Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கோபம் தவிர்

கோபம் தவிர்

என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?

உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே

எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே

உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா

ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே

கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    கோபம் தவிர் வாழ்வில் நிமிர்

    கோபம் தவிர் வாழ்வில் நிமிர்

    எரியுது இங்கொரு நெஞ்சு – தினம்
    எறியுது ஏனது நஞ்சு ..?
    புலனது சிந்தை பிஞ்சு – இது
    புவி மேல் பறக்குமா குஞ்சு ..?

    திசையது அறியும் பறவை – நீ
    திசையது அறியா கறவை ….
    விழியது கூர்மை பறவை
    விடயங்கள் அறியும் நேர்மை …

    தேடினாய் என்ன சொல்லு – நீ
    தேறிய நிலையை வில்லு ….
    புரிதலில் கிழிதல் கொண்டாய்
    புண்களை விதைத்தேன் நின்றாய் …?

    அறிதலில் வேகம் கொள்வாய்
    அகிலம் வியக்க எழுவாய் …
    தெளிதலில் வீரியம் பெற்றால் – நீ
    தெரு நிலை வாழ்வியல் கழிவாய்…..

    முடிதலில் என்ன கொள்வாய் ..?
    முன்னே விளக்கி செல்வாய் …?
    எதுவரை வாழ்வு கூறாய் ..?- இப்போ
    எரிகிறாய் ஏனோ தீயாய்…?

    -வன்னி மைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -01/02/2018