Tag: இலங்கை
இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் எங்கும் திடீரென குவிக்க பட்டுள்ளதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ,விடுக்க பட்ட அறிவித்தலை அடுத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இவ்வாறு இராணுவம்வீதி எங்கும் குவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை நசுக்கிட ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இராணுவம் குவிக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் ரசியா இராணுவத்தால் தடுத்து வைக்க பட்ட இலங்கையர்கள் யாவரும் மருத்துவ மாணவர்கள் அல்ல எனவும் இலங்கை அறிவித்துள்ளது .
இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக உக்கிரேனுக்குள் நுழைந்தவர்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .
இந்த வெளிவிவகார அமைச்சீன, இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
அகதிகளாக சென்றவர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல எனபடுவது இலங்கையர்கள் அல்ல இலங்கை தெரிவிக்கிறது .
எவ்விதம் இலங்கை அலட்சியமாக செயல் படுகிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
இது தான் இன்றைய இலங்கையும் ,அதன் கோமாளி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அமைச்சர்களும் .
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்
அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிருவாக சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன்
வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயம்
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும்,
மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை
இலங்கையில் 19 ம் திகதி பாடசாலைகள் விடுமுறை
இலங்கையில் 19 ஆம் திகதி பாடசாலைகள் யாவும் விடுமுறை வழங்க படுகிறது .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் ,இறந்த நினைவு துயரை பகிரும் முகமாக ,இலங்கையிலும் பாடசாலைகள் விடுமுறை வழங்க படுகிறது .
இவ்வாறு வழங்குவதன் ஊடாக ,பிரிட்டன் அரசின் ஆதரவை இலங்கை பெற்று கொள்ள முனைவதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .
பிரிட்டன் மகாராணி எலிசபெத்தை அவர்கள் மரண நிகழ்வில் கலந்து கொள்ள ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பிரிட்டன் பயணமாகிறார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.
இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் 10.000 உணவகங்களை அடித்து போட்ட பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசிகள் அதிகரித்தன .
இந்த நிலையில் ,இந்த சிற்றுண்டி சாலைகள் ,மற்றும் உணவகத்தில் ,விருந்தகங்கள் என்பன அடித்து மூட ப்பட்டுள்ளன .
பாடசாலைகளில் இயங்கி வந்த , சிற்றுண்டி சாலைகளும் ,அதிக விலை அதிகரிப்பினால் அடித்து மூட பட்டுள்ளன .
இலங்கையில் 10.000 உணவகங்கள் அடித்து பூட்டு
முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டி சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரும் காலங்களில் ,மேலும் விலை வாசிகள் அதிகரிக்க படும் நிலை தோன்றி இருப்பதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலை மேலும் நீடித்தால் ,பெரும் நெருக்கடியை அணைத்து மக்களும் எதிர் கொள்ள நேரிடும் என்ற ,பெரும் எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .
இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி
இலங்கைக்கு 300 பொருட்கள் மீளவும் இறக்குமதி செய்திட அனுமதி
இலங்கையில் 300 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டது
இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் ,வாசனை திரவியங்கள் ,மற்றும் சாக்லைட் பொருள்கள் என்பன முதல் இடம் வகிக்க பட்டன,
அவிதாமான பொருட்களை மீளவும் இறக்குமதி , செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது .
இலங்கையில் இவ்வாறான பொருட்களுக்கு தட்டு பாதாதி அதிகரித்து ,பின்னர் இறக்குமதி மூலம் அதிக இலாபத்தை சம்பாதித்து .கொள்ள இந்த அரசியல் வியாபார விளையாட்டு இடம்பெற்றுள்ளது .
எனினும் தொடர்ந்து 77 பொருள்களுக்கு தடை நீடிக்க படுகிறது .
இந்த பொருட்கள் மீதான தடையும் விரைவில் நீக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக சீனா
ஜெனிவாவில் இலக்கைக்கு ஆதரவாக சீனா தோள் கொடுத்துள்ளது .
ஜெனீவாவில் இலங்கையில் நடத்த மனித குலத்திற்கு எதிரான படுகொலை ,கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ,இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது .
இவ்வேளையே இலங்கைக்கு ஆதரவாக வளமை போன்று சீனா குரல் கொடுத்துள்ளது .
இலங்கையி பொருளாதார வீழ்ச்சிக்கு ,சீனா முக்கிய காரணமாக விளங்கிய பொழுதும் ,ஜெனிவாவில் சீனா இலங்கைக்கு மீளவும் தோள் கொடுத்துள்ளது ,தமிழர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி யுத்தம் முடிவுற்று 13 ஆண்டுகள் கழிகின்ற பொழுதிலும் ,தமிழ் இன
படு கொலைக்கு இதுவரை தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் மிகபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .
சிங்கள இனவாத படைகளால் ,திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டும் இருந்தனர் .
இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை .
இந்த நெஞ்சு வலியோடு அவதிபட்டு கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய் கிழமை (30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது .
பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினர் (Freedom Hunters For Tamils )மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .
இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி பேரணிக்கு மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.
இலங்கையில் புதிய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க ஆள்கின்ற பொழுதும் ,ராஜபக்ச அரசாங்கம் நடத்திய தமிழ் இன பாடுகொலைகளுக்கு எவ்வித பொறுப்பு கூறல்களையும் செய்திடாது உள்ளமை தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனில் இடம்பெற்ற போராட்டங்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

















பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க
போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .
இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .
அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .
இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .
இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .
எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்
இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .
இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .
தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .
இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்
கவிதை நூல் அறிமுக விழா
கவிதை நூல் அறிமுக விழா
பைஷல் இஸ்மாயில் –
வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்
சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம
அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி
தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,
இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நீரில் மூழ்கி மாணவி மரணம்
நீரில் மூழ்கி மாணவி மரணம்
இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .
நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்
மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு
இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு
இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .
இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்
லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .
லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .
ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.
இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.
இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.
சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு
வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு
வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.
பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.
இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .
மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .
இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,








