Tag: விபத்து
பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு ம்,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.
விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.
விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு ,நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது லொரி ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொரி மீது மற்றொரு லொரி மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில், நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லொரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லொரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி ,பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் நேற்று (6) இரவு வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது
இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது
இந்தியாவின் MiG-29 போர் விமானம் விபத்துக்குள்ளானது
தெஹ்ரான், செப். 03 (எம்என்ஏ) – இந்திய விமானப் படையின் மிக்-29 போர் விமானம் ராஜஸ்தானில் வழக்கமான இரவுப் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியதில், விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பார்மரில் இந்த விபத்து நடந்துள்ளது.
விமானம் “முக்கியமான தொழில்நுட்பக் கோளாறால்” பாதிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் MiG-29 போர் விமானம் ராஜஸ்தானில் வழக்கமான இரவு பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியது, விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக போலீசார் கூறியதாக NDTV தெரிவித்துள்ளது.
பார்மரில் இந்த விபத்து நடந்துள்ளது.
விமானம் “முக்கியமான தொழில்நுட்பக் கோளாறால்” பாதிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
“பார்மர் செக்டரில் ஒரு வழக்கமான இரவுப் பயிற்சியின் போது, IAF MiG-29 ஒரு சிக்கலான தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது, விமானி வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பைலட் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் உயிர் அல்லது சொத்து சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, “விமானப்படை X இல் இடுகையிட்டது.
இரவு 10 மணியளவில் குடியிருப்பு பகுதியில் இருந்து போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஜெட் தீயில் மூழ்கியதைக் காட்டியது
பார்மர் கலெக்டர் நிஷாந்த் ஜெயின், போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர மீனா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் உள்ளனர்.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை
ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை
ஆற்றில் விபத்து இருவரை காணவில்லை ,பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜீப் மரத்தில் மோதி விபத்து
ஜீப் மரத்தில் மோதி விபத்து
ஜீப் மரத்தில் மோதி விபத்து ,தம்புல பக்குமுனை வீதியின் 14 வது மைக்கல் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அணிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் வாகனம் ஒன்று மரத்துடன் மோதி அதில் சிக்கியது இதன்போது ஜீ பலத்தை சேதமான நிலையில் காணப்படுவதுடன் அதை செலுத்தி சென்ற சாரதி படுகாயம் தற்பொழுது விற்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர் மோதிய ஜிப் பலத்தை சேதமடைந்து காணப்படுவதில் அங்கு அவை தலைகளாக கவர்ந்திருப்பதாகவே அந்த காட்சிகள் ஊடாக பார்க்க முடிகிறது.
சாரதிகளின் புறப்பட்ட செயல் காரணமாகவே வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் ஏனைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் நாள்தோறும் இந்த வீதி விபத்துக்களினால் மூவரிடம் முழுதாக இலங்கையினுடைய புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் நிவாரண வாகன விபத்துக்கள் சாரதி கள் பொறுப்பற்ற தன்மையும் நித்திர தூக்கத்தின் காரணமாகவும் ,அலட்சியப் போக்கும் காரணமாக இடம் பெறுவதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகின்றது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம் ,இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் பலியாகியும் ,ஏறத்தாழ 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டிகாரில் இருந்து திப்புருகர் நோக்கி பயணித்த தொடர்ந்து ஹோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் பொழுது நான்கு பொட்டிகள் கவிழ்ந்ததாகவும் ,அவ்வேளை அந்த பெட்டிகளில் பயணித்த மக்களில் இருவர் பலியாகி 20 பேர் காயம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
நரேந்திர மோடியின் ஆட்சியின் காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ரயில் விபத்தாகவும் இது பார்க்கப்படுகின்றது.
பாரிய ரயில் விபத்து
கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த ரயிலில் விபத்து இடம்பெற்று இங்கே குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தாங்கள் தீவிரப்படுத்தி ஆராய்ந்து வருவதாக இந்திய ரயில்வே தழைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில்களில் அதிகளவான மக்கள் நாள்தோறும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
அவர் என்ன காலப் பகுதியில் இந்த ரயில் விபத்தில் சிக்கியது அந்த மக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம் , இலங்கை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆடம்பர பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது சாரதி நடத்தினர் உள்ளிட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேருந்து விபத்துக்கள்
இலங்கையில் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் அருகில் நுழைந்த பேருந்து அங்கிருந்த தென்னை மரங்களை உடைத்து முறித்து தரித்து வீழ்த்தியுள்ள காட்சிகள் காணப்படுகின்றன.
