமானார்.

                        ராக்கி சாவந்த்

                        இந்த நிலையில் மும்பையில் ராக்கி சாவந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றார்.

                        அந்த ரசிகர் முக கவசம் அணியாததால் தன்னுடன் புகைப்படம் எடுக்க ராக்கி சாவந்த் மறுத்ததுடன் அவரை

                        கடுமையாக கண்டித்து விரட்டவும் செய்தார். அந்த ரசிகரை பார்த்து முக கவசம் அணியாமல் என்னுடன் செல்பி எடுக்க முடியாது.

                        முக கவசம் அணியுங்கள். உங்களை போன்றவர்களால்தான் மும்பையில் கொரோனா பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முக கவசம் அணியாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

                        நடிகை,சினிமா,
                        நடிகை,சினிமா,
                          Posted in சினிமா

                          திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை

                          திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க நடிகை

                          தமிழில் காதலில் விழுந்தேன், நீர் பறவை, வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுனைனா, திருமணத்தை பற்றி பேசுவதை நிறுத்துங்க என்று கூறியிருக்கிறார்.

                          திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்க… சுனைனா வருத்தம்
                          சுனைனா


                          காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் சுனைனாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

                          சமீபத்தில் டிரிப் என்னும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

                          இந்நிலையில் சுனைனா அளித்த பேட்டியில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

                          பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது” என்கிறார் சுனைனா.

                          சுனைனா

                          தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்த அவர் இவை அனைத்தும்

                          வந்ததிகளே என்றும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

                          திரை வாழ்க்கையில் கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு தனது திரைப்படங்கள் பேச வேண்டும்’ என்றார்.

                            Posted in சினிமா

                            நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

                            நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

                            கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார், சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு

                            ஏற்படுத்தினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

                            அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்’ என்ற

                            படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

                            நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு

                            அடுத்ததாக வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு

                            மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

                              Posted in சினிமா

                              பிரபல நடிகைகளை சாடிய கங்கனா

                              பிரபல நடிகைகளை சாடிய கங்கனா

                              உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.

                              அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள்.

                              நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’’ என்றார்.

                              அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

                              இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள்.

                              அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்” என்றார்.

                              இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

                              இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த

                              ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

                                Posted in சினிமா

                                அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை

                                அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை

                                காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

                                இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.

                                சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

                                மனைவியுடன் செல்வராகவன்

                                இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                                அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார்.

                                மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

                                Home » நடிகை » Page 2
                                Posted in சினிமா

                                வேதிகாவிற்கு திருமணமா?

                                வேதிகாவிற்கு திருமணமா?

                                தமிழில் பரதேசி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை வேதிகா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

                                இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா.

                                இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

                                ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

                                இந்நிலையில் வேதிகா திருமண கோலத்தில் வெள்ளை கவுன் அணிந்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

                                ஆனால் கூடவே கேப்ஷனில் “நல்ல வேளை நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை.

                                இது விளம்பர படத்திற்காக எடுக்கும் புகைப்படம்” எனப் பதிவிட்டு உள்ளார்.

                                இதன் மூலம் இந்தப் பதிவு தன்னுடைய திருமணத்தை பற்றியது இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்

                                Home » நடிகை » Page 2