Tag: கொழும்பு
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கே எதிராக போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை பாரளுமன்றம் முன்பாக கூடிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலக்க தகடுகள் அற்ற மோட்ட
சைக்கிளில் இராணுவத்தினர் வருகை தந்து மக்களை தகாத வார்த்தையில் . திட்டினர்
இவ்வேளை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதுடன், மக்களும் கூடி விரட்டினர்
எனினும் மீளவும் சுற்றி வந்து மிரட்டும் பணியில் செயலில் ஈடுபட்டனர்
கோட்டா தனது அதிகாரத்தை திறக்க மறுக்கும் நிலையில் இராணுவம்
மூலமும் கூலி குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என கணிக்க பெற்றுள்ளது
இந்த நிகழ்வுகளின் பின்னர் மக்கள் கொதித்தெழுந்து அதிகமாக வீதி இறங்கி வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை இந்தியாவுக்கு இடையில் பேச்சு -அலறவிட்ட கோட்டா
கொழும்பு துறைமுகம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியை சீனாவிடம் அபிவிருத்தி பணிக்கு வழங்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டார் ,இதனை அடுத்து இந்தியா கொதித்து போனது
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு மந்திரிக்கும் ,இலங்கை இந்தியா தூதராலய அதிகாரிக்கும்
இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
அதில் இந்த விடயங்களே முதன்மையாக பேசப்பட்டுள்ளன
புலிகள் அழிப்பு
புலிகளை இலங்கையுடன் இனைந்து அழித்த இந்தியா காங்கிரசின் மடமைத் தனமான செயல் பாட்டால் இன்று ஒட்டு மொத்த இந்தியா
இறையாண்மைக்கு பெரும் அச்சறுத்தலாக இலங்கை மாறியுள்ளது குறிப்பிட தக்கது
கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo
கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளில் இன்று காலை வாகன நெரிசல் காணப்பட்டது. தனியார் வாகனங்களே இவ்வாறு காணப்பட்டன
பொது போக்குவரத்து பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே காணப்பட்டனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்; ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் அத்தியாவசிய பொதுமக்கள்
சேவையை வழங்கும் பொழுது உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் மா அதிபர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும்
பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை
கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக
நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு
இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு
வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல்
உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்ற
தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும்.
இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0
சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய
அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.
சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில்
காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம்
(Delivery Service ) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.
சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின்
பொறுப்பாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு
அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23
மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கம்பஹாவில் 
மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்
திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்
காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோயால் 295 பேர் பாதிப்பு
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு
உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.
இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில்
இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
கொரொனா சோதனை பற்றிய என் கருத்தை எஸ்.பி. திசாநாயக்க திரிக்கிறார். இவரது தலையையும் சோதனை செய்ய வேண்டும்.
மனோ கணேசன்
கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முதல் நாள் தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி.
திசாநாயக்க திரித்து பேசுகிறார். அதை பிடித்துக்கொண்டு ஒரு தேரர் என்னை கைது செய்ய வேண்டும் சீஐடியில் சென்றுமுறையீடு செய்கிறார்.
இவர்களை பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக் “நாங்கள்” எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.
இந்நாட்டில் 40,000 கொரொனா நோயாளிகள் (Corona Positive) இருப்பதாக நான் கூறவேயில்லை. 40,000 “முதல் தொடர்பாளர்கள்” (First Contact Persons) இருக்கின்றார்கள் என்ற நான் கூறினேன்.
“முதல் தொடர்பாளர்கள்” என அறியப்பட்டவர்கள், கொரொனா நோயாளிகளுடன், தம் நாளாந்த வாழ்வில் நேரடியாக
சம்பந்தப்பட்டு ஒன்றாக, வாழ்ந்து, இருந்து, உண்டு வாழ்ந்தவர்களாகும். “முதல் தொடர்பாளர்கள்” என்றுதான் இவர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த, “முதல் தொடர்பாளர்கள்” பற்றி எங்களுக்கு யார் சொன்னது? மார்ச் 24ம் திகதியன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்
நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாதான் தனது உரையில், இதை கூறினார். இராணுவ,
பொலிஸ் புலனாய்வாளர்கள் வீடு வீடாக போய், தெருத்தெருவாக போய், கொரொனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார்.
இது முக்கியமான ஒரு பணி. இதையிட்டு நான் பாதுகாப்பு துறையை பாராட்டுகிறேன்.
சில அரசாங்க அரசியல்வாதிகள், மனோ கணேசனுக்கு எப்படி இந்த அரசாங்க இரகசிய தகவல்கள் கிடைக்கின்றன என கேட்கிறார்கள்.
கடவுளே, இவை இரகசிய தகவல்கள் இல்லை. கட்சி தலைவர் கூட்டத்தில் பகிரங்கமாக இராணுவ தளபதி கூறியதாகும்.
நான் கூட்டங்களுக்கு போனால், அங்கு தூங்குவதில்லை. கூட்டங்களில் பேசப்படுவது அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறேன்.
என்னிடம் கேள்வி கேட்கும், இந்த அரசாங்க அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் அல்ல. இதனால், இவர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?
சீன அரசு, 40,000 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிந்துள்ளேன். இந்த முதல்
தொடர்பாளர்களை, இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி பரிசோதிக்கும்படி நான் அரசாங்கத்தை கோருகிறேன்.
கொரொனா நோயாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த பிரிவிற்குள்தான் அதிகமாக இருக்க முடியும். ஆகவே அவர்களை
முதலில் சோதியுங்கள் என கூறுகிறேன். சோதனை வேகத்தை அதிகரியுங்கள் எனவும் கூறுகிறேன்.
இதை நான் மட்டும் கோரவில்லை. GMOA உட்பட முழு வைத்திய சமூகமே இதைதான் சொல்கிறது.
தொடர்ந்து இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க முடியாது. நாட்டை திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு முன்
மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆகவே சோதனைகளை அதிகரியுங்கள்.
நான் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய்
சொல்கிறார். கொரொனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திசாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கையின் கடல் பகுதி எங்கும் விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்து விடுவார்கள்
என்ற அச்சமும் ,அதன் ஊடாக வைரஸ் நோயானது இலங்கைக்குள் பரப்ப பட்டு
விடும் என அஞ்சும் இலங்கை இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
சீனாவில் இருந்தே ரசியாவுக்கு இந்த நோயானது தரைவழியாக கடத்த பட்டது
என்ற கருத்து பரவும் நிலையில் இலங்கை அரசும் அதன் முன்னோடி தடுப்பு நகர்வை மேற்கொண்டுள்ளது .

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை
திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது
கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
இலங்கை – கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் சிக்கியிருவர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சுமார் 12 பேர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர் .
பபகிடி வதை சட்டம் இடம்பெற்றால் எட்டு வருடம் கல்வி பயில தடை என புதிய சட்ட நடைமுறையை அமூல்
படுத்திய கோட்டபாய இந்த குழு மோதலுக்கு என்ன தீர்வு காண போகின்றார் ..?
மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகும் ..!