பார்க்கும்பொழுது மிகப் பயங்கரமாக இருக்கின்றது .
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வேகமாக வாகனங்களை செலுத்துவதும் வீதி விதிமுறைகளை பின்பற்றது பயணிப்பதும் நித்திரை தூக்கத்தில் அவர்கள் பிறந்த ஓட்டி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக சமீப காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சாரதிகள் அனுபவம் உள்ள சாரதிகள் பேருந்துக்கு ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கின்ற பொழுதே அந்த பயணிகளையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது .
சாரதி ,நடத்துனர் ,சில பயணிகளுடன் காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.
ஆடம்பர பேருந்துகளை ஓட்டி செல்கின்ற இவ்வாறான சாரதிகளுக்கு தகுந்த முறை பயிற்சி அளிக்கப்பட்டு அவருக்கு விஷேட பயிற்சிகள் வழங்குவதன் ஊடாகவே இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் .
வீதி விபத்துகளில்
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் நாள்தோறும் நாளுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர் .
புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது தொடர்ந்து இந்த விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்த வீதி விபத்து தொடர்பாக தற்போது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து வந்துள்ளனர் .
பேருந்து பலத்தை சேதமான நிலையில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .
அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .
லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது
வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .
இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .
எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்
இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.
இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.
கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .
இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .
இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறி சாரதி
காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .
சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .
நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .
மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம்
பேருந்து விபத்தில் மாணவர்கள் காயம், இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அந்த பேருந்தில் பயணித்த, 13 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்கள்
மாலபே – ராஹுலபாடசாலை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உள்ளதாக ,அந்த பாடசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த பேருந்து ,நீரோடை ஒன்றை கடக்க முற்பட்ட பொழுது, ,அதற்கு அருகில் விழுந்து கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேருந்து விபத்து தொடர்பான, புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து சரிந்த நிலையில் காணப்படுகின்றது .
சாரதிகளின் அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை பின்பற்றாமயே, இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரூந்து விபத்து தொடர்பான, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக , இலங்கை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு குழுக்கள் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றன.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

அரச பேரூந்து மோதி விபத்து
அரச பேரூந்து மோதி விபத்து
அரச பேரூந்து மோதி விபத்து கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்.
நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால்,
இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Featured
விபத்துக்களில் நால்வர் பலி
வாகன விபத்துக்களில் நால்வர் பலி
விபத்துக்களில் நால்வர் பலி ,நாட்டின் சில பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த சாரதி
விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
மகுல்பொகுன, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நேற்று மாலை கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியின் சாரதி
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.
42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு – கண்டி வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Featured
யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து ,யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .
ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை
பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
சிறைச்சாலை பேருந்து விபத்து
அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .
யாழில் இவ்வாறான பேரூந்து விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,சாரதிகள் அலட்சிய போக்கின் வெளிப்பாடே என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்து .
இந்த பேரூந்து விபத்துகளினால் நாள்தோறும் பல மக்கள் பலியாகி தக்கது .
Featured
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.
கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்து
வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண் மீது கார் மோதல்
வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிகடமுல்ல, அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Featured
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
புத்தாண்டு விபத்துக்கள் 37 பேர் வைத்தியசாலையில்
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று (13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.
Featured
வாகன விபத்துக்களில் ஐவர் பலி
வாகன விபத்துக்களில் ஐவர் பலி
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்தனர். மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மொரந்துடுவ – களுத்துறை – பண்டாரகம வீதியில் தெல்கடை பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இதேவேளை, திஸ்ஸமஹாராமய கிரிந்த வீதியில் விலமுல்ல சந்திக்கு அருகாமையில், கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதியில் திடீரென பிரவேசித்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதிக்கு அருகில் இருந்த சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதி உயிரிழந்ததுடன் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று புத்தளம் குருநாகல் வீதியில் கல்குளம் பிரதேசத்தில் குருநாகலிலிருந்து புத்தளம் திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அங்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் சிறு குழந்தையும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாரதி உயிரிழந்தார்.
ஆனமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணித்தார். லொறியின் சாரதியும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நேற்று இரவு பேலியகொடை புத்தளம் வீதியில் 63 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சிலாபத்திலிருந்து மாராவில் திசை நோக்கிச் சென்ற கார் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். 54 வயதான இவர், மாதம்பே, மல்லவாகர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், அதுருகிரிய பனாகொட எம்புல்கம வீதியில் பனாகொடை சந்திக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்
வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




































